கனடாவில் கல்வியில் சாதனை படைக்கும் காரைநகர் மாணவிகள்.
கனடாவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான McMaster பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீட மாணவர்களிற்கான பட்டமளிப்பு நிகழ்வின் போது காரைநகர் பெரியமணல்/இலகடியை சேர்ந்த திரு.செல்வரத்தினம் செல்வநாயகம் – டர்முதா(சாந்தா) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரி சதுர்திகா செல்வநாயகம் விஞ்ஞானமானி பட்டத்தை பெற்றுக்கொண்டதுடன் பல்கலைக்கழகத்தின் அதிஉயர் விருதான ‘Provost’s Honour Roll’ தங்கப்பதக்க விருதினையும் பெற்றுக்கொண்டார். அத்துடன் விஞ்ஞான முதுமானி(MSc) கற்கைநெறிக்கான கல்வியையும் தொடரவுள்ளார்.
இத்தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியான நிர்த்திகா செல்வநாயகம் அவர்கள் கடந்த வருடம் Toronto பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் அதிஉயர் விருதை பெற்றிருந்ததும் தொடர்ந்து பொறியியல் துறையில் Ph.D(கலாநிதி) பட்டப்படிப்பினை மேற்கொண்டு வருவதும் இம்முகநூல் வாயிலாக எடுத்துவரப்பட்டிருந்தது.
திரு. செல்வநாயகம்- டர்முதா(சாந்தா) தம்பதிகளின் புத்திரிகள் தாயகத்தில் ஆரம்ப கல்வியை கற்று கனடாவிற்கு 2016ம் ஆண்டு இடம்பெயர்ந்து, நிர்த்திகா தனது 11ம் வகுப்பிலும், சதுர்த்திகா 7ம் வகுப்பிலும் இணைந்து கொண்டவர்கள். இவர்கள் இருவரும் ஆங்கிலத்தில் மட்டுமல்ல பிரென்ஞ் மொழியிலும் கற்றுத்தேறியதுடன் இரண்டு மொழிகளிலும் பல சாதனைகளிற்கு சொந்தக்காரர்கள். அதுமட்டுமன்றி மலேசிய தமிழ் வானொலி நடாத்திய பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட தமிழ் பேச்சு போட்டியிலும் நிர்த்திகா இரண்டாவது பரிசு பெற்றவர்.
தாயகத்தில் பிறந்து கனடாவிற்கு இடம்பெயர்ந்து குறுகிய காலத்தில் கனடாவின் கல்வித்துறையில் பல விருதுகளையும் முதுமானி(MSc) மற்றும் கலாநிதி (Ph.D) பட்டப்படிப்பினையும் தொடரும் சகோதரிகளிற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, “எனது ஊர் காரைநகர்” பெருமை கொள்கிறது.







