உன்னால் முடியும் தம்பி..! என்று எனக்கு உற்சாகம் கொடுக்க முகநூல் எனக்கு நிறையவே உதவியது. ஐந்தாயிரம் நண்பர்கள் எனது முகநூலில் நண்பர்களாக இருந்தாலும் ஒவ்வொரு செயற்பாடுகளின் போதும் யாரோ ஐந்து பேர்கள் என்னை நம்பிக்கையுடன் தொடர்பு கொள்வார்கள். அவர்களிடம் இருந்து பெறப்படும் உதவிகளை மீண்டும் மீண்டும் தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் தெரிவித்தும் வருவேன். அடுத்தவர்கள் செய்யும் உதவிகளிற்காகவோ, அடுத்தவர்கள் பணத்தின் மீதோ ஒரு போதும் என்பெயர் பதிக்க நினைத்தது இல்லை.



