காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான கலந்துரையாடலும் கதைக்கப்பட்ட விடயங்களும்..!
(நீண்ட வரைபு, முழுதும் வாசித்தால் தான் முடிவு தெரியும்…)
21.09.2025 நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ‘எனது ஊர் காரைநகர்’ தீசன் திரவியநாதன் அவர்களால் கூட்டப்பட்ட மூன்றாவது கலந்துரையாடலில் சிந்தனையும் செயற்பாடும் நிறைந்த செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை பரிமாறியிருந்தனர்.
காரைநகர் அபிவிருத்தி சபையின் தற்போதைய தற்காலிக தலைவர் கலந்து கொண்டு தற்போதையை நிலமைகளை வெளிப்படுத்தியிருந்தமையும் தொடர்ந்து மூன்று கலந்துரையாடல்கள் மூலமும் நிறையவே அறிந்து கொள்ளப்பட வேண்டிய விடயங்களை அம்பலமாக்கியது காரைநகர் அபிவிருத்தி சபையின் இன்றைய நிலமைகளை வெளிப்படையாக்கியுள்ளது.
நேற்றைய கலந்துரையாடல் மூலம் கதைக்கப்பட்ட விடயங்களை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமாயின் முழுமையாக வாசிக்க வேண்டும். முதல் பந்தியை வாசித்து விட்டு முழுவதும் தெரிந்ததாக முட்டாள்களாக செயற்படாதீர்கள்.
காரைநகர் அபிவிருத்தி சபை கடந்த இரண்டரை ஆண்டுகளாக காரைநகர் பிரதேச செயலகத்தின் தலையீட்டுடன் தற்காலிக நிர்வாக சபையின் நிர்வாகத்தினூடாக செயற்பட்டு வந்துள்ளது.
அதன் தலைவராக திரு.விஸ்வலிங்கம் ஹம்சன்(சிவன்கோயிலடி பண்ணையாரின் மகன்) தலைமையிலும்,, காரைநகர் ஆலடி பொ.பரந்தாமன்( ஐக்கிய தேசிய கட்சி செயற்பாட்டாளர் மற்றும், ஊர்காவற்றுறை பிரதேச செயலக பணியாளர்), பொருளாளர் களபூமி பரம்தில்லைராஜா(சின்னத்தம்பி, வட்டிக்கு பணம் கொடுப்பவராக காரை மக்களால் அறியப்பட்டவர்) இவர்கள் ஊடாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக செயற்படுத்தப்பட்ட காரைநகர் அபிவிருத்தி சபை அல்லோலகல்லோலப்பட்டுள்ளது என்பது தெளிவாக கடந்த மூன்று கலந்துரையாடல்கள் மூலம் தெளிவாகியுள்ளது.
நேற்றைய தினம் இடம் பெற்ற சமூகவலைத்தளமூடான கலந்துரையாடலில் திரு.வி.ஹம்சன் உட்பட கனடா காரை கலாசார மன்றத்தின் கடந்த கால தலைவர், நிர்வாக சபை உறுப்பினர்கள், பிரித்தானியா காரை நலன்புரிச் சங்க நிர்வாக அங்கத்தவர்கள், மற்றும் ஊரிற்கான அன்றும் இன்றும் என்றும் அள்ளி வழங்கிக்கொண்டிருக்கும் காரை மண்ணின் மைந்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
28.09.2025 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நான்காவது தடவையாக நடைபெறவுள்ள காரைநகர் அபிவிருத்தி சபையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும், புதிய யாப்பு அங்கீகாரத்திற்கான பொதுக்கூட்டமும் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் எனவும், காரைநகர் அபிவிருத்தி சபையே இன்றும் என்றும் காரைநகரில் பொதுப்பணிக்கான அங்கீகாரமும் பொதுமக்களின் நன்மதிப்பை பெற்ற அமைப்பாக விளங்க வேண்டும் என்ற கொள்கையுடனும் இடம்பெயர்ந்த காரைநகர் மக்களின், மற்றும் காரைநகர் பிரதேச செயலகத்தின் நன்மதிப்பை பெற்ற நிறுவனமாக விளங்க வேண்டும் என கருதுபவர்களிற்கான அமைப்பாகவும் செயற்பட ஆதரவும் நம்பிக்கையும் கொண்டவர்கள் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.
*காரைநகர் அபிவிருத்தி சபை மீதுள்ள கோர்ட் கேஸ் நிபந்தனைகள் அற்ற வகையில் மீளப்பெற்படவேண்டும்.(பெறப்படும், ‘எனது ஊர் காரைநகர்’ அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது).
