காரைநகர் நீலிப்பந்தனையில் மக்கள் வெள்ளத்திலும் 70 ஆண்டு கால பழமையிலும் வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர்.
நீலிப்பந்தனை கிராமம் கடந்த ஐம்பது ஆண்டுகளிற்கு மேலாக மாரி காலங்களில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதுடன், மழை காலங்களில் நீலிப்பந்தனை ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டு வருவதுடன் இரண்டு வீதிகள் பயன்படுத்த முடியாதளவில்(மருதடி – நீலிப்பந்தனை, புதுறோட் – நீலிப்பந்தனை) மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டும் வருகிறார்கள்.
நேற்றைய தினம் 26.11.2025 புதன்கிழமை மக்களின் வேண்டுகோளை ஏற்று காரைநகர் பிரதேச செயலர் செல்வி.ந. ரஞ்சனா மற்றும் பிரதேச சபை தவிசாளர் திரு.K.கோவிந்தராஜன், இப்பகுதி பிரதேச சபை உறுப்பினர் திரு.சிவகுமார்( ஆனந்தன்), கிராமசேவகர் திரு.மயூரன் ஆகியோர் வெள்ளம் சூழ்ந்த இப்பகுதிகளை சென்று பார்வையிட்டனர்.
காரைநகர் மக்களால் அதிகூடிய வாக்குகளை வளங்கி பிரதேச சபை தவிசாளராக தெரிவாகியுள்ள திரு.K.கோவிந்தராஜன் பார்வையிட்ட பின்னர் இப்பகுதி மக்களிற்கு கருத்து தெரிவிக்கையில் ‘ இப்பகுதியின் வீதி புனரமைப்பிற்காக வீதி செப்பனிடும் பணி தமது சபையால் முன்வைக்கப்படவில்லையெனவும் காரணம் கடந்த பிரதேச சபை நிர்வாகத்திலும், தற்போது தனது தலைமையிலான பிரதேச சபை நிர்வாகத்திலும் இவ்வீதிகளை புனரமைக்க கூடாது எனவும் 70 ஆண்டு கால பழமையை பேணும் வகையில் கேணியில் வெள்ள நீர் நிரம்புவதும், வெட்டையில் வெள்ளம் நிற்பதுவும், வீதிகள் தடைப்படுவதும் சாதாரண நிகழ்வு தான் என்றும் அதைப்பற்றி பிரதேச சபை கருத்தில் கொள்ளக்கூடாது எனவும் தங்களாலேயே அதற்குரிய தீர்வை காண முடியும் எனவும் பிரதேச சபை செயலாளருக்கு கடந்த காலங்களில் குறிப்பிட்ட ஒரு சில நபர்களால் எழுத்து மூலமாக பிட்டிசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
2010ம் ஆண்டு முதல் அதிகூடியளவில் கவனம் செலுத்தப்பட்டளவில் அப்போதைய தவிசாளர் அமரர் விஜயதர்மா கேதீஸ்வரதாசன் தலைமையில் இப்பகுதி மக்களை கூட்டி வீதி புனரமைப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம் கூட்டப்பட்டது, பின்னர் 2023 இல் தவிசாளராக கடமையாற்றிய திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் வந்து பார்வையிட்டு சென்றனர், இதோ இப்போது தற்போதைய பிரதேச சபை தவிசாளரும் வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர். வெளிநாடுகளில் வசித்தாலும் இப்பகுதி போக்குவரத்தின் மீதும் வளர்ரச்சியிலும் அக்கறையும் ஆர்வமும் கொண்டுள்ள ஒரு சிலர் தொடர்ந்து அரச மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தும் அதற்குரிய திட்டங்களை முன்மொழிந்தும் பிரதேச சபையுடன் இணைந்து நிதியுதவிகளை வழங்க முன்வந்தாலும் தனிப்பட்ட ஒரு சில குடும்பங்களும் ஒரு சிலரும் தாம் வெள்ளத்திலேயே வாழப்போவதாகவும் 70 ஆண்டுகால பழமையிலேயே வாழப்போவதாகவும் பழமையை மட்டுமே காரணமாக கூறி 21ம் நூற்றாண்டின் வளர்ச்சிக்கு தடையாக இருந்து வருகிறார்கள்.
2010ம் ஆண்டு முதல் எந்தவிதமான முன்மொழிவுகளையோ அல்லது மக்களின் போக்குவரத்திற்கு நடைமுறைக்கு சாத்தியமான எந்தவித திட்டங்களையும் முன்வைக்க முடியாதளவில் தமது சொந்த இயலாமைகளின் வெளிபாடுகளினால் நீலிப்பந்தனை வாழ் மக்களின் மற்றும் இதனூடாக போக்குவரத்தில் ஈடுபடும் பல நூற்றுக்கணக்கான மக்களிற்கு காலம் காலமாக அசெளகரியங்களை உண்டாக்கி வருகின்றனர்.
விளங்கமும் சொந்த அறிவும் சிந்தனையும் இல்லாத பலரும் காரைநகர் பிரதேச சபையினையும் அரச இயந்திரங்களையும் காலம் காலமாக குறை கூறி வருகிறார்கள்.
அரசியல் கட்சி பேதமின்றி, சுயேட்சை குழு அமைப்பு பேதமின்றி காரைநகர் பிரதேச சபையின் ஊடாக நீலிப்பந்தனை வெள்ள பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சித்த போதெல்லாம் பிரதேச சபை தவிசாளர் உட்பட எமது பிரதேச வெற்றி பெற்ற உறுப்பினர்கள் வரை இந்த வீதிகளை செப்பனிட முன்வந்தாலும் ஒருசிலரது செயற்பாடுகளால் மட்டுமே நீலிப்பந்தனை இன்றும் இப்போதும் இந்த வெள்ளத்தில் 70 ஆண்டு கால பழமையில் வாழ்வதற்கு காரணமாகும்.
‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக 2010ம் ஆண்டு முதல் இப்பகுதியை சேர்ந்த நூறிற்கும் மேற்பட்ட நல்லுள்ளங்களை உள்ளடக்கி ஒரு சமூக வலைத்தளம் உருவாக்கப்பட்டதுடன் அவர்கள் அனைவரும் எம்மீதுள்ள நம்பிக்கை, நாணயம், செயலும் செயற்பாடுகள் மீதும் கொண்டுள்ள அபரிமிதமான நம்பிக்கை காரணமாக திட்டத்தை செயற்படுத்த கோடி கோடியாகவும் கொட்டிக்கொடுக்க தயாராகவுள்ளனர் எனவும், நீலிப்பந்தனை அழகு கொழிக்கும் பிரதேசமாக விளங்கும் எனவும் நன்றாகவே தெரிந்து கொண்டதன் காரணமாகவே பழமையை காரணம் காட்டி 100 ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் இப்பகுதியை வைத்திருக்க விதண்டாவாதம் பூண்டிருக்கிறார்கள்.
விதண்டாவாதத்திற்கு உதாரணமாக இதோ இந்த காட்சிகள் சாட்சியம் ஆகலாம்.
இந்த கட்டிடம் இடிக்கப்படகூடாது, இதனை இப்படியே வைத்து புனரமைக்க வேண்டும்….அரைவாசி இடிந்து விழுந்து விட்டது, மீதி உழுத்துப்போய்விட்டது… நல்லா இருக்கிறதடா உங்க விதண்டாவாதம்..









