நீலி அம்பாளின் புதுமையும் கோடை மழையும்…
17.05.2025 நீலிப்பந்தனை அம்பாளின் வேள்வி உற்சவம். கொழுத்தும் வெயில் சுட்டெரிக்கும் காலத்தில் இவ்வருடம் சீரான இடைவெளியில் போதுமான மழை பொழிந்து ஜீவராசிகளிற்கு அருள்பாலித்து வருகிறாள் துர்கை அம்பாள் என்பதை இன்று காண முடிந்தது. விடிந்தால் பொங்கல் வேள்வி… அதிகாலை 5 மணிக்கு கொட்ட தொடங்கிய மழை 6 மணியளவில் ஓய்ந்தது. ஒரு மணி நேரம் மட்டும் பெய்த மழை அத்துடன் நின்று போனது. பொங்கல் அடுப்பில் மட்டும் தணல் எரிந்தது, பூமி குளிர்ந்தது. வேள்வி நடந்தது.
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று முதியோர்கள் சொன்ன வார்த்தை என்ன பொய்யா..!



