நாள் : Thursday, September 17, 2026
--:--:--
👁️
Awareness

காரைநகர் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு(SDA)வினருக்கு அன்பான வேண்டுகோளும் அறிவித்தலும்:

காரைநகர் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு(SDA)வினருக்கு அன்பான வேண்டுகோளும் அறிவித்தலும்:

காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாசார மன்றம் தங்களது பாடசாலையின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளை வருடந்தோறும் நிறைவேற்றும் வகையில் பத்து இலட்சம் ரூபாய்களை நிரந்தர வைப்பில் இட்டு அதன் மூலம் தங்களது பாடசாலையின் SDA கணக்கிற்கு வருடந்தோறும் May 05 மற்றும் November 05 ஆகிய தினங்களில் நேரடியாக வங்கி வட்டி பணம் வரவிலிடப்படுகிறது.

இந்த திட்டத்தின் ஊடாக தங்களது பாடசாலை நிர்வாகத்திற்கும், காரைநகர் அபிவிருத்தி சபைக்கும், கனடா காரை கலாசார மன்றத்திற்குமான உடன்பாடு கைச்சாத்திடப்பட்டு 2015.05.05 அன்று முதல் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் கிடைக்கப்பெறும் வருடாந்த வங்கி வட்டிப்பணத்தைக்கொண்டு பாடசாலையின் 4 அத்தியாவசிய அடிப்படை தேவைகளிற்கு மாத்திரமே கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தை பயன்படுத்த முடியும் என்பதுடன் மேற்கொண்டு மொத்தம் ஏழு நிபந்தனைகளிற்கு உட்பட்டு இந்த நிதியினை பெற்றுக்கொண்டீர்கள்.

அவையாவன;

1.நேரடியாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளிற்கு 50%, (மேலதிக வகுப்புகளிற்கான ஆசிரியர் வேதனம், மெல்ல கற்கும் மாணவர்களிற்கான விசேட வகுப்புகளிற்கான ஆசிரியர் வேதனம் மற்றும் அதற்குரிய செலவீனங்கள்.)

2. இணைப்பாடவிதான செயற்பாடுகள் (Co curricular Activities) 20%, (விளையாட்டு, தமிழ் திறன் போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகள்.)

3. மேலதிக மின்கட்டனம் மற்றும் சிறுதிருத்த வேலைகள் 20%.

4. சுகாதாரம், உணவு, குடிநீர் கட்டணம் 10%.

மேற்படி நான்கு நியதிகளின்கும் உட்பட்டு மாத்திரமே கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தினை வருடந்தோறும் பயன்படுத்த முடியும் என்பதோடு…

5. காரைநகர் கோட்ட கல்வி அதிகாரி தலைமையில் நடைபெறும் வருடாந்த அதிபர்களின் கூட்டத்தில் வருடத்தில் ஒரு தடவை பாடசாலைகளின் தேவைகளிற்கு அமைவாக மேற்படி நியதிகளை மாற்றி அமைக்கலாம்.

6. இந்நிதி தொடர்பாக கனடா காரை கலாசார மன்றத்திற்கும், காரைநகர் அபிவிருத்தி சபைக்கும் அறிவிக்கும் பொறுப்பு அதிபர் பிரத்தியேகமாக கட்டுப்பாட்டு பேரேட்டினை பேணி தவணைக்கு ஒரு தடவை வரவு செலவு அறிக்கையினையும் அனுப்புதல் வேண்டும்.

7. இந்த நிதியத்தின் நிரந்தர வைப்புக்கான வட்டி மேற்குறிப்பிட்ட தேவைகள் தவிர்ந்த வேறு எந்த தேவைகளிற்கும் பயன்படுத்த முடியாது.

இவையே அந்த நியதிகள் ஆகும். 2015.05.05 அன்றைய தினம் இந்த நிதியம் வைப்பில் இடப்படும் பொழுது நிதி வளங்குனரான கனடா காரை கலாசார மன்றத்தின் செயலாளராக பதவி வகித்த காரணத்தினால் அனைத்து பாடசாலை அதிபர்களும் கையொப்பம் இட்டு ஏற்றுக்கொண்ட ஆவணங்கள் அல்லது அதன் பிரதிகள் தீசன் திரவியநாதன் ஆகிய என்னிடம் உள்ள காரணத்தினாலும் ஊடகப்பணி ஊடாக அந்த ஆவணங்கள் கடந்த காலங்களில் ‘எனது ஊர் காரைநகர்’ செய்தித்தாளிலும் பிரசுரமாகியிருந்ததை தாங்கள் அறிவீர்கள்.

மேற்படி நிதியம் வைப்பில் இடப்பட்டு அதற்குரிய வங்கி வட்டியினை கடந்த பத்து ஆண்டுகளாக தங்களது பாடசாலை பெற்று வருகிறது. ஆனாலும் அந்த வட்டிப்பணம் ஊடாக தங்களது பாடசாலை நியதிகளிற்கு உட்பட்ட வகையில் தான் வருடாந்தம் இந்த வட்டிப்பணத்தை செலவு செய்யப்படுகின்றதா என்பதையும் அதனை அவதானித்து நிதி வளங்குனர்களிற்கும் இத்திட்டத்தினை செயற்படுத்திய நிர்வாகத்தினருக்கும் தங்களது நம்பிக்கை நாணயத்தை பேணவேண்டிய பெரும் கடப்பாடும் உண்டல்லவா.

