பாலஸ்தாபனம் செய்யப்பட் கோயிலில் திருவிழா நடக்குமா ..? என்று கேட்கிற சைவர்கள் இருக்கும் வரை கும்பாபிஷேகம் நடப்பதற்கு வாய்ப்பில்லை ராஜா….!

பாலஸ்தாபனம் செய்யப்பட் கோயிலில் திருவிழா நடக்குமா ..? என்று கேட்கிற சைவர்கள் இருக்கும் வரை கும்பாபிஷேகம் நடப்பதற்கு வாய்ப்பில்லை ராஜா….!

தலைக்கு மேல வெள்ளம் போன பின்பு சாண் ஏறினால் தான் என்ன முழம் ஏறினால் தான் என்ன..!

மார்கழி அண்மித்தால் மழையும் குளிரும் சேர்ந்து வருவதைப்போல் சிவசிந்தனையும் காரைநகர் மக்களிற்கு சேர்ந்து வரும். தை பிறக்க குளிர் விட்டு போய்விடும்.

‘நாய் சாக்கிழுத்த கதை’ யாக தொடரும் எங்களூர் யதார்த்தம்.

இதற்கு மேலும் வாசிக்க போகிறீர்களா… வாங்கோ அந்த நாயின் சாக்கிழுத்த கதை சொல்லுறன்.

ஒரு ஊரில ஒரு நாய் இருந்துச்சாம். குளிர்காலம் தொடங்கினால் அந்த நாய்க்கு இரவில சூடாக கதகதப்பாக படுத்துறங்க ஒரு சாக்கு தேவைப்பட்டதாம். இரவு வந்ததும் சாக்கு இல்லையே என்று ஏங்குமாம். விடிந்ததும் முதல் வேலையாக நாளைக்கு எங்காவது சென்று ஒரு சாக்கு இழுத்துக்கொண்டு வரவேணும் எண்டு சபதம் போடுமாம்.

பிறகு விடிந்ததும் நாய் அதை மறந்து தன்ரை வேலையில் மூழ்கிவிடும். மீண்டும் இரவு வரும். சாக்குக்காக சபதம் போடும். விடிந்ததும் மறந்துவிடும். கடைசி வரை அந்த நாய் சாக்கு இழுத்ததே இல்லையாம்.

கனடாவில ஒரு றேடியோவில கேட்டது இந்த கதை. இது தான் ‘நாய் சாக்கிழுத்த கதை’

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

அறிவுக்கும் அரசியலுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிஞர்கள் அறிந்து கொள்வார்கள். அதனால் தான் அரச உதவிகள் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படுகின்றன. அதனால் தான் வளர்ச்சியடைந்த நாடுகள் ஒவ்வொரு ஐந்து வருடங்களிற்கு ஒரு முறை சனத்தொகை புள்ளிவிபரங்களை கணக்கிடுகின்றன.

திரு தம்பையா உருத்திரலிங்கம்(உருத்தி) | 23.11.2025

Leave a Reply