1973 பொன்னகவை மாணவர்கள் சார்பாக நாம் கல்வி கற்ற பாடசாலையின் மைதானத்தின் நிலமை அறிந்து, அதற்கு முதல் வருடம் 2022 இல் விளையாட்டுப்போட்டியின் போது என்னையும் ஒரு விருந்தினராக அழைத்த போது மாணவர்கள் ஒதுங்க இடமின்றி வெயிலில் காய்வதை கருத்தில் கொண்டு மரங்களை நாட்ட வேண்டும் என்பதை கண்டு கொண்டு எங்கள் வகுப்பு நண்பர்களிடம் தெரிவித்தேன். எங்கள் நண்பர்கள் சார்பில் அதனை செயற்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு நல்கினர். எங்கள் வகுப்பு நண்பர்களது சமூக வலைத்தள குறூப் பக்கத்தில் இச்செயற்காட்டினை பலரும் வரவேற்றார்கள். பிரான்ஸ் வாழ் நண்பன் VS Co நண்பன் சந்திரன் அதற்கு தேவையான பணம் எவ்வளவு என கேட்டார், ஒன்றரை இலட்சம் ரூபாய்கள் உடனடியாக அனுப்பி வைத்தார். 12 மரங்கள் ஆழக்கிடக்கு வெட்டி, சேதன பசளை இட்டு பாதுகாப்பு வேலி அமைத்து நன்கு வளர்ந்த 12 நிழல் தரும் மரங்கள் நாட்டினோம். மூன்று வருடங்களில் முழுமையாக வளர்ந்துள்ளன. ஒரு மரம் கூட பட்டுப்போகவில்லை. கடந்த மூன்று வருடங்களில் பராமரிப்பு செலவாக ஆறு இலட்சத்திற்கு மேற்பட்டளவில் செலவாகி உள்ளதுடன் அதற்கான முழுமையான செலவு என்னால் வளங்கப்பட்டது. 2025 இந்த ஆண்டு பெப்ரவரியில் காரைநகர் பறையகண்டி பேப்பர் கடை உரிமையாளர் திரு. சாந்தன் நடராசா அவர்கள் 25 kg யூரியா பசளைகளை தந்து உதவினார் மீண்டும் இறுதியாக அவற்றிற்கான பாத்தியிட்டு நீர் பாய்ச்சியதுடன் அன்றைய தினமே மழை பொழிந்தும் உதவியது.