* தற்காலிக நிர்வாக சபை எக்காரணங்களையும் கூறாத நிலையில், கோரம் உடைய பொதுக்கூட்டத்தை கூட்டி 28.09.2025 அன்று நிரந்தரமான நிர்வாக சபையை அமைத்துக்கொள்ள அனைத்து வகையிலும் அங்கத்தவர்களை வரவழைத்துக்கொள்ள வேண்டும்.
* காரைநகர் அபிவிருத்தி சபை நூலகம் தொடர்பான செயற்பாடுகளில் பொதுச்சபையின் அங்கீகாரத்துடன் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
* தற்போதைய தற்காலிக நிர்வாக சபையானது நிர்வாகத்திற்குள்ளேயே முரண்பட்ட நிலமைகளில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நிர்வாகம் நடைபெற்றுள்ள நிலையில், 28.09.2025 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் நிர்வாக சபையின் பரிந்துரைகளின் பின்னரும் செயலாளர் திரு. பொ. பரந்தாமன் அவர்கள் தன்னிச்சையாக வெளியிட்டுள்ளதாலும், தலைவர் திரு.வி.ஹம்சன் அவர்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் பரிந்துரைக்கும் பட்சத்தில் வேறு விடயங்கள் தொடர்பாக தீர்மானங்களை முன்வைக்கவும், அவை தொடர்பான விவாதங்கள் நடைபெறவும் தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றவும் பொதுச்சபை அங்கீகாரம் வழங்க வேண்டும். இதற்கான காரணம் யாதெனில்…. நிர்வாக சபை அங்கீகரித்தும் செயலாளர் திரு.பொ.பரந்தாமன் அவர்கள் பொதுக்கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்பட வேண்டிய விடயங்களை நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக்கொள்ளவில்லை என்பதும், தன்னிச்சையாக நிகழ்ச்சி நிரலை தயாரித்துள்ளதுமாகும்.
* கடந்த காலங்களில் காரைநகர் அபிவிருத்தி சபையின் நிர்வாக அங்கத்தவர்கள் தெரிவில்…. காரைநகர் பிரதேசகளின் அடிப்படையில் பிரதேச அடிப்படையில், குறிச்சி அடிப்படையில், சமூக சாதி அடிப்படையில் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள் ஆனால் 28.09.2025 நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்படவுள்ள நிர்வாக சபை தெரிவுகளின் போது ஆர்வமுள்ளவர்கள் எவராகினும் தாமே முன்வந்து தங்கள் பெயரை நிர்வாக சபை பதவிகளிற்காக தெரிவின் போது முன்வைக்க வேண்டும். அவர்களை பொதுச்சபை முடிவு செய்து கொள்ளும்.
* இன்னும் ஒருவர், பிரதேச அடிப்படையில் அல்லது சாதிய அடிப்படையில் ஒருவரை பிரேரிக்கவோ அன்றி முற்கொண்டு வரவோ வேண்டிய தேவை இல்லை. தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாக சபை உறுப்பினராக யார் வேண்டுமானாலும் யாரையும் முற்கொண்டு வரலாம், வரவேண்டும்.
* வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்கள் ‘Police clearance’ எடுத்து சமர்ப்பிக்ககூடியவர்கள் எவராகினும் காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாகத்தில் பங்கெடுக்கலாம்.
* காரைநகர் அபிவிருத்தி சபையின் நிர்வாகம் பொதுக்கூட்டங்களை கூட்டும் பொழுது சுமூகமான மற்றும் பொழுது போக்கான, நல்லதொரு சூழ்நிலையினை ஏற்படுத்தும் வகையில் பொதுக்கூட்டத்தின் போது விருந்துபசாரம் மற்றும் மதிப்பளிக்கும் வகையில் நடந்து கொள்ளும் வகையில் அமைப்பின் நிதிச்செயற்பாடுகள் மூலம் நிதி செலவிடப்படவேண்டும். இதனை அறிவுறுத்தும் வகையில் ‘எனது ஊர் காரைநகர்’ தீசன் திரவியநாதன் மூலமாக 28.09.2025 அன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தின் போது மதிய முழுநேர சமைத்த உனவு மதியம் 12.30 மணியளவில் வழங்கப்படும் எனவும், பொதுக்கூட்டம் அதற்கு மேலும் நடைபெற வேண்டுமாயின் மதிய உணவின் பின் தெடர்ந்து நடைபெறவும் ஆவண செய்யப்படுவதாகவும் அதனை தற்போதைய தற்காலிக நிர்வாக சபை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
* உணவு மற்றும் வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பபடுவதால் அல்லது அதற்கான அனுசரணை வளங்குபவர்களிற்கு சார்பாக கதைக்கவோ அல்லது அதற்காகத்தான் அந்த வசதிகள் என்பதையோ பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் ஒருபோதும் கடைப்பிடிக்க கூடாது. நாகரீகமும் நல்லெண்ணமும் கருதி வளங்கப்படும் சாதாரண காரைநகர் மக்களின் நல்லெண்ணமாக கருதவேண்டும்.
