கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகத்தை பயன்படுத்தி தமது மனக்கிலேசங்களிற்கு ஆறுதல் தேடும் இலாயக்கற்றவர்கள்.

கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகத்தை பயன்படுத்தி தமது மனக்கிலேசங்களிற்கு ஆறுதல் தேடும் இலாயக்கற்றவர்கள்.

28.04.2024 அன்று நடைபெற்ற கனடா காரை கலாசார மன்றத்தின் பொதுக்கூட்டத்தின் போது திரு.சிவசம்பு சிவநாதன் தலைமையாலான நிர்வாகம் தமது நிர்வாகத்தை கையளித்துச்சென்றனர்.

கடந்த காலங்களில் கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகத்தினர்கள் மற்றும் பல்வேறு நபர்களிற்கு எதிராக தனது மானம் போய்விட்டதாக மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்து காரை மக்களின் 50 ஆயிரம் டொலர்களிற்கு மேற்பட்ட நிதியை வக்கீலுக்காக விரயம் செய்ய வைத்த முத்து பொன்னம்பலம் எனப்படும் நபர் தற்போது கனடா காரை கலாசார மன்றத்தின் சார்பாக சமூக வலைத்தள தொடர்புகள் மூலம் பயன்ற்ற வீணர்களை அழைத்து உண்மைக்கு புறம்பான செய்திகளையும் தனது மனக்கிலேசங்களிற்கு ஆறுதல் தேடும் வகையிலும் பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

முத்து பொன்னம்பலம் எனப்படும் நபர் கனடா காரை கலாசார மன்றத்தினால் 2015ம் ஆண்டு காரைநகர் பாடசாலைகளிற்கு வளங்கிய ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்கள் தொலைந்து விட்டதாகவும், அந்த நிதியை அப்போதைய பதில் செயலாளராகிய நான் தீசன் திரவியநாதன், காரைநகரின் அப்போதைய பொருளாளராக பணிசெய்த திரு.நடராஜா பாரதி அவர்களிற்கு பயங்கரவாத செயல்களிற்கு பயன்படுத்த அனுப்பி உள்ளதாக கனடா Ontario ministry of non profitable organisation அமைப்பிற்கு சொந்த பெயரில் தெரியப்படுத்தியிருந்தார்.

மூன்று தடவைகள் அந்த அமைப்பிற்கு அவ்வாறு கடிதம் எழுதிய போதும் அந்த அமைப்பு கனடா காரை கலாசார மன்றத்திடம் விளக்கம் கோரியிருந்தது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாத முத்து பொன்னம்பலம் இறுதியாக அந்த பணத்தை பயங்கரவாத செயற்பாடுகளிற்காக தீசன் திரவியநாதனும், நடராஜா பாரதியும் பயன்படுத்தி உள்ளதாக தான் அச்சம் கொள்வதாக நான்காவது கடித்த்தை எழுதியிருந்தார்.

அதனை மிகவும் கடுமையாக கையாண்ட Ontario Ministry of non profitable Organisation கனடாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு உடனடியாக இலங்கையில் உள்ள திரு.நடராஜா பாரதி மீது விசாரணையை பயங்கரவாத நிதி மோசடி புலனாயவ்வு துறை ஆரம்பித்தது. அதனையடுத்து 2023 Feb மாதம் தீசன் திரவியநாதன் அழைக்கப்பட்டு ஆறு மணி நேரங்களிற்கு மேலாக விசாரணை மேற்கொண்டது.

அது மட்டுமன்றி தீசன் திரவியநாதன் தனிப்பட்டளவில் ஊர்ப்பணிகளிற்காக அனுப்பிய பல இலட்சம் ரூபாய்கள் தொடர்பாகவும் பணம் அனுப்பிய சில ரசீதுகள் அத்தாட்சி கருதி இணையத்தளத்திலும் சமூக வலைத்தளங்களிலும் எடுத்து வரப்பட்ட கனடாவில் இருந்து காசிப்பிள்ளை அன்ட் சன்ஸ் நிறுவனத்ததூடாக ரசீதுகளையும் முத்து பொன்னம்பலம் வளங்கியிருந்தார்.

