நாள் : Monday, August 17, 2026
--:--:--
👁️
Karainagar

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய அடியவர்கள் மற்றும் பக்தகோடிகளிற்கான பகிரங்கமான கணக்கறிக்கை.

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய அடியவர்கள் மற்றும் பக்தகோடிகளிற்கான பகிரங்கமான கணக்கறிக்கை.

2025 சித்திரை மாதம்(கடந்த வருடம்) முதல் காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்காதேவி அம்பாள் ஆலயத்தின் நித்திய நைமித்திய பூசைகள் ஆதீனகர்த்தாக்களால் நியமிக்கப்பட்ட செயற்பாட்டு குழுவினால் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் மாதாந்தம் நித்திய பூசை உபயகாரர்கள் மூலமாக நிறைவேற்றப்பட்டது. கோயிலின் நிர்வாக செயற்பாடுகள் தவிர்த்து நித்திய பூசை கிரமமாகவும் நாளாந்த வழிபாடுகள் சிறப்புற நடைபெறவும் ஆதீனகர்த்தாக்களினால் நியமிக்கப்பட்ட செயற்குழு அதன் செயற்பாடுகளை வெளிப்படையாகவும் அனைவரும் அறியவும் செயற்படுத்தியுள்ளது.

2025.04.01 முதல் 2026.03.31 வரை நாளாந்த நித்திய நைமித்திய பூசைகளிற்கான உபயகாரர்கள் மூலமாக செயற்படுத்தப்பட்டதுடன் அதன் கணக்கறிக்கை ஆதீனகர்த்தாக்களால் நியமிக்கப்பட்ட செயற்குழுவினரால் வெளியிடப்படுகிறது.

இவ்வறிக்கையானது நித்திய பூசைகளிற்காக உபயகாரர்களால் வழங்கப்பட்ட வரவும் கோயிலின் நித்திய கடமைகளை நிறைவேற்ற செலவு செய்யப்பட்ட செலவுகளும் மட்டுமே என்பதை கவனத்தில் கொள்க.

திருப்பணி மற்றும் நித்திய பூசை அல்லாதவகையில் விசேட திருவிழாக்கள் மற்றும் கோயிலுக்கான காணிக்கைகள் மற்றும் ஆதினகர்த்தாக்களினால் மேற்கொள்ளப்பட்ட உண்டியல் வரவு மற்றும் செலவுகள் உள்ளடக்கப்படவில்லை என்பதும், இந்த கணக்கறிக்கை கோயிலின் மற்றைய மொத்த கணக்கறிக்கை அல்ல என்பதையும் கவனத்தில் கொள்க.

மாதாந்த நித்திய பூசைகளை கிரமமாக செயற்படுத்த மாதாந்த உபயகாரர்கள் மூலம் பெறப்பட்ட நிதிக்கான வரவும் செலவும் என்பதை மீண்டும் மீண்டும் தெளிவாக விளங்கிக்கொள்ளவும்.

மாதாந்த உபயகாரர்கள் வளங்கிய நிதியின் மொத்த வரவில் செலவுகள் போக மிகுதி 6 இலட்சம் ரூபாய்கள் வரையான நிதி ஆதீனகர்த்தாக்களிடம் கோயிலின் நிரந்தர வைப்பு நிதியில் வைப்பிலிட வழங்கப்பட்டுள்ளதுடன், 2025 சித்திரையில் கோயிலின் நிரந்தர வைப்பு நிதி 30 இலட்சம் ரூபாய்களில் இருந்து 36 இலட்சம் ரூபாய்களாக உயர்த்தப்பட்டுள்ளது என்பதும் அறிந்து கொள்ளப்படவேண்டியது.

நித்தியபூசைக்கான 2025 சித்திரை முதல் 2026 பங்குனி வரையான கீழ்வரும் கணக்கறிக்கையில் விளங்கிக்கொள்ளப்பட வேண்டிய விபரங்கள் இருந்தால் திரு.பாலகிருஸ்ணன் சிவறைஞ்சன் +94 (77) 469 0289 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் மகோற்சவ தேர்த்திருவிழா 11.08.2026 இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஆடி அமாவாசை 12.08.2026 புதன்கிழமை என்பதும் அன்றைய தினம் வியாவில் தீர்த்தோற்சவம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் மகோற்சவ தேர்த்திருவிழா 11.08.2026 இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஆடி அமாவாசை 12.08.2026...

கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ பகுதியில் சொந்தமாக கோயில் கொண்டு விளங்கும் கனடா கந்தசுவாமி ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா. 10.08.2026 திங்கள்கிழமை. நாளை செவ்வாய்கிழமை ஆடி அமாவாசை தினத்து தீர்த்தோற்சவமாகக் கொண்டு நடைபெறும் ரதோற்சவம்.

கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ பகுதியில் சொந்தமாக கோயில் கொண்டு விளங்கும் கனடா கந்தசுவாமி ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா....

‘காரைநகர் சேவையாளர் கெளரவம் 2026’ – ‘எனது ஊர் காரைநகர்’ karainews.com நடாத்தும் ஐந்தாவது சேவையாளர் கெளரவம் தொடர்பான அறிவித்தல்.

‘காரைநகர் சேவையாளர் கெளரவம் 2026’ ‘எனது ஊர் காரைநகர்’ karainews.com நடாத்தும் ஐந்தாவது சேவையாளர் கெளரவம் தொடர்பான அறிவித்தல்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605