25.03.2026 மருதடி பிள்ளையார் கோயில் கும்பாபிஷேக தினத்தன்று இல்லறவாழ்வில் இணைந்து கொண்ட இராஜீசன் மயூரி தம்பதிகளிற்கு திருமண வாழ்த்துக்கள்.
திருமண வாழ்த்து.
நல்லறம் போற்றும் இல்லற வாழ்விலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறோம்.
25.03.2026 மருதடி பிள்ளையார் கோயில் கும்பாபிஷேக தினத்தன்று இல்லறவாழ்வில் இணைந்து கொண்ட இராஜீசன் மயூரி தம்பதிகளிற்கு திருமண வாழ்த்துக்கள்.
காரைநகர் நடுத்தெரு S.A.நாதன் -அன்னம்மா தம்பதிகளின் பூட்டியும், மருதடி பேரம்பலம் – கனகாம்பிகை தம்பதிகளின் பேத்தியும், சுப்பிரமணியம் – புனிதவதி தம்பதிகளின் மகளும் வவுனியாவில் கல்வி பயின்று O/L இல் 9A, A/L விஞ்ஞான பிரிவில் 3A சித்தி பெற்று மருத்துவபீடத்திற்கு தெரிவாகி, கொழும்பு பல்கலைக்கழகத்தில் மேற்படித்து யாழ் போதனா வைத்திய சாலையில் திறமைபெற்று, வவுனியா ஆதார வைத்தியசாலையில் நிரந்தர வைத்தியராக பணியாற்றும் மயூரி சுப்பிரமணியம் அவர்கள் 25.03.2026 அன்று திருகோணமலையை சேர்ந்த பொறியியலாளர் திரு. இராசரத்தினம் இராஜீசன் அவர்களை கரம்பற்றி இல்லற பந்தத்தில் இணைந்துள்ளார்.
மணமக்களிற்கு நல்வாழ்த்துக்களோடு காரை மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து வாழ்ந்தாலும் சுப்பிரமணியம் – புனிதவதி தம்பதிகள் கல்வியிலே தமது பிள்ளைகளை நல்வழிப்படுத்தி வைத்தியராக மிளிர வைத்துள்ளார்கள் என்பதில் காரை மண்ணும் பெருமை கொள்கிறது.
தம்பதிகளை வாழ்த்துவோமாக.




Leave a Reply
You must be logged in to post a comment.