வணங்குகிறோம் ஐயா.
எங்களிற்காக நீங்கள் செய்த பிரார்த்தனைகள் பல…
எங்கள் பெயருடன் நட்சத்திரமும் இறைவனிடம் சமர்ப்பித்தீர்கள்…
உங்களிற்கு ஞாபக சக்தி அதிகம்…
கண்டவுடன் கடவுளிடம் சொல்லி விடுவீர்கள்…
தியாகர் என்னும் திருவருள் மூலம் சிறுவயது முதல் சிவபூஜை பயின்றவர்…
அவரிற்குப் பின் அவனருள் பெற அல்லும் பகலுமாய்
அவனோடு வாழ்ந்தீர்கள்…
சிவனருள் பெற ஊர் திரும்பும் ஒவ்வொரு பொழுதும்
திருவருளுடன் குருவருள் பெற வருவேன் ஐயா…
சிவனே என்று வணங்கும் போது என்றும் உங்கள் முகம் வந்து போகும்…
சிவனோடு ஐக்கியமாகிய எங்கள் குருவே
வணங்குகிறோம் ஐயா…
எங்கள் குரு வி.ஈஸ்வரக்குருக்கள் ஐயாவின் பிரிவால் துயருற்றுருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் கவலையினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஓம் சாந்தி!



