காரைநகர் மக்கள் சார்பாகவும் திரு.P.S. சுதாகரன் அவர்கள் தனது படைப்பான ‘மெளனித்த பொழுது’ திரைப்படத்தினை காரை மக்களிற்கு சமர்ப்பணமாக்கியுள்ளார்

கனடா ஒன்ராரியோ மாநிலத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ நகரத்தில் அமையவுள்ள ‘தமிழர் சமூக மையம்’ தொடர்பாக கனடா வாழ் காரை மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய தருணம் இது. கனடிய ஒன்ராரியோ மாநில அரசு இதற்குரிய நிலத்தினை வளங்கியுள்ளதுடன் ஐம்பது வீதத்திற்குரிய நிதியினையும் வழங்கியுள்ளது.

காரைநகர் மக்கள் சார்பாகவும் திரு.P.S. சுதாகரன் அவர்கள் தனது படைப்பான ‘மெளனித்த பொழுது’ திரைப்படத்தினை காரை மக்களிற்கு சமர்ப்பணமாக்கியுள்ளார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 21.09.2025 அன்று திரையிடப்படுவதுடன் இதன்மூலம் பெறப்படும் நிதி முழுவதும் மேற்படி திட்டத்திற்காக கனடா வாழ் காரை மக்கள் சார்பாக வழங்கப்படவுள்ளது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்… இல்லை இல்லை மூன்று மாங்காய்… கனடாவில் காரைநகர் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ‘கனடா காரை கலாசார மன்றம்’ இயங்காத நிலையில் ஊரவர்கள் கனடாவில் காரை மக்களின் பிரதிநிதித்துவத்தை எதிலும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள் என்பதையும் இதனூடாக விளங்கிக்கொள்வோமாக.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

காரைநகர் அபிவிருத்தி சபை பொதுக்கூட்டம் 28.09.205 நடைபெறவுள்ள நிலையில் விழிப்புணர்வு கலந்துரையாடல்.

7ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாடம் சொல்லிக்கொடுக்க O/L அல்லது A/L படித்த மாணவி தேவை.

Leave a Reply