காரைநகர் பிரதேச சபையில் சுமூகமான முறையில் ஆட்சி அமையப்பெற்றது. 19.06.2025 வியாழக்கிழமை.
காரைநகர் பிரதேச சபையில் சுயேட்சை அணியில் வண்டில் சின்னத்தில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளை பெற்று இரண்டு ஆசனங்களை கொண்டுள்ள அணியின் வேட்பாளர் திரு.கிருஷ்ணன் கோவிந்தராஜன் தவிசாளராகவும், மான் சின்னத்தில் போட்டியிட்டு இரண்டு ஆசனங்களை பெற்றுக்கொண்ட தமிழ் மக்கள் கூட்டணி வேட்பாளர் திரு. ஆண்டிஐயா விஜயராசா உபதவிசாளராகவும், சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு இரண்டு ஆசனங்களை பெற்றுக்கொண்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய மூன்று அணிகளும் சேர்ந்து ஆறு ஆசனங்களைக்கொண்டு கூட்டாட்சி முறையில் இன்று 19.06.2025 வியாழக்கிழமை ஆட்சி அமைத்துள்ளது.
மூன்று அணிகளைச்சார்ந்தவர்களும் தலா 16 மாதங்கள் பிரதேச சபையின் தலைமைப்பொறுப்பான தவிசாளர் பதவிகளை அடுத்துவரும் நான்கு ஆண்டுகள் பகிர்ந்து கொள்ளும் வகையில் சுயேட்சை அணி, மான், சைக்கிள் என்பன ஒருமைப்பாட்டிற்கு வந்துள்ளதும் அதிகூடியளவு வாக்குகளைப்பெற்ற சுயேட்சை அணியினருக்கு முதலாவது 16 மாங்கள் தவிசாளர் பதவியும் வளங்கி கெளரவப்படுத்தப்பட்டுள்ளனர்.
06.05.2025 அன்று நடைபெற்ற தேர்தலின் போது காரைநகரில் தலா இரண்டு ஆசனங்களை ஐந்து அணிகள் பெற்றுக்கொண்ட நிலையில் காரைநகரில் கூட்டாட்சி அமைப்பது சாத்தியம் இல்லை எனவும், சாதியம், பிரதேசவாதம், கட்சி விசுவாசம் என்பவற்றை முன்வைத்து பிரிவினைவாதிகள் காரை மண்ணின் மக்களை பிரித்தாள நினைத்த போதிலும் தமிழ் கட்சிகளாக ஒன்றிணைந்து தமிழ் தேசியத்தை வலுப்பெற செய்துள்ளது காரைநகர் பிரதேச சபை.
தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக தனித்தனியாக வேறு வேறு கட்சிகளாக பிரிந்து தேர்தலில் போட்டியிட்டாலும் தமிழ் கட்சிகள் சேர்ந்து ஆட்சியமைப்பது சிங்கள கட்சிகளிற்காக வக்காலத்துவாங்கும் பலருக்கும் காரைநகர் பிரதேச சபை ஒரு பாடமாக அமைந்துள்ளது.
தொடரும் நான்கு ஆண்டுகளில் இந்த கூட்டாட்சியை கலைத்து முரண்பாடுகளை ஏற்படுத்த சாதியம், பிரதேசவாதம், வெளிநாட்டு மக்களின் தலையீடு என இல்லாத பொல்லாத வதந்திகளை பரப்பி நம்ப வைத்து குளிர்காய நினைப்பவர்கள் பிரிவினைவாதிகள் என்பதனை காரை மக்கள் இனம் கண்டு கொள்ளுங்கள். அவ்வாறான கருத்துக்களை பரப்புபவர்களிற்கு எந்த காலத்திலும் உங்கள் வாக்குகளை வளங்க முடியாதளவிற்கு சாதியம், பிரதேசவாதம் பேசுபவர்களை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
ஊழல், இலஞ்சம் இல்லாத ஆட்சி மத்தியிலும், மாகாணத்திலும், உள்ளூராட்சி மற்றும் பிரதேச சபைகளில் செயற்படுவதை தேசிய மக்கள் சக்தியின் மேன்மை தங்கிய அநுர திசநாயக்க தலைமையில் செயற்படுத்தவும் வெற்றிபெறவும் இலங்கையர்களில் ஒருவனாக வாழ்த்துவதுடன், ஜனநாயக வழியில் தமிழர்கள் தம்மை தாமே ஆட்சி செய்யவும் வழி சமைப்பார்கள் எனவும் நம்புவோமாக.