கனடா காரை கலாசார மன்றத்தின் பாடசாலைகளிற்கு நிரந்தர வைப்புக்காக அனுப்பப்பட்ட ஒருகோடி இருபது இலட்சம் ரூபாய்கள் காணாமல் போய்விட்டதாகவும் பயங்கரவாத நடவடிக்கைகளிற்காகவும் பயன்படுத்தப்பட்டதாக கனடிய அரச நிறுவனத்திற்கு முத்து பொன்னம்பலம் தனது மனக்கிலேசங்களிற்கு மருந்து போட அனுப்பிய கடிதம் தீசன் திரவியநாதன் கடந்த பத்து ஆண்டுகளாக காரை மண்ணிற்கு சொந்த தேவைகளிற்காகவும் பொதுப்பணிகளிற்காகவும் அனுப்பிய பல கோடி ரூபாய்களை இலங்கை பயங்கரவாத புலனாய்வு துறையினர் ஆராய்ந்து பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

கடந்த ஆண்டு மட்டும் மூன்று தடவைகள் இலங்கை புலனாய்வு துறையினரின் விசாரணைக்காக சென்று வந்த போதிலும், வெறும் கையோடு சென்று வெறும் கையோடு திரும்பி வந்தேன். காரணம் உண்மைகளிற்கு எந்த ஆதாரங்களும் நிரூபிக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. காரணம் புலனாய்வு துறையினர் எனது கடந்த 15 ஆண்டு கால கனடிய மற்றும் இலங்கை பதிவுகள் அனைத்தும் மூன்று மிகப்பெரும் கோப்புகளில் வைத்திருந்தனர். அவர்கள் கேட்ட கேள்விகளிற்கான பதில்கள் உண்மையானவையாக இருந்த காரணத்தால் மனதில் இருந்தே என்னால் பதில்கள் வளங்கப்பட்டன.

காரைநகர் அப்புத்துரை பள்ளிக்கூட மீளதிறப்பிற்கான புனரமைப்புக்காக தீசன் திரவியநாதன் வளங்கிய நிதி, நீலிப்பந்தனை அம்பாள் நித்திய பூசைக்காக பலரிடமும் பெறப்பட்டு அனுப்பப்பட்ட நிதி, மணிவாசகர் சபை பரிசளிப்பிற்காக ஒன்பது ஆண்டுகளாக தொடர்ச்சியாக தங்கபதக்கம் வேண்டுவதற்காக அனுப்பப்பட்ட நிதி, தான தர்மங்களிற்காக மாதாந்தம் மளிகை பொருட்கள் வேண்ட தனிப்பட்ட வறியவர்கள் சிலருக்கு வழங்கிய நிதி, காரைநகர் அபிவிருத்தி சபைக்கு வழங்கிய நிதி என கடந்த பத்து ஆண்டுகளாக தீசன் திரவியநாதனால் திரு.நடராஜா பாரதி ஊடாக அனுப்பி செயற்படுத்தப்பட்ட அனைத்து செயற்பாடுகளும் புலனாய்வு துறையால் சரி பார்க்கப்பட்டது.

இதன் காரணமாக காரைநகர் தேசிய சேமிப்பு வங்கி, நடராஜா பாரதியின் வங்கி கணக்குகள் அனைத்தும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. கனடாவில் இருந்து என்னால் அனுப்பப்பட்ட ஒவ்வொரு டொலருக்கும் புலனாய்வு துறையினருக்கு கணக்கு காட்டப்பட்டது. அதன் காரணமாக காரைநகர் புதுறோட் மளிகை கடை உருமையாளர் சந்திரன், மணிவாசகர் சபை தலைவர் திரு.வே.முருகமூர்த்தி, செயலாளர் திரு.மு.சு.வேலாயுதபிள்ளை, அப்புத்துரை பாடசாலை அதிபர் திரு.நேத்திரானந்தன், விசாரணையின் போது காரைநகர் அபிவிருத்தி சபையின் தலைவராக இருந்த திரு.சிவசுப்பிரமணியம்(Banker), மற்றும் தர்மத்திற்காக மாதாந்தம் மளிகைப்பொருள் பெற்றுவந்த சில குடும்ப உறுப்பினர்கள், நீலிப்பந்தனை அம்பாள் ஆலய ஆதினகர்த்தா திரு. அருளையா ஆனந்தகுமாரசாமி, கந்தர் குண்டு புனரமைப்பிற்காக வழங்கப்பட்ட நிதிக்காக திரு.வே.சபாலிங்கம் என பல நூற்றுக்கணக்கானோர் புலனாய்வு துறையின் விசாரணையின் போது விசாரிக்கப்பட்டதுடன் எழுத்து மூலமாக என்னிடம் இருந்து பெற்றுக்கொண்ட பல இலட்ச ரூபாய்களிற்கான அத்தாட்சிகளை வழங்கியிருந்தனர்.

