கபிலன் என்ற காந்த குரலோன், நண்பர்களிற்கெல்லாம் நண்பன், காரை மண்ணின் சிரிப்பு அழகன், களபூமி மண்ணின் செல்லப்பிள்ளை, அறிவிப்புக்களிற்கெல்லாம் அறிவாக திகழ்பவன் அவசரமாய் சென்றுவிட்டான்.
நல்லோர்களை நடுவினிலே அழைத்து அவன் நடாத்தும் நடாகத்தில் நீயும் ஒரு கதாநாயன் கபிலா..!
மருந்துகளால் மாற்ற முடியாத நோயால் மனங்களிலே பதிந்து விட்டாய்.
யாரை நோவோம், யார்க்கெடுத்து உரைப்போம் ஆண்டவா உன் அருள் இல்லையேல். உன் ஆத்மா நண்பர்களின் இதயங்களில் இரண்டறக்கலந்துள்ளது. நீ இல்லாத உலகத்தில் உன் நினைவுகளோடு நண்பர்கள்… அதில் நானும் ஒருவன்.



