காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயம் விடுக்கும் அவசரமான அறிவித்தல்.!
இராஐகோபுர கும்பாபிஷேகம் பிற்போடப்பட்டுள்ளது.
29.04.2026 அன்று நடைபெறவிருந்த புதிய இராஜகோபுரத்திற்கான கும்பாபிஷேகம் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளது என்பதனை கோயில் அறங்காவலர் அவர்கள் அறியத்தருகின்றார். கும்பாபிஷேகத்திற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
மேலதிக தகவல்: இராஜகோபுரத்திற்கான ஐம்பொன்களாலான 9 கலசங்கள் கும்பகோணம் தமிழ்நாடு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போதிலும், தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் காரணமாக அவற்றினை கொண்டு சென்று கப்பலில் ஏற்றுவது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் 26.04.2026 க்கு பின்னரே தமிழ்நாட்டில் நிலமைகள் வழமைக்கு திரும்பும் என்பதால் கலசங்கள் இலங்கை வந்தடைவது சாத்தியமற்றதாகியுள்ளது என்பது அறிந்து கொண்டதாகும்.
ஆனாலும் 29.04.2026 அன்று வியாவில் ஐயனார் ஆலய கும்பாபிஷேக தின வருடாந்த மணவாளக்கோல திருவிழா நன்னாளாகும். அன்றைய தினம் கும்பாபிஷக தின மணவாளக்கோல சிறப்பு பூஜைகள் இடம்பெறும்.