* காரைநகர் அபிவிருத்தி சபையின் ஆயுட்கால அங்கத்தவர்கள் மற்றும் 2024ம் ஆண்டு அங்கத்தவர்கள்(கவனிக்க 2024 கடந்த வருடம்) மட்டும் கலந்து கொள்ள தகுதி பெற்றவர்களாக கருதப்படும் 96 அங்கத்தவர்கள் மட்டும் கலந்து கொண்டு இதுவரை காலமும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பின்னடைவை சந்தித்தித்கொண்டிருக்கும் காரைநகர் அபிவிருத்தி சபையின் வளர்ச்சியை முன்னோக்கி செயற்பட வைக்கும் பணியில் 96 அங்கத்தவர்களின் வருகையில் தங்கி உள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்டவர்களின் காரை மண்ணிற்கான உதவிகளும் அவர்களின் நல்லெண்ணமும் 28.09.2025 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பொதுகூட்டத்தின் மூலமும், அங்கே தெரிவாக போகும் நிரந்தரமான நிர்வாக சபையினையும் சார்ந்து உள்ளது.
* 28.09.2025 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபையின் பொதுக்கூட்டத்தில் தகுதி வாய்ந்த அங்கத்தவர்கள் எக்காரணம் கொண்டும் சமூகமளிக்க தவறும் பட்சத்தில் வெளிநாடுகள் வாழ் காரை மக்கள் ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்டவர்களிடம் ஊரிற்கான, மக்களிற்கன, மண்ணிற்கான உதவிகளை எதிர்வரும் நாட்களில் கோருவதற்கு தகுதியற்றவர்கள். தமக்கான, தமது சொந்த நலன்களிற்காக ஊர்ப்பணி என்னும் போர்வையில் அரசியலும், வாக்குகளிற்காக ஏதோ ஒரு கட்சிகளிற்காக உங்கள் வருமானங்களிற்காக ஊரை அடகு வைப்பவர்களாக கருதப்படுவீர்கள்.
*கடந்த மூன்று கலந்துரையாடல்கள் மூலமாக தெளிவாகவும், சுயநலமின்றியும் ‘ எனது ஊர் காரைநகர்’ எல்லோரையும் கலந்து கொள்ள அனுமதித்தும் கலந்துரையாடலை நடாத்தியுள்ளது. அவர்களது கருத்துக்கள் ஊர்ப்பற்றும் காரைநகர் அபிவிருத்தி சபையின் கடந்த கால பணிகள் மற்றும் அந்த அமைப்பின் முக்கியத்துவம் அறிந்த அனைவராலும் அறியப்படுத்தப்பட்டன.
28.09.2025 காரைநகர் அபிவிருத்தி சபை மிகச்சிறந்த செயலாற்றலும் நிர்வாக திறமையும் கொண்டு கொண்டு தெரிவு செய்யப்படவும் காரை மக்களின் நல்லாதரவை பெறவும் வாழ்த்தி இப்பெரும் புரிதலை நிறைவு செய்து கொள்கிறது. இவை தொடர்பாகவே கடந்த மூன்று கலந்துரையாடல்களும் கடந்த மூன்று மாதங்களாக மாதந்தோறும் நடாத்தப்பட்டன. கலந்து கொண்டவர்களும் கருத்துக்களை வழங்கியவர்களும் நன்கு அறிவார்கள். இவை தவிர ‘ எனது ஊர் காரைநகர்’ மற்றும் தீசன் திரவியநாதன் ஆகிய எனக்கும் காரைநகர் அபிவிருத்தி சபை அமைப்பிற்கும் தனிப்பட்ட வேறு எந்த விதமான அபிலாஷைகளும் இல்லை என்பதும் சுயநல நோக்கம் கருதி எள்ளளவும் செயற்படவில்லை என்பதனையும் தெளிவுற விளங்கும் வகையில் தெளிவுபடுத்தியுள்ளேன்.
நன்றி.



