காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி மாணவிக்கு குவியும் பாராட்டுகளும் கல்வி மற்றும் விளையாட்டு துறையில் ஊக்குவிக்க ‘எனது ஊர் காரைநகர்’ ஊடான மாதாந்த ஊக்குவிப்பு நிதியும்.
காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி மாணவி ஒருவர் மாகாண மட்ட போட்டி ஒன்றில் பங்குபற்றி காரை மண்ணிற்கும் யாழ்ற்ரன் கல்லூரிக்கும் யாழ் மாவட்டத்திற்கும் பெருமை தேடித்தந்த மாணவிக்கு வாழ்த்துக்கள்.
ஊர்ப்பணியோடு கல்விப்பணியையும் சொந்த உழைப்பில் இருந்து வெளிப்படையாக நிறைவேற்றி வரும் தீசன் திரவியநாதன் தனது 50வது பிறந்த நாளின் போது கனடாவில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வளங்கிய அன்பளிப்பு நிதியின் 50 இலட்சம் ரூபாய்களை ஊர்ப்பணிகளின் முக்கிய பணியான கல்வியை ஊக்குவிக்கும் வகையில் காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்திற்கு மாணவர்களை வரவழைக்க ஊக்குவிக்கும் வகையில் பத்து ஆண்டுகளிற்கு அதன் வட்டியை மட்டும் வழங்கும் வகையில் வைப்பு செய்திருந்த செய்தி பல தடவைகள் விபரமாகவும் விளக்கமாகவும் அறியத்தரப்பட்டிருந்ததை அனைவரும் அறிவார்கள்.(வட்டி மட்டும் என்பது கவனிக்கத்தக்கது).
அதன் மூலம் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளிற்கு மாதாந்தம் 60,000 ரூபா (வருடம் ஒன்றிற்கு 7 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்கள்) வங்கி வட்டியாக பெறப்படுகிறது

அதன் மூலம் நூலகத்தை கிரமமாக பயன்படுத்திவரும் முன்பள்ளிகள், ஆரம்ப பள்ளிகளிற்கு மாதாந்தம் 25,000 ரூபா வளங்கப்பட்டு வருகிறது.
அத்துடன் நூலகத்தின் சுற்றுப்புறம் அத்தியாவசிய தேவைகளிற்காகவும் மாதந்தோறும் இந்த வட்டிப்பணத்தின் ஒரு பகுதி வெளியில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்நிதியில் இருந்து மேலதிகமாக கிடைக்கப்பெறும் 10,000 ரூபா July 01,2024 முதல் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி மாணவியின் நிலமை அறிந்து தற்போது 7ம் தரத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு அடுத்து வரும் மூன்று ஆண்டுகளிற்கு மாதாந்தம் 10,000 ரூபா வழங்கப்படுவதற்கான வசதிகளை காரைநகர் DS அலுவலகத்தின் ஊடாக திரு. குருபரன் சுப்பிரமணியம் அவர்கள் ஊடாக ஒழுங்கு செய்து வழங்கப்படவுள்ளது.
தமிழில் தெளிவாக விளங்கப்படுத்தியுள்ளேன்,
- எவரிடமும் சேர்க்கப்பட நிதி அல்ல
- வட்டி மட்டும்
- அடுத்து வரும் 10 ஆண்டுகளிற்கு மட்டும்.)
காரைநகர் மாதடையை சேர்ந்தவரும் சீவல் தொழில் புரிந்தாலும் கல்வியின் அவசியத்தை உணர்ந்து பிள்ளைகளை படிப்பித்து வரும் பெற்றோரை ஊக்குவிக்கவும் கல்வியே காரைநகரின் மூலதனம் என்னும் வகையில் அரசையோ அரச நிதிகளையோ பெற்றுக்கொடுக்கவோ முடியாத நிலையில் அரசியல்வாதிகளும் அரசாங்கமும் கையறு நிலையில் உள்ள நிலையில் வெளிநாடுகள் வாழ் காரை மக்களும் கனடா காரை கலாசார மன்றமும் வருடந்தோறும் காரைநகரில் பத்திற்கும் மேற்பட்டவர்களிற்கு கற்றலுக்கான உதவிகளை கடந்த பத்து ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ளது.
