அரசியலில் வோட்டுக்கள் தான் முக்கியமானவை. ஆனால் அந்த வோட்டுக்களை பெறவேண்டுமாயின் வாக்காளர்களிற்கு நீங்கள் பரீட்சையமானவராக இருத்தல் வேண்டும். வாக்காளருக்கு நீங்கள் பரீட்சயமானவாராக இருப்பதற்கு வாக்காளர்களின் தேவைகளை புரிந்து கொண்டு செயற்படவேண்டும். வாக்காளர்களின் தேவைகளை புரிந்து கொள்ள வேண்டுமாயின் நீங்கள் அவர்களுடன் கதைத்து பேசி உறவாட வேண்டும்.
கதைத்து பேசி உறவாட வேண்டுமாயின் நீங்கள் அவருக்கு உதவக்கூடியவராக இருத்தல் வேண்டும். இன்னொருவருக்கு உதவ வேண்டுமாயின் நீங்கள் உங்கள் செயல்பாடுகள் அல்லது பணம் ஊடாக உதவிகளை வழங்கக்கூடியவராக இருத்தல் வேண்டும்.
இன்னொருவருக்கு பணமோ அல்லது உழைப்பையோ இலவசமாக வழங்க கூடியவராக இருந்தால் கடவுள் நம்பிக்கையுடன் கூடிய தான தர்மங்களில் நம்பிக்கை உடையவராக இருத்தல் வேண்டும்.
கடவுள் நம்பிக்கையும் தான தர்மங்களில் நம்பிக்கை உடையவருமாக இருந்தால் அரசியல் என்பது கடவுளுக்கு செய்யப்படும் சேவையாக கருதப்படும்.
அதுதான் உண்மையான மக்களிற்கான அரசியல்.



