கனடா காரை கலாசார மன்றம் செயலிழந்து 28.04.2025 இன்றுடன் ஒரு வருடம் முற்றுப்பெறுகின்றது.
(Please முழுவதும் வாசியுங்க… இதைக்கூட வாசித்து விளங்க முடியாத நிலையில் எல்லாம் தெரிந்து போல கதைப்பது உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கிறீர்கள் என்பது தான் யதார்த்தம்..)
1985ம் ஆண்டு காரைநகர் ஈழத்து சிதம்பரம் திருத்தொண்டர் சபையாக ஆரம்பித்து, 1989ம் ஆண்டு பெயர் மாற்றம் பெற்று ‘கனடா காரை கலாசார மன்றம்’ என 40 ஆண்டுகள் வரலாற்றை கொண்ட கனடா வாழ் காரைநகர் மக்களின் ஒற்றுமையின் சின்னமாக விளங்கிய ‘CKCA’ செயலிளந்து இன்றுடன் ஒரு வருடத்தை கடக்கிறது.
28.04.2024 அதாவது கடந்த வருடம் கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாக தலைமை பதவியை வேண்டி திரு. முத்து பொன்னம்பலம் எனப்படும் நபர் விண்ணப்பித்திருந்தார். திரு. முத்து பொன்னம்பலம் எனப்படும் நபர் கனடாவில் எவர் கண்களிலும் புலப்படாது திரைமறைவு வாழ்க்கையினை கடந்த 15 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நபர். 2021ம் ஆண்டு கனடாவில் அவருடைய சொந்த தகப்பனார் இயற்கையெய்திய போதும் தகப்பனாரின் இறுதிக்கிரியைகளின் போதும் கலந்து கொள்ளாத நிலையிலும், தனது மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள் என அனைத்தையும் துறந்து தலைமறைவு வாழ்க்கையினை கனடாவில் மேற்கொண்டு வருபவர்.
ஆனாலும் கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகத்தின் மீதும் கனடா வாழ் காரைநகர் மக்களில் 15 நபர்களிற்கும், காரைநகர் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க கனடா கிளை மீதும் கனடாவில் சிவில் வழக்கினை பதிவு செய்து “Zoom” செயலி ஊடாக நடாத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் திரு. முத்து பொன்னம்பலம் முன்வைத்த சிவில் குற்றச்சாட்டுக்கள் மற்றும் கனடா காரை கலாசார மன்றத்தை தானே சீராக்க முன்வைத்த காரணங்களை கருத்தில் கொண்டும், கனடா காரை கலாசார மன்றம் நிர்வாகத்திற்கு எதிரான குற்றச்சாட்டை கருத்தில் கொண்டும்…. கனடா காரை கலாசார மன்றத்தின் வருடாந்த நிர்வாக சபை தெரிவிற்கான பொதுக்கூட்டத்தில் திரு.முத்து பொன்னம்பலம் அவர்கள் தலைமை பதவிக்கு போட்டியிட வழங்கிய விண்ணப்பத்தின் அடிப்படையிலும் தகுதியடையவராக கருதி திரு.முத்து பொன்னம்பலம் அவர்கள் ‘Zoom’ செயலி ஊடாக குரல் பதிவினூடாக கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் 28.04.2024 அன்று மன்றத்தின் தலைவராக பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டார்.
அன்றைய தினம் பொதுக்கூட்டத்தை கூட்டியிருந்த அன்றைய 28.04.2024 வரையிலான திரு.சிவசம்பு சிவநாதன் தலைமையிலான நிர்வாக சபை அதுவரை மன்றத்தின் நிர்வாகம் எவ்வாறு இருந்ததோ அதை அவ்வாறே கையளித்துச்சென்றனர்.
கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகத்தினை எப்பேற்பட்டாவது கைப்பற்ற நினைத்த திரு. முத்து பொன்னம்பலம் மற்றும் அவரிற்கு சார்பான ஒரு சிலரும் இணைந்து மன்றத்தின் யாப்பு விதிகள் மற்றும் நிர்வாகத்தை கைமாற்றும் எந்தவித நடைமுறைகளையும் பின்பற்றாது, இன்றே இப்போதே தலைவராக திரு. முத்து பொன்னம்பலத்தை தெரிவு செய்துவிட்டோம், இப்போது இருப்பதை மட்டும் கையளித்து விட்டு செல்லுங்கள் வேறு எதுவும் தேவையில்லை என பொதுச்சபையின் அனுமதியை பெற்றதுடன், மன்றத்தின் email மற்றும் மன்றத்தின் இணையத்தளத்திற்கான password எனபவற்றை மட்டுமே பெற்றுக்கொண்டு கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகத்தை இதனூடாக மட்டும் நடாத்தலாம் என எக்காளமிட்டு பதவிகளை பெற்றுக்கொண்டனர்…!
ஆனால் கடந்த ஒரு வருடமாக திரு. முத்து பொன்னம்பம் தலைமையிலான நிர்வாகத்தினால் ஒரு செங்கல் கூட அசைக்க முடியவில்லை என்பது இன்று அனைவரிற்கும் தெளிவாகியுள்ளது. காரணம் திரு. முத்து பொன்னம்பலம் அவர்கள் தான் ஏற்கனவே 28.04.2024 க்கு முன்னர் கனடாவில் காரைநகர் மக்கள் 15 பேரிற்கு மேற்பட்டவர்களிற்கும், கனடா காரை கலாசார மன்றத்திற்கும், காரைநகர் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினருக்கும் எதிராக போட்ட சிவில் வழக்கிற்கான ஆதாரங்களை தேடியும், கற்பனையில் கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகத்தில் பெயர், ஊர், தெரியாத சிலர் தனது கோர்ட் கேசிற்கு பணம் வழங்குவதாகவும் கருதியமையும் அவர்களிற்கு எதிராகவும் வேறு ஏதாவது வழக்கு தொடரவும் மட்டுமே கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகத்தை கைப்பற்றி ஆதாதாரங்களை பெற்றுக்கொள்ள முயற்சித்தார்.
ஆனால் இன்று கனடா காரை கலாசார மன்றம் திரு. முத்து பொன்னம்பலம் ஆகிய அவரால் மன்றத்திற்கு எதிராக போடப்பட்ட வழக்கிற்கு வழங்க வேண்டிய $ 40,000 டொலர்கள்(80 இலட்சம் ரூபாய்கள்) திரு.முத்து பொன்னம்பலம் ஆகிய வழக்காளியாலும் அதே வழக்கின் எதிராளியாகவும் மன்றத்தின் தலைவராகவுள்ளவருமான அதே முத்து பொன்னம்பலம் என்பவரே பொறுப்பானவராகவும் உள்ளார்.
கனடா காரை கலாசார மன்றத்தின் மீது திரு. முத்து பொன்னம்பலம் அவர்களால் தொடரப்பட்ட வழக்குகளிற்கு கனடா வாழ் காரை மக்களால் மன்றத்தின் செயற்பாடுகளிற்கும் காரை மண்ணின் பெயரால் நடைபெறும் ‘காரை வசந்தம்’, “காரை ஒன்றுகூடல்” ஆகியவற்றிற்கும் வழங்கும் ஒரு சதம் கூட கோர்ட் கேசுகளிற்கு செல்ல கூடாது என்பதை தீசன் திரவியநாதன் ஆகிய நான் மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினராக இருந்து கண்காணித்து வந்துள்ளதுடன் 28.04.2024 அன்று திரு.சிவசம்பு சிவநாதன் அவர்களது தலைமையில் இருந்த நிர்வாகத்தில் 24.04.2024 அன்றைய மன்றத்தின் கணக்குகளின் பிரகாரம் எஞ்சிய $4,500 டொலர்கள்(10 இலட்சம்) ஊரிற்காக காரைநகர் அபிவிருத்தி சபையின் கணக்கிற்கு அனுப்பி வைக்க ஒத்தை காலில் நின்றேன்.
“காரை வசந்தம் 2023” நிகழ்வினை ஊரின் பெயரால் நடாத்திய திரு. சிவசம்பு சிவநாதன் தலைமையிலான நிர்வாக சபை, 2024.04.24 வரை அதன் மூலம் பெற்ற இலாபத்தை ஊரிற்காக அனுப்ப முடியாத நிலைமையில் காரணங்களை கூறிவந்தது. காரணம் கோர்ட் கேசுகளுற்காக பல ஆயிரம் டொலர்கள் வக்கீலுக்கு வழங்க வேண்டியுள்தாக காரணம் கூறியது. ஆனாலும் “காரை வசந்தம்” நிகழ்வு ஊரின் பெயரால் நடாத்தப்பட்டு அதன் மூலம் பெறப்படும் இலாபம் ஊரிற்கு அனுப்ப படுவதுதான் நியாயம் என்பதை நிர்வாக சபையிலே என்னோடு உதவி செயலாளராக இருந்த திரு.ஜெயச்சந்திரன் தம்பிராசா அவர்களின் உதவியோடு மட்டுமே எஞ்சிய $4,500 டொலர்களையும் ஊரிற்கான பணிகளிற்காக அனுப்புவதற்கான தீர்மானத்தை எட்ட முடிந்தது.
இன்று கனடா காரை கலாசார மன்றம் $40,000 டொலர்கள்(80 இலட்சம் ரூபாய்கள்) திரு. முத்து பொன்னம்பலம் அவர்களால் மன்றத்திற்கு எதிராக போடப்பட்ட வழக்குகளிற்கு வக்காலத்து வாங்கிய கனடிய சட்டத்தரணிக்கு வழங்க வேண்டியுள்ளதும், அதற்காக அந்த சட்டத்தரணி அதே கோர்ட்டில் தனக்கான பாக்கி நிதியினை கனடா காரை கலாசார மன்றம் தரவேண்டும் எனவும் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பதும், அதனை கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவராகவுள்ள திரு. முத்து பொன்னம்பலமும் அவருடன் இணைந்து ‘ As is ‘ அடிப்படையில் 28.04.2024 அன்று கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகத்தை தமதாக்கிக்கொண்டவர்கள் செயலிளந்துள்ளனர் என்பதும் தீசன் திரவியநாதன் சொன்னால் தான் தெரியும். இதுதான் உண்மை.
செயலிழந்துள்ள கனடா காரை கலாசார மன்றம் இப்படியே…. இல்லாமல் சென்றுவிடுமா..? என்றும்….இதற்கு தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா…! என்றும் சிந்தனை உள்ளவராக இருந்தால் நீங்கள் கேட்கும் கேள்வியும் கேட்கிறது…!
திரு. முத்து பொன்னம்பலம் அவர்களால் போடப்பட்ட வழக்குகளிற்கு அவரே இன்று எதிராளியாகவும், ஒரே வழக்கிற்கு வழக்காளியாகவும் எதிராளியாகவும் செயற்படும் அதிசய வழக்கு இது. சிவில் வழக்கில் எந்த முடிவானாலும் வழக்காளியும் எதிராளியும் சேர்ந்து எந்த முடிவிற்கும் சம்மதிக்கலாம். அந்த வகையில் திரு. முத்து பொன்னம்பலம் எனப்படும் நபரின் கைகளில் மட்டுமே தங்கியுள்ளது. இதற்கு வேறு எவரும் பொறுப்பாளிகள் அல்ல.
28.04.2025 – 28.04.2025 குரங்கின் கையில் பூமாலை.
நன்றி. வணக்கம்
தீசன் திரவியநாதன்
‘எனது ஊர் காரைநகர்’