ஆனாலும் கடந்த சில ஆண்டுகளாக நிதி வளங்குனரான கனடா காரை கலாசார மன்றமும், காரைநகர் அபிவிருத்தி சபையும் அவர்களது நிர்வாக கடமைகளை கிரமமாக செயற்படுத்துவதில் ஏற்பட்ட பின்னடைவுகள் காரணமாக தங்களது வருடாந்த வரவு செலவு கணக்குகள் வெளிப்படுத்தப்படவில்லை என்பதும், வருடாந்தம் பெறப்படும் வட்டிப்பணத்தின் ஊடாக தங்களது பாடசாலை பயனடைந்து வருகின்றது என்பதனையும் பாடசாலைகளின் வளர்ச்சிக்காகவும் ஊரின் மீது கொண்ட அக்கறையினால் இன்னமும் வெளிநாடுகளில் இருந்து நிதிக்கொடை வளங்கிவரும் அன்பர்களிற்கு ஊக்கமாகவும் விளங்கும் அல்லவா.

எனவே தயவு செய்து வழமைபோல் காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாகத்திற்கும், கனடா காரை கலாசார மன்றத்திற்கும் தாங்கள் மின்னஞ்சல் மூலமாக வருடந்தோறும் வரவு செலவு விபரங்களை அனுப்பி வந்தாலும் அவை சீர்பார்க்கப்படுவதோ அன்றி வெளியிடப்படுவதிலோ நிர்வாகங்கள் அக்கறை செலுத்த தவறி வருகின்றன. ஆகவே தங்கது பாடசாலை சார்பாக தங்களது நல்லெண்ணம், நம்பிக்கை, நாணயம் மற்றும் தொடர்ந்தும் மேலதிக பாடசாலைக்கான உதவிகளை வெளிநாடுகள் வாழ் காரை மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளவும் வசதியாக ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாகவும் தங்களது அறிக்கைகள் வேண்டுகோள்களை உலகளாவிய காரை மக்களிற்கு சென்றடையவும் நம்பிக்கையினையும் நல்லெண்ணத்தையும் வளர்கவும் வெளியிட முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

2015ம் ஆண்டு இத்திட்டத்தினை உருவாக்கிய கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகத்தில் செயலாளராகவும், மொத்த நிதியின் 20% விகிதமான நிதியினை வளங்கியவர் என்கிற ரீதியிலும், அன்று எம்மால் அரசாங்க பாடசாலைகளிற்கு கல்வித்திணைக்கழம் செய்ய வேண்டிய செயற்பாடுகளிற்காகவே இந்நிதி வளங்கப்பட்டதாகவும் ஒரு சிலர் தொடர்ந்தும் திட்டமிட்டு நம்பவைத்துக்கொண்டிருப்பதாலும்…., கனடா காரை கலாசார மன்றத்தினரால் இந்நிதியமானது அரசினாலும் கல்வித்திணைக்களத்தினாலும் மேற்கொள்ளப்படாத திட்டங்களின்காகவும் அடிப்படை தேவைகளை மட்டும் வருடந்தோறும் நிவர்த்தி செய்யவே வளங்கப்பட்டது என்பதையும் பத்து வருடங்கள் கடந்த பின்னரும் தற்போது பாடசாலைகளில் அதிபர்களாக பணி புரியும் தங்களது கடமையும் அல்லவா.

தயவு செய்து தங்களது பாடசாலை விழாக்கள், பரிசளிப்பு நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களின் போது கனடா காரை கலாசார மன்றம் வளங்கி வரும் இந்த வருடாந்த நிதி உதவியை ஊரறியவும், அதன் ஊடாக தங்களது பாடசாலை பெற்றுவரும் வளர்சிகளையும் வெளிப்படுத்தவும் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நிதியத்தின் பயனும் பலனும் காலா காலத்திற்கும் காரைநகர் பாடசாலைகளிற்கு கிடைக்கவும், இந்த நிதியம் தொடர்ந்து சிறந்த முறையில் பயனளிப்பதை கண்டு கொண்டு தங்களது பாடசாலையின் நல்லெண்ணம், நம்பிக்கையினை வெளிப்படுத்தவும் என்றும் எப்போதும் ‘ எனது ஊர் காரைநகர்’ www.karainews.com பாடசாலை நிர்வாகங்களுடன் துணை நிற்கும் என்பதையும் தாழ்மையுடன் அறியத்தருகிறேன்.

கடந்த பத்து ஆண்டுகளில் பல பாடசாலைகளிலும் புதிய அதிபர்கள் இணைந்துள்ளதாலும், அவர்களது பாடசாலையின் SDS கணக்கிற்கு May 05, Nov 05 ஆகிய தினங்களில் வரவில் இடப்படும் வட்டிப்பணம் எங்கிருந்து வருகிறது..? எதற்காக வருகிறது என்பதனையும் இதுவரை அறிந்திராத அதிபர்கள் அறிந்து கொண்டு செயற்படவும் வேண்டும் என்கிற நோக்கிலே இந்த விடயம் அனைவரும் அறிய காரைநகர் பாடசாலைகளின் அதிபர்களிற்கு பகிரங்க வெளியில் தெரியப்படுத்தப