அதன் மூலம் படித்து பல்கலைக்கழகம் சென்ற பலரும் கனடா காரை கலாசார மன்றத்தின் கடந்த நிர்வாகங்களிற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.அதே போன்று கடந்த பத்து ஆண்டுகளிற்கு மேலாக பலவித விமர்சனங்கள், மற்றும் ஊர்ப்பணிகளிற்கு மத்தியில் சொந்த பணத்தின் ஊடாகவும் கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாக பணிகள் ஊடாகவும் கடந்த பத்து ஆண்டுகளில் ஊரின் கல்விக்கான உதவிகளை செய்வற்கு சொந்த பணத்துடன் தான, தர்ம, கல்விப்பணியில் நம்பிக்கையுள்ள கைவிட்டு எண்ணக்கூடியவர்கள் சிலரின் பல மில்லியன் ரூபாய்கள் பாடசாலை மாணவர்களில் கல்வியில் ‘எனது ஊர் காரைநகர்’ தீசன் திரவியநாதன் எடுத்துக்கொண்ட இடைவிடாத முயற்சிகளின் பயனாக கல்வியை தொடர்பவர்களும், பயன் பெறும் பாடசாலைகளும் பலவுள்ளன.
‘எனது ஊர் காரைநகர்’ தீசன் திரவியநாதன் முகதாவில் கடந்த ஆண்டு 2023 சடையாளி பள்ளிக்கூடத்திற்கு 16 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்கள் கற்றல் தேவைகளிற்காக வட்டியை பெறும் வகையில் பாடசாலையின் பழைய மாணவர் சங்க கணக்கில் வைப்பில் இடப்பட்டது. அதற்காக பணம் வழங்கியவர்கள் விபரம் முழுமையாக வெளியிடப்பட்டது. அதற்குரிய பணத்தினை 16 பழைய மாணவர்கள் வழங்கியிருந்தார்கள்.
இந்த ஆண்டு சொந்த நிதியில் மல்லிகை சேவகர் கோயில் வீதி 100 மீற்றர் வரையான வீதி சொந்த செலவிலும்.
கனடாவில் நடைபெற்ற சொந்த 50வது பிறந்த நாள் விழாவின் போது பிறந்த நாளிற்கு அழைப்பின் பெயரில் வருகை தந்திருந்த உற்றார் உறவினர்கள் வழங்கிய நிதியில் 50 இலட்சம் ரூபாய்கள் மூலம் பெறப்படும் வட்டியை மட்டும் அடுத்து வரும் பத்து ஆண்டுகளிற்கு ஊரிற்கு வழங்கும் வகையிலும் எனது சொந்த பெயரில் வைப்பிலிட்டு வட்டியை மாதாந்தம் வளங்கி வருகிறேன். முதல் கட்டமாக 5 ஆண்டுகளிற்கு வைப்பில் இடப்டட்ட இந்த நிதியின் மூலம் 62,500 ரூபாய்கள் வட்டியாக கிடைக்கப்பெற்றாலும் வங்கி பிடிப்பனவுகள் போக 55,000 ரூபா வரை ஊர்ப்பணிக்காக மாதாந்தம் கிடைக்கப்பெறுகிறது
கனடாவில் Costco நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளிற்கு மேலாக பணி புரிந்து மாதாந்த சம்பளத்தின் 25% க்கும் மேலான நிதியை ஊர்ப்பணிகளிலும் அதிலும் கல்வி பணியை ஊக்குவிக்கும் வகையிலும் செயற்பட்டு வரும் ‘எனது ஊர் காரைநகர்’ தீசன் திரவியநாதன் மீது நம்பிக்கையற்ற வகையில் முட்டாள்கள் போடுகின்ற பொய் கேசுகள் அவர்களின் உண்மை நிலமையினை நன்றே பறைசாற்றி வருகிறது.
