பாலர் வகுப்பு படிக்க மாட்டேன் பத்தாம் வகுப்பில் அத்தனையும் pass பண்ணுவேன் என்பது போலவும்…,
பாலர் வகுப்பு படிக்க மாட்டேன் பத்தாம் வகுப்பில் அத்தனையும் pass பண்ணுவேன் என்பது போலவும்…,
பொறியியலாளர் ஒருவரிடம் இதய அறுவை சிகிச்சை செய்தது போலவும்…,
சிங்கப்பூரிற்கு அழைத்துச் சென்று அனைவரிற்கும் நயகரா நீர்வீழ்ச்சியை காட்டுகிறேன் வாருங்கள் என்பது போலவும்..
அரசியலிலும், ஊர்ப்பணி, மக்கள் நலன், வட்டார அபிவிருத்திகளைப்பற்றியோ அல்லது மக்கள் நலனிலோ இதுவரை காலமும் அக்கறையும் அனுபவமும் இல்லாத பலரையும் காரைநகர் பிரதேச சபை தேர்தலில் களமிறக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இனிமேல் தான் கற்றுக்கொள்ள போகிறார்கள்.
சொந்த வீட்டில் எல்லை வீட்டு அயலுடனும் உறவினர்களுடனும் நல்லுறவை கொண்டிராத பலரும் கொழும்பில இருக்கும் புதுமாப்பிளையிடமிருந்து புதையல் கொண்டு வந்து தரப்போகிறார்களாம்.
இருப்பதை வைத்து சிறப்பாக செய்தவர்களாலும், அரசியல் அனுபவங்களினால் பிரதேச சபையில் எவையெல்லாம் சாத்தியமோ அதை வைத்து ஊரை வளமாக்க அனுபவமும் திறமையும் வாய்ந்தவர்களிற்கு உங்கள் வாக்குகளை வழங்கி உங்கள் வாக்குகளை அர்த்தமுள்ளதாக்குங்கள்.
இனிமேல் தான் ஊர்ப்பணிகளையும், வட்டார பிரச்சனைகளையும் கற்றுக்கொள்ள போகிறவர்கள் அடுத்த நாலு வருடத்திலாவது கற்றுக்கொண்டால் சுயேற்சையாக நின்றாலும் சும்மாவே ஜெயிக்க வைப்போம்.
இதோ இப்போது காரைநகர் பிரதேச சபை தேர்தலில் புதிய முகங்களாக அரசியலில் ‘தொபுக்கடீர் என குதித்தவர்களை’ காரைநகர் மக்களே இனிமேலாவது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த நாலு வருடத்திலாவது என்ன செய்கிறார கள் என்று அவதானிக்கவும், அடுத்த தேர்தலிலாவது அவர்களிற்கு நீங்கள் வோட்டு போடலாமா…. என கற்றுக்கொள்வதற்கும்.
இது தான் அரசியல். ‘ஜெயிக்கிற கட்சியில கழுதையை நிறுத்தினால் கழுதையும் ஜெயிக்கும்’ என்கிற அரசியலை தவிர்த்து மக்களிற்கு பணி செய்ய சிங்கங்கள் எங்கு கர்ச்சித்தாலும் காரைநகரில் மான்கள் சுதந்திரமாக நடமாடும் என்பதை காரைநகர் மக்கள் உணரவைக்கும் உள்ளூராட்சி தேர்தல் இது.
எங்கட ஊர் நாங்கள் தான் ஆளனும்.
தமிழ்நாடு தில்லை சிதம்பரத்தில் கோயிலுக்கு சொந்தக்காரர்களே தீவட்டி சுமப்பது முதல் தேரை செலுத்துவது வரை வழிகாட்டுபவர்கள். கடந்த திருவாதிரையின் போது சிதம்பரம் நடராஜர் தேர் உலாவின் போது…

Leave a Reply
You must be logged in to post a comment.