தேசங்களை கடந்து பிறந்த நாட்டில், வளர்ந்த ஊரில், தவழ்ந்த வீட்டில் என்னோடு பழகிய நட்புக்கள், ஊரவர்கள், பண்பாளர்கள், உறவுகளிற்கு நன்றி.

பிறந்த நாளில் ஊரிற்கான உதவிகள்…!

தேசங்களை கடந்து பிறந்த நாட்டில், வளர்ந்த ஊரில், தவழ்ந்த வீட்டில் என்னோடு பழகிய நட்புக்கள், ஊரவர்கள், பண்பாளர்கள், உறவுகளிற்கு நன்றி.

‘உலகம் ஆயிரம் சொல்லட்டுமே…. எனக்கு நானே நீதிபதி..’

05.05.2026 இன்று எனது 53வது பிறந்த நாளில் முகநூல் வாயிலாக post போட்டு அன்பை பரிமாறிக்கொண்டவர்களிற்கும் அவற்றில் வாழ்த்துக்களை பதியவிட்டு மனம் குளிர வைத்த அனைவரும் உளமார்ந்த நன்றி.

வாழும் போதே வாழ வைப்போம். ஊரில் இன்னும் மனிதாபிமானம் வாழ்கிறது. நல்லது செய்ய நாலு பேர்கள் எப்போதும் தயாராக உள்ளார்கள். அவர்கள் என்னை பயன்படுத்திக்கொள்ளட்டும். அவர்களை நானும் பயன்படுத்திக்கொள்கிறேன்.

அவ்வாறாக 05.05.2026 இன்று நல்லது செய்யும் அந்த பணிக்காக அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளிற்கு நிரந்தரமாக கிடைக்கும் வகையில் சில உதவிகளை மேலதிகமாக வழங்கியுள்ளேன்.

1). புதுறோட் அம்பாள் முன்பள்ளி நிர்வாக செயற்பாடுகளிற்காக மாதாந்தம் 10,000 ரூபா வளங்கப்படுகிறது.

2). பெரியமணல் சிவகெளரி முன்பள்ளி நிர்வாக செயற்பாடுகளிற்காக மாதாந்தம் 10,000 ரூபா வளங்கப்படுகிறது.

3). மருதபுரம் ‘மருதம் படிப்பகம்’ மாலை நேர மேலதிக வகுப்புகளிற்காக மாதாந்தம் 10,000 ரூபா வளங்கப்படுகிறது.

4). வலந்தலை வடக்கு அ.மி.த.க. பாடசாலை( சடையாளி) சத்துணவு சமையலாளர் வேதனத்தை உயர்த்தி வளங்க மாதாந்தம் 5,000 ரூபா பழைய மாணவர் சங்கத்திற்கு வளங்கப்படுகிறது

5). J/47 ஊனமுற்ற ஒருவரிற்கான மாதாந்த கொடுப்பனவு 5,000 ரூபா வளங்கப்படுகிறது.

6). மாணவி ஒருவரிற்கு கல்விக்காக ரியூசன் செலவாக மாதாந்தம் 3,000 ரூபா வளங்கப்படுகிறது.

இவை அனைத்தும் 05.05.2026 இன்று முதல் 05.04.2028 வரை இரண்டு வருடங்களிற்கு தடையின்றி வங்கி மூலம் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு மாதந்தோறும் 05ம் திகதி எவ்வித தடங்கலும் இன்றி வங்கியினால் வைப்பில் இடப்படும் வகையில் standing order கொடுக்கப்பட்டுள்ளது. முதலாவது மாதப்பணம் இன்று ஏற்கவே உங்கள் கணக்கிற்கு வந்திருக்கும்.

05.05.2023 அன்று கனடாவில் கொண்டாடப்பட்ட எனது 50வது பிறந்த நாளின் போது நண்பர்கள், உறவினர்கள் வழங்கிய அன்பளிப்பிலிருந்து சொந்த பணமாக நிரந்தர வைப்பில் காரைநகரில் 50 இலட்சம் ரூபாய்கள் ஐந்து வருடங்களிற்கு வைப்பில் இடப்பட்டு அதிலிருந்து கிடைக்கப்பெறும் மாதாந்த வட்டிப்பணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நல்லதை நினைப்போம், நல்லதை செயற்படுத்துவோம். நன்றி.

More From Author

காரைநகர் வியாவில் வியாவில் ஐயனார் கோயில் இராஜகோபுர கும்பாபிஷேகம் – 01.05.2026.

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய அடியவர்கள் மற்றும் பக்தகோடிகளிற்கான பகிரங்கமான கணக்கறிக்கை.

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Archive

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Recent Comments

No comments to show.