வருடத்திற்கு அங்கத்தவர் பணமாக $20 டொலர் கொடுக்க முடியாத மனநிலையில் தான் மாதாந்தம் $1000 டொலர்கள் கொடுக்கிற ஒருவரை உங்களால் நம்ப முடியாமல் உள்ளதும், முட்டை போட்ட கோழி கொக்கரிக்காமல் அடங்கி போக பாத்திருந்த கோழிக்கு சூத்து எரிவாம்(மன்னிக்கவும்).
பொய் கேசுகள், அதனை நம்ப வைக்கவும், அர்த்தமற்ற வகையில் அடிவயிறு எரிவதற்கு தண்ணி ஊத்தவும் அப்பப்ப முகம் காட்ட முடியாத வைக்கோல் பட்டறை நாய்களின் சமரசம்.
முட்டை போட்ட கோழிகள் அடங்கிப்போவதால் இந்த வைக்கோல் பட்டறை நாய்களால் ஊரிற்கோ மண்ணிற்கோ மக்களிற்கோ மன்றத்திற்கோ எந்த பயனும் ஏற்பட போவதில்லை. தங்களது ஈகோவை திருப்திப்படுத்த முகங்காட்ட முடியாத நிலையிலும் மணித்தியாலக்கணக்கில் சமூகவலைத்தளங்களில் தங்கள் தாகங்களை தீர்த்துக்கொள்கிறார்கள்.
போங்கடா போய் முதலில் இடம் பெயர்ந்த நாட்டில் உங்கட பிள்ளைகளை கடன் இல்லாமல் படிக்க வையுங்கடா… முடிந்தால் ஊரில ஒரு பிள்ளையாவது படிப்பியுங்கடா…
யாரோ நாட்டிற்கு நாலு பேர் புலியின்ரை காசிலையும் இடம்பெயர்ந்த நாட்டிலையும் எவனோ ஒருவன் கள்ள காசிலையும் கறுப்பு பணத்திலையும் சம்பாதிக்கிறவன் தான் என்று ‘எச்சில் கையாலும் காகம் திரத்தாத காரை தீவான்’ என்று ஏதோ காரணத்திற்காக சொன்னதை நிரூபிக்க பார்க்காதீர்கள்.
ஒருவேளை அதைத்தான் ஒரு சிலர் நிரூபித்தாலும் என் அப்பன் ஆனைக்கோட்டை, சுதுமலை என்றும் காரைநகரின் புகழ் பூத்த அரசியல்வாதியும் காரை இந்துவின் பிதாமகன் கலாநிதி ஆ.தியாகராசாவின் சமகாலத்தில் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களிற்கே அரசியலையும் பொருளியலையும் சேர்த்து படிப்பித்த காரை இந்துவின் முன்னாள் அதிபர் A.நடராஜா என் தாய் மாமன் என்பதையும் என் பாட்டன் S.A. நாதன் ஆசிரியர் தான் வெள்ளைக்காரனுக்கே பாடம் சொன்னவன் என்பதையும் அறிந்து கொண்டு படித்தவர்களிற்கு பாடம் புகட்டுங்கள்.
வெளிநாட்டிலை இருந்து சூட்டையும், குளிரையும் தணிக்க உல்லாச பயணிகளாக ஊரிற்கு சென்று பத்து நாள் பகல் வேஷம் போடும் பலருடன் என்னை ஒப்பிட்டு பார்த்து பத்தோடு ஒன்றாக நீங்கள் கணக்கு போடும் காரை தீவான் நான் இல்லை.
ஊரின் தொன்மையும் எனது வரலாறும் எனது DNA இன் வலிமையும் தெரிந்து தான் ஊர்ப்பணியில் என்னை அர்ப்பணித்துக்கொண்டேன். பத்தாயிரம் மைல்களிற்கு அப்பால் இருந்தாலும் DNA வாசம் இன்னும் எனக்குள்ளே வாசமாக வசந்தம் வீசிக்கொண்டிருக்கிறது.
இது என்னைப்பற்றியது. விளங்கிக்கொண்டால் நான் யார் என்பது உங்களிற்கு நன்றாக புரியும். நன்றி
தீசன் திரவியநாதன்.