“காரை மண்ணின் சேவையாளர்” திரு. பு.ஶ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களிற்கு கண்ணீர் அஞ்சலி.
காரைநகர் தனியானதொரு கல்விக்கோட்டமாக ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 2016ம் ஆண்டுவரை காரைநகர் கல்விக்கோட்ட அதிகாரியாக பணியாற்றியதுடன் தனது ஓய்வு காலத்தின் பின்னர் வழக்கம்பரையில் அமைந்துள்ள திரு.ஆறுதிருமுருகன் அவர்களது பராமரிப்பில் இயங்கிவந்த முதியோர் இல்லத்தில் பணியாற்றிவந்துள்ள சுழிபுரத்தை பிறப்பிடமாக கொண்ட திரு.புண்ணியமூர்த்தி ஶ்ரீவிக்கினேஸ்வரன் அவர்கள் 18.09.2025 அன்று இயற்கை எய்தியுள்ளார்.
திரு. பு.ஶ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களிற்கு 2017.12.31 அன்று நடைபெற்ற சேவையாளர் கெளரவத்தின் போது ‘காரைநகர் மண்ணின் சேவையாளர்’ விருது வளங்கி கெளரவிக்கப்பட்டது.
திரு.பு.ஶ்ரீவிக்கினேஸ்வரன் அவர்கள் காரைநகர் கல்விக்கோட்ட அதிகாரியாக கடமையாற்றிய காலத்தில்((2015) கனடா காரை கலாசாரமன்றம் காரைநகர் ஆரம்ப பாடசாலைகளான 12 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா பத்து இலட்சம் ரூபாய்கள் வீதம் ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்களை நிரந்தர வைப்பில் இட்டு அதன் வட்டிப்பணத்தின் ஊடாக பாடசாலைகளின் அத்தியாவசிய தேவைகளை நிரந்தரமாக நிறைவேற்ற வழிவகை செய்தது.
2015.05.05 அன்று பாடசாலைகளிற்கான நிரந்தர வைப்பு வங்கியில் இடப்பட்டது. ஆனால் கனடா காரை கலாசார மன்றம் கனடாவில் அதன் அங்கத்தவர்களிற்கு தெரிவித்தது போன்று நேரடியாக பாடசாலைகளின் அபிவிருத்தி சங்க வங்கி கணக்குகளிற்கு வைப்பில் இடவில்லை. காரணம் கோட்டக்கல்வி அதிகாரியாக கடமையாற்றிய திரு.பு.ஶ்ரீவிக்கினேஸ்வரன் அவர்கள் 03.05.2025 அன்று அப்போதைய கனடா காரை கலாசாரமன்ற தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு பாடசாலைகளின் அபிவிருத்தி சங்க வங்கி கணக்கிற்கு நேரடியாக வைப்பில் இடுவதன் மூலம் அப்பணம் அரசிற்கு சொந்தமானதாகவும் அதனை மீளப்பெற முடியாது என்பதனையும், இயற்கை அழிவு அல்லது அவசர தேவை ஏற்படும் போது அப்பணத்தினை கல்விச்சபை முதற்கண் பயன்படுத்தியே ஆக வேண்டும் எனவும், நிரந்தர வைப்பில் காலாகலாத்திற்கும் பயன்படுத்த முடியாது என்பதனையும், தனது மனச்சாட்சிக்கு புறம்பாக அந்த பணத்தினை பாடசாலைகளின் அபிவிருத்தி சங்க வங்கிக்கணக்கில் வைப்பில் இடுவதை மீண்டும் ஒருமுறை சிந்திந்து செயற்படுமாறும் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையிலேயே அவசரம் அவசரமாக கனடா காரை கலாசார மன்றம் வழங்கிய ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்கள் காரைநகர் அபிவிருத்தி சபை யின் பெயரில் நிரந்தர வைப்பில் இடப்பட்டதுடன், காரைநகர் பாடசாலைகள், கனடா காரை கலாசார மன்றம் அதன் பாதுகாவலராகவும் ஆவணம் நிறைவேற்றப்பட்டது.
கனடா காரை கலாசார மன்றம் இலங்கை அரசின் கல்விச்சபைக்கு தானம் வளங்கவிருந்த ஒருகோடி இருபது இலட்சம் பாதுகாக்கப்பட்டது. அது மட்டுமன்றி 2019ம் ஆண்டு பாலாவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலை அரசினால் மூடப்பட்ட பின்னரும் அப்பாடசாலைக்காக வழங்கப்பட்ட நிரந்த வைப்பு இன்னமும் பத்திரமாக காரைநகர் அபிவிருத்தி சபையின் பெயரில் இருந்து வருகிறது. கனடா காரை கலாசார மன்றம் 2015ம் ஆண்டு வழங்கிய ஒருகோடி இருபது இலட்சம் ரூபாய்கள் இன்னமும் பத்திரமாகவும் பாடசாலைகளிற்காக அதன் வட்டிப்பணத்தினை பத்து ஆண்டுகள் கழிந்த நிலையிலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் பெயரில் இருந்து வழங்கி வருவதற்கும் இன்னும் பல தசாப்தங்களிற்கு தொடர்ந்து அதன் பலனை வளங்குவதற்கும், இன்னும் இனியும் தொடர்ந்து கனடா காரை கலாசார மன்றத்தின் நிரந்தர வைப்பாகவும் விளங்குவதற்கு 03.05.2015 அன்று திரு.பு.ஶ்ரீவிக்கினேஸ்வரன் அவர்கள் தொடர்பு கொண்டு வளங்கிய ஆலோசனையே காரணம் என்பது காலங்களை கடந்தும் விளங்கிக்கொள்ளத்தக்கது.
ஐயா திரு. ஶ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களே காரை மண்ணில் நீங்கள ஆற்றிய பணிகள் ஊடாக காரை மண்ணும் கல்விச்சமூகமும் உங்களை என்றென்றும் நினைவில் கொண்டு தங்கள் ஆத்மா ஆண்டவன் அடியில் சாந்தி அடைய பிரார்த்திப்போமாக.