கனடாவில் இருந்து போக்கற்ற வகையில் தனது மனக்கிலேசங்களிற்கு ஆறுதல் தேடும் முத்து பொன்னம்பலம் பொய்யாக வழங்கிய மொட்டைக்கடிதங்களிற்கு கனடாவிலும் இலங்கையிலும் அரச அமைப்புக்கள் அதிகளவு நேரத்தை வீண்விரயம் செய்ததுடன் பொதுப்பணியில் ஈடுபட்ட பலரிற்கும் இலங்கை பயங்கரவாத புலனாய்வு துறையின் விசாரணை எப்படி இருக்கும் என அறிமுகம் செய்து வைத்தவர் எதற்குமே இலாயக்கற்ற முத்து பொன்னம்பலம்.

புலனாய்வு துறையினரின் விசாரணைகளின் ஆரம்பத்திலேயே தீசன் திரவியநாதன் ஆகிய எனது சமூக சமுதாய ஊர்ப்பணிகள் பலவும் காரை நியூஸ்.கொம் பதிவுகள் ஊடாகவும், எனது தனிப்பட்ட முநூல் வாயிலாகவும் பல வித தகவல்களை புலனாய்வு துறையினர் சேமித்து வைத்திருந்தனர்.

மூன்று தவணை விசாரணைகளின் போதும் கண்ணியமாகவும் மதிப்புடனும் புலனாய்வு துறையை சேர்ந்தவர்கள் என்னுடன் நடந்து கொண்டனர். முதலாவது நாள் விசாரணையின் போது ஒரு சில மணித்தியாலங்களின் பின்னர் புலனாய்வு துறையினரின் முழுமையான தேடல்கள் முத்து பொன்னம்பலம் பற்றியதாகவே அமைந்தது. அவரது குடும்பம், குடும்ப பின்னணி மற்றும் கனடாவில் அவருடைய செயற்பாடுகள் தொடர்பாகவே என்னிடம் கேட்கப்பட்டன.

விசாரணை முடிவில் புலனாய்வு துறையினர் சேமித்து வைத்திருந்த தகவல்களுடன் எனது வாக்கு மூலங்கள் பெரும்பாலும் ஒத்து போவனவாக இருந்த காரணத்தால் சுவாரசீகமாக விசாரணைகள் நடைபெற ஏதுவானதாக அமைந்தது. எனக்கு பிளேன் tea மற்றும் வடை பரிமாறினார்கள். கனடா பற்றியும் நான் பணியாற்றும் Costco பற்றியும் கேட்டறிந்தார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு என்னால் விசாரணை அதிகாரிகளிடம் சில கேள்விகள் கேட்க முடிந்தது.

எதற்காக இந்த விசாரணை..? நீங்களாக ஆரம்பித்தீர்களா அல்லது யாராவது முறையிட்டார்களா என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் சொன்ன பதில் ‘இது கனடாவில் இருந்து கனடிய அரசால் இலங்கை தூதரகத்திற்கு வளங்கப்பட்டு, கனடிய அரசிற்கு பதில் வளங்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்தார்கள்’

அதனையடுத்து மேசை மீதிருந்த எனது விசாரணை தொடர்பாக மூன்று பெரும் கோப்புகளை ஒரு முறை நான் பார்வையிட முடியுமா என கேட்டேன்.

அதற்கு மூன்று விசாரணை அதிகாரிகளும் ஒரு சிங்கள மொழிபெயர்ப்பாளரும் இருந்த நிலையில், இரண்டு உயர் அதிகாரிகள் அந்த இடத்தை விட்டு எழுந்து செல்லவே, மிகுதமிருந்த ஒரு அதிகாரி ‘make it fast, only 2 min’ என கூறினார். உடனடியாக எடுத்து இந்த கோப்புகளை புரட்டிய போது கனடாவில் இருந்து முத்து பொன்னம்பலம் எழுதிய கடித்த்தையும், கனடாவில் இருந்து இலங்கை தூதரகம் எழுதிய கடித்த்தையும் எனது கண்கள் ஊடாக ஐயம் திரிபற கண்டேன். அதில் குறிப்பிட்டிருந்த terrorism என்ற வார்த்தையை கண்டேன்.

