கண்ணீர் அஞ்சலி!
காரைநகர் முல்லைப்பிலவை பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்தவருமான திரு தம்பையா உருத்திரலிங்கம்(உருத்தி) அவர்களின் திடீர் மரணச்செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம். 23.11.2025 கடந்த ஞாயிறு அன்று முகநூலில் அவருடைய புகைப்படத்தை பார்த்து, பிறந்த நாள் வாழ்த்து போலும் என நினைத்த மறுகணமே நம்ப மறுத்தது அந்த செய்தியை.
உருத்தி அவர்கள் கனடா காரை கலாசார மன்றத்தின் பல நிர்வாக சபையில் நிர்வாக அங்கத்தவராக விளங்கி கனடா காரை கலாசார மன்றத்தின் வளர்ச்சிக்கு பலம் சேர்த்தவர்.
பாடசாலைகளிற்கான நிரந்தர வைப்பு நிதி சேகரிப்பின் போது எம்மோடு அல்லும் பகலும் சேர்ந்து பயணித்தவர். தனது ஊரிற்கான ஆதரவை தனது அமைதியான ஆதரவால் நல்கியவர். அன்னாரது இழப்பு நண்பர்களால் நம்பமுடியாத பேரிழப்பாகும். அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை கனடா காரை கலாசார மன்றத்தின் முன்னாள் நிர்வாக சபை உறுப்பினர் என்கிற ரீதியில் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.



