இன்று 26.11.2025 இரண்டாவது பெருமழையின் பின்னர் நீலிப்பந்தனை கேணி.
இன்று 26.11.2025 இரண்டாவது பெருமழையின் பின்னர் நீலிப்பந்தனை கேணி.
கேணியின் இரு மருங்கிலும் வீதிகள். மருதடியில் இருந்து நீலிப்பந்தனை வரும் வீதி முற்றாக பயன்படுத்த முடியாது, காரணம் மூன்று அடிக்கு மேல் வெள்ளம், ஆனாலும் நடுத்தெரு வழியாக நீலிப்பந்தனை வரும் வீதி பயன்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயம் பலருக்கும் உண்டு. பயன்படுத்தியும் வருகிறார்கள் காரணம் வேறு வழி இல்லை. ஆனால் கேணியின் அருகாக வீதியும் உண்டு.
இன்றைய இந்த வீடியோ பதிவை பார்க்கிற போது உங்களிற்கு என்ன தோன்றும்….!
மழை தானே… வெள்ளம் தானே… பழகிப்போனது தானே என்று…
ஆனால் எனக்கு என்ன தெரிகிறது தெரியுமா….
இரண்டடி மூன்றடி வெள்ளம் அல்ல… அதனையும் தாண்டி கேணிக்கும் வீதிக்குமான வித்தியாசம் தெரிகிறது. வீதி என்று நினைத்து எவரும் கேணிக்குள் விழுந்துவிட மாட்டார்கள். நான்கு அரிகல் உயரத்திற்கு 2007ம் ஆண்டு சுற்றிவர என்னால் கனடாவில் வதியும் ஒரு சிலரின் உதவியுடன் கட்டப்பட்ட வெறும் பாதுகாப்பு சுவர்.
2007ம் ஆண்டு முதல் இன்றுவரை உயிர்பலி அற்றவகையில் வெள்ள காலத்திலும் பாதுகாப்பளிக்க தீர்க்கதரிசனத்துடன் செய்யப்பட்ட செயல். ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக எது செய்யப்பட்டாலும் அது நீண்டகால பயனை பெற்றுக்கொடுக்கும். அன்று முகநூல் இல்லை, கட்டியவர்கள் யார் என்றும் தெரியாது. கவலைப்படவும் கவர்மென்ட் இல்லை, அனுமதி எடுக்கவோ அல்லது ஆளாளுக்கு கொடுக்க வேண்டிய தேவையோ இருந்ததும் இல்லை. ஆனாலும் நாலு பேரிடம் பணம் பெற்றதால் அதன் வரவும் செலவும் கூட இன்னும் என்னிடம் பத்திரமாக உள்ளது.
இன்று அரசோ அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேச சபையினராலோ இன்றுவரை சீர்செய்யப்பட முடியாமல் இருக்கும் நீண்டகால பிரச்சனை. அன்றைய தீர்க்கரிசனம். இன்று முகநூலில் பொதுப்பணி செய்பவர்களிற்கு சமர்ப்பணம்.

Leave a Reply
You must be logged in to post a comment.