முத்து பொன்னம்பலம் கனடாவில் பலரது வேலைக்கு வேட்டு வைக்கும் வகையில் கனடா காரை கலாசார மன்றத்தின் கணக்காய்வாளர் திரு.கந்தையா கனகராசா, முன்னாள் தலைவர் திரு.பரமானந்தராசா ஆகியோரது கணக்கியல் துறை licence ஐ அழிக்கும் வகையில் பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்தவர் என்பதும் கனடிய CPA நிறுவனத்திற்கு இல்லாத பொய்களை எல்லாம் கூறி மிலேச்சத்தனமான தனது வக்கிர புத்தியை வெளிப்படுத்தியிருந்தவர் என்பதும் மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மைகள்.

தன்னோடு பல்கலைக்கழகத்தில் கூடப்படித்த மன்றத்தின் முன்னாள் தலைவர் திரு.ரவி ரவீந்திரனை குற்றவாளியாக ஆக்குவதற்கு துடிப்பவர், முத்து பொன்னம்பலம் கனடா வந்த புதிதில் தனக்கு வேலையளித்த மன்றத்தின் முன்னாள் நிர்வாக சபை உறுப்பினரும் முன்னாள் காப்பாளருமான திரு. சஜி நவரட்ணம் மீது தேவையற்ற வகையில் மானநஷ்ட ஈடு வழங்கு தொடர்பவர்.

தீசன் திரவியநாதன் ஆகிய என்மீது மன்றத்தின் பதில் செயலாளராக இருந்து ஐந்தில் ஒரு பகுதியான 20,000 டொலர்களை வழங்கி பாடசாலைகளின்கான ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்களை வழங்கியதை இட்டு எல்லா வகையிலும் அதனை தவறென நிரூபிக்க துடிக்கின்ற வக்கிர எண்ணத்துடன் கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகத்தை பயன்படுத்தி ‘C’ class மக்களுடன் தொடர்புகளை கொண்டு சமூக வலைத்தள உதவியோடு வேலையற்ற வீணர்களை கிழமை தோறும் அழைத்து முகம் காட்ட முடியாதளவில் சந்தோசிக்கும் ஒரு sadist என்பதை 16.06.2024 நேற்றைய தினம் அவரால் ஒழுங்கு செய்யப்பட்டு 15 நபர்கள் வரை கலந்து கொண்ட பொறுக்கித்தனமான ஒரு கலந்துரையாடலாக அமைந்ததன் ஊடாக கண்டு கொள்ள முடிந்தது.

கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகத்தை கொண்டு செல்ல முடியாதளவில் சட்டத்திற்கு முரணான வகையில் மன்றத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்க முனையும் அனைவரும் குற்றவாழிகளே.

யார் தலைவர்..?

யார் செயலாளர்…?

யார் பொருளாளர்..?

யார் யார் நிர்வாக சபை உறுப்பினர்கள்..?

இதற்கான ஆதரமாக எங்கே எதில் உங்களது கையொப்பம் உள்ளது..!

அதுவரை மன்றத்தின் இணையத்தளம் மற்றும் இமெயில் ஊடாக வரும் அனைத்தும் ஆதாரமற்றவை. எவரும் நம்ப வேண்டியது இல்லை. அராஜகத்தின் வெளிப்பாடாக முகம் காட்ட முடியாத முத்து பொன்னம்பலம் தனது சொந்த இச்சைகளிற்கு பழிவாங்க துடிக்கும் எண்ணத்துடன் தனது மனக்கிலேசங்களிற்கு ஆறுதல் தேடும் சம்பவங்களே. நன்றி!

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி மாணவிக்கு குவியும் பாராட்டுகளும் கல்வி மற்றும் விளையாட்டு துறையில் ஊக்குவிக்க ‘எனது ஊர் காரைநகர்’ ஊடான மாதாந்த ஊக்குவிப்பு நிதியும்.

காரைநகர் அபிவிருத்தி சபையை உரசிப்பார்க்கும் தெரு நாய்கள்..!

Leave a Reply