காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளிற்கான அறிவித்தல்.!
(முழுமையாக வாசிப்பதால் மட்டுமே விளங்கிக்கொள்ள முடியும்.)
யாழ்ற்ரன் கல்லூரி 7 மாணவர்கள் மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வு ஒன்றிற்காக கொழும்பிற்கு செல்ல நீலங்காடு கடற்றொழிலாளர் சங்கத்தின் ஊடாக நிதியுதவி வழங்க முன்வருகிறது ‘எனது ஊர் காரைநகர்’ கொழும்பு சென்று திரும்புவதற்கான பயண செலவு மற்றும் இரண்டு நாள் உணவு செலவு என்பவற்றிற்காக மாணவர் ஒருவரிற்கு 8,000 ரூபா தேவைப்படுகிறது.
காரைநகர் நீலங்காடு, மருதபுரம், வியாவில், செம்பாடு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த ஏழு மாணவ மாணவிகள் மகாண மட்ட நிகழ்வில் கலந்து கொள்ளவும் அதனூடாக வெளிகள பயிற்சிகளை பெற்று விளையாட்டு துறையில் பிரகாசித்து வரும் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்க தயாராக உள்ளனர். ஆனாலும் அதற்கான நிதியுதவிகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையறிந்து ‘எனது ஊர் காரைநகர்’ அதற்கான உதவியை நீலங்காடு கடற்றொழிலாளர் சங்கத்தின் ஊடாக வழங்கி யாழ்ற்றன் கல்லூரி மாணவர்களை கொழும்பில் நடைபெறவுள்ள மெய்வல்லுனர் போட்டியில் பங்கேற்க பெற்றோர் மற்றும் பாடசாலை பயிற்சி ஆசிரிருடன் சேர்ந்து முன்வந்துள்ளது.
ஒரு மாணவருக்கு 8,000 ரூபா(35 CDN $) வீதம் மொத்தம் 56,000 ரூபா வழங்கப்படவேண்டியுள்ளது. பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் இந்த கைங்கரியத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Sept 30, Oct 01, Oct 02 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்க Sept 29ம் திகதி மாணவர்கள் கொழும்பிற்கு புறப்பட தயாராகவுள்ளனர். நீலங்காடு, மருதபுரம், வியாவில், செம்பாடு ஆகிய பிரதேசங்களில் வதியும் மாணவர்களின் நிலவரம் அறிந்தும், அவர்களுடைய விளையாட்டு திறன் அறிந்தும் வழங்கப்படும் உதவியில் பங்காளராக இணைந்து கொள்ளுங்கள். அவர்களை விளையாட்டு துறையில் பயிற்சியளிக்கும் பயிற்றுவிப்பாளரிற்கு ஊக்கமளிப்போம்.
யாழ்ற்ரன் கல்லூரியில் காலை வேளைகளில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடும் மேற்படி பிரதேசங்களை சேர்ந்த 40 வரையான மாணவ மாணவிகளிற்கு காலையில் சத்துணவு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. மாதம் ஒன்றிற்கு காலை சத்துணவிற்காக 25,000 ரூபா வீதம் 10 மாதங்களிற்கு வழங்கவும் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பாடசாலை நிர்வாகம் ஒரு சில காரணங்களை முன்வைத்து மேற்படி பிரதேசத்தில் வதியும் மாணவர்களின் கல்வியிலும் விளையாட்டிலும் அக்கறை செலுத்துவதில்லை என்கிற கருத்துக்களிற்கு அப்பால் பொதுஅமைப்புக்களின் உதவியோடு காலையில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடும் 40 மாணவ மாணவிகளிற்கு காலை சத்துணவு வழங்க நிர்வாகம் ஊடாக ஆவண செய்யப்படுகிறது.
தனிப்பட்ட வகையில் தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டு ஐந்து மாதங்களிற்கு தலா 25,000 ரூபா வீதம் வழங்க 5 நலன்விரும்பிகள் முன்வந்துள்ளனர். ஒக்டோபர் மாதம் முதல் காலை சத்துணவு 40 விளையாட்டுத்துறை மாணவர்களிற்கு வழங்கப்படவுள்ளது.
முதலாவது மாதத்திற்குரிய 25,000 ரூபாவை வழங்கி ‘எனது ஊர் காரைநகர்’ ஆரம்பித்து வைக்கின்றது. இத்திட்டமானது காரைநகரில் பதிவு செய்யப்பட்டு இயங்கி வரும் பொது அமைப்பின் ஊடாக நிறைவேற்றப்படவுள்ளது. நீங்கள் வழங்கும் ஒவ்வொரு ரூபாய்களும் பொது அமைப்பில் வரவு வைக்கப்பட்டு ரசீது வழங்கப்பட்டு அதன் ஊடாக காலை சத்துணவு வழங்கப்படவுள்ளதுடன், செலவு விபரங்களும் அறியத்தரப்படும். காலை சத்துணவு வழங்க 10 நலன்விரும்பிகள் தயாரானதும் முழுமையான விபரங்கள் அறியத்தரப்படும்.
உங்களது ஆதரவையும் உங்களது நல்லெண்ணத்தையும் இச்சேவைக்காக குறைந்த பட்சம் ஒரு மாணவருக்காவது உதவ விரும்பினால் அல்லது ஒரு மாத காலை சத்துணவிற்கு 25,000 ரூபா (100 CDN $) வழங்க விரும்பினால் ‘எனது ஊர் காரைநகர்’ மூலமாக தொடர்பு கொள்ளவும். தொ.பே. 1 416 821 8390 நேரடியாகவோ அல்லது WhatsApp ஊடாகவோ தொடர்பு கொள்ளலாம்.
பணம் ‘எனது ஊர் காரைநகர்’ இற்கோ அன்றி தீசன் திரவியநாதனிற்கோ அனுப்ப வேண்டிய தேவை இல்லை. உங்களது நிதி உதவி பொது அமைப்பின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பி வைக்கலாம்.
Sept 30, Oct 01, Oct 02 கொழும்பில் நடைபெறவுள்ளதும் யாழ்ற்ரன் கல்லூரி மாணவ மாணவிகள் 7 பேர்கள் பங்குபற்றவுள்ளதுமான விளையாட்டு நிகழ்வின் விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
‘எனது ஊர் காரைநகர்’ ஊர்ப்பணிகளை இனம் கண்டு தெரிவிப்பதுடன், எமது பங்களிப்பையும் வழங்கி நலன்விரும்பிகள், ஊர்ப்பற்றாளர்களையும் தான, தர்ம பொதுப்பணிகளில் ஊக்குவித்து மனநிம்மதியோடும் கடவுள் கருணையும் பெற்று நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறது. நன்றி.
