சொந்த புத்தி இல்லாதவன் ஒருவன் கனடாவில் பாம்பு புத்தில் வாழும் கதை.
‘ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது..’
பாடப்புத்தகங்களை மட்டும் பாடமாக்கி பரீட்சை பேப்பரில் வாந்தி எடுத்துப்போட்டு வந்த ஒருவன் கனடாவில் புற்றில் வாழ்கிறான். அவனால் அவன் படித்த படிப்பினால் எவருக்கும் பிரயோசனம் ஏற்பட்டதில்லை.
தாலி வித்து படிப்பித்த தாயை கோர்ட்டிலே நிறுத்தினான். உயிர் கொடுத்த தந்தையை உதாசீனம் செய்து ‘கொள்ளியும் போட மறுத்தான்’.
உடன் பிறந்தவர்களை அச்சுறுத்தி அடிபணிய வைத்தான். கட்டிய மனைவியை ஆசை தீர்ந்த பின் அறுத்தெறிந்தான். பெற்ற பிள்ளைகளை நடுத்தெருவில் விட்டெறிந்தான்.
இவனால் ஆனது என எதுவுமே இல்லை. மனித குலத்திற்கே இழுக்கான ஒருவன், வெண்சங்கில் விளைவது எல்லாம் ‘முத்து’ அல்ல சீழ் பிடித்த குஷ்டம் என்பதை உணத்துகின்றான்.
பெற்றவர்களிற்கு பொறுக்கியானவன், குடும்பத்திற்கு அவமானமானவன், ஊரிற்கு கேடானவன், உலகத்திற்கு தேவையற்றவன். அவன் எந்த மறு கொண்ட முத்தாக இருந்தாலும் வெளியில உலா வந்தால் அடித்து உலையில் போட்டு, வதக்கி வறுத்தெடுத்து விடுவார்கள் என்று கனடாவில் நாகம் வாழும் புத்தில் யாரும் அறியாமல் இருபது வருடமாக வாழ்ந்து வருகிறான்.
கண்டால் வரச்சொல்லுங்கள். காத்திருக்கிறேன்.



