காரை மண்ணின் சேவையாளர்கள். கெளரவம் பெறுகிறார்கள். 2025.01.05 அன்று நான்காவது சேவையாளர் கெளரவ நிகழ்வின் போது நான்கு சேவையாளர்கள் கெளரவம் பெற்றார்கள்.
1. கருணையுடன் கூடிய கல்விப்பணி: திரு.சிதம்பரப்பிள்ளை நேசேந்திரம்
2. சமூக அக்கறையுடன் கூடிய பொதுப்பணி: திரு.கந்தசாமி இராஜசந்திரன்
3. மனித நேயத்துடன் மருத்துவம்: Dr.S.சுவாமிநாதன்
4. அனைவரும் விளங்கும் வகையில் ஆன்மீகம்: சைவமணி செல்வரத்தினம் சண்முகரத்தினம்
‘எனது ஊர் காரைநகர்’ முன்னெடுக்கும் வாழும் போதே வாழ்த்துவோம் சேவையாளர் கெளரவம் 05.01.2025 அன்று காரைநகர் New Star கல்வி நிலையத்தில் நடைபெற்றது.
2024 இல் காரைநகர் பாடசாலைகளில் கல்வியில், விளையாட்டில், போட்டிகளில் வலய, மாவட்ட, மாகாண வலய நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற 50 பாடசாலை மாணவர்களிற்கு கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கி ஊக்குவிக்கப்பட்டதுடன், ‘காரைநகர் அபிவிருத்தி சபை’ பற்றிய கட்டுரை எழுதும் போட்டியில் முதல் பரிசாக 25,000 ரூபா வளங்கியும் கெளரவிக்கப்பட்டார்கள்.
புகைப்படங்கள் சொல்லும் மிகுதி விளக்கம்.
















































































