Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

காரை மண் பெருமை கொள்ளும் கொடைவள்ளல் “சுவிஸ் நாதன்”

‘சுவிஸ் நாதன்” என அழைக்கப்படும் திரு.கதிர்காமநாதன் சுப்பிரமணியம் அவர்களின் மனிதாபிமான செயற்கரிய செயற்பாடுகள் மூலம் காரை மண் பெருமை கொள்கின்றது. கல்விப்பணி, ஆன்மீகபணி, சமுதாயபணிகளுடன் வைத்தியசுகாதார பணிகளையும் ஊக்குவிக்கும் முகமாக பல்வேறு நிதியுதவிகளையளித்து வருகின்றார்.

இந்த வாரம் கிளிநொச்சி சுகாதார வைத்தியசாலைக்கு ஐந்து கோடிக்கு மேற்பட்ட நிதியுதவி வழங்கி அவசர சிகிச்சைப்பிரிவிற்கான கட்டிடப்பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை போன்றவற்றிற்கும் கோடிகளாக அள்ளி வழங்கி சுகாதார பணியிலும் நாடு போற்றும் பணியில் ஈடுபட்டு காரை மண்ணிற்கு பெருமை சேர்த்து வருகின்றார்.

Leave a Reply