காரைநகர் அபிவிருத்தி சபை பொதுக்கூட்டம் 28.09.205 நடைபெறவுள்ள நிலையில் விழிப்புணர்வு கலந்துரையாடல்.
21.09.2025 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் மாலை 7 மணி. சமூக வலைத்தளம் ஊடாக அனைவரும் கலந்து கொள்ளலாம்.
பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள், பொதுக்கூட்டத்தின் போது தெரிவு செய்யப்படவுள்ள அடுத்த நிர்வாக சபை உறுப்பினர்கள், கடந்த கால காரை அபிவிருத்தி சபையின் பணிகள் அதன் குறிக்கோள்கள், அதன் செயற்பாடுகள் தொடர்பாக அறிந்து கொள்ளவும், அறிந்து கொண்டு செயற்படவும், வெளிநாடுகள் வாழ் காரை மக்களின் பங்கு என்னவென்பது பற்றி அறிந்து கொள்ளவும் சமூக வலைத்தளம் ஊடான கலந்துரையாடல்.
தற்போதைய தற்காலிக நிர்வாக சபையை சேர்ந்தவர்களும் கலந்து கொள்வார்கள். இக்கலந்துரையாடல் மூலம் பெறப்படும் கருத்துக்களும் முன்மொழிவுகளும் காரைநகர் பிரதேச செயலருக்கு((DS) அறியப்படுத்தப்படும் என்பதுடன், 27.09.2025 அன்று நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தின் போது காரைநகர் அபிவிருத்தி சபையின் அனுசரணையாளர்களாக விளங்கும் வெளிநாடுகள் மற்றும் வெளியூர் காரை மக்களின் அபிலாஷைகளிற்கு அமையவும் காரைநகர் அபிவிருத்தி சபையின் எதிர்வரும் நிர்வாகம் அமையவும் வழி வகுக்கும்.
காரைநகர் அபிவிருத்தி சபையின் நலன் கருதிய அனைவரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவிக்க அழைக்கப்படுகிறார்கள். கலந்து கொள்ள விரும்புவோர் 1 416 821 8390 என்ற WhatsApp இலக்கத்திற்கு உங்கள் இலக்கத்தினை அனுப்பி வைக்கவும். நன்றி.



