அறிவுக்கும் அரசியலுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிஞர்கள் அறிந்து கொள்வார்கள். அதனால் தான் அரச உதவிகள் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படுகின்றன. அதனால் தான் வளர்ச்சியடைந்த நாடுகள் ஒவ்வொரு ஐந்து வருடங்களிற்கு ஒரு முறை சனத்தொகை புள்ளிவிபரங்களை கணக்கிடுகின்றன.
இலங்கையில் மொத்த சனத்தொகை புள்ளிவிபரங்கள் கணக்கிடப்படாது விட்டாலும், தற்போது அரசாங்க அதிபர் பணிமணைகள், கல்விக்கோட்டங்கள் ஊடாக அந்தந்ந பிரதேச மக்கள் கணக்கெடுப்புக்கள் கூடியளவில் ஒரு பிரதேசத்தில் உள்ள பல புள்ளிவிபரங்களை வெளிக்கொண்டு வந்து விடுகின்றன.
இதோ காரைநகரின் முக்கியமான ஒரு கணக்கெடுப்பு. 2023 நவம்பர் இறுதியிலானது.
அறிவியல் சார்ந்து, முன்னுரிமை அடிப்படை சார்ந்து அரசினாலும் ஊர்ப்பற்றுள்ள அறிஞர்களினாலும் முன்னெடுக்கப்படும் நலத்திட்டங்கள் ஏன் எதற்காக சில குறிப்பிட்ட பிரதேசங்களை முன்னிறுத்தி வளங்கப்படுகின்றன என்பதற்கு ஜனநாயகரீதியான விளக்கத்தை புரிந்து கொள்ள இந்த புள்ளிவிபரங்கள் தெளிவுபடுத்தலாம்.
எல்லாவற்றிற்கும் பிரதேசவாதம், சாதியம் போன்ற சமூகத்தை பிரித்து ஆழ முயற்சிப்பவர்கள் சனத்தொகை அடர்த்தி, மாணவர் எண்ணிக்கை என்பவற்றையும் கருத்தில் கொண்டால் யதார்த்தம் புரியலாம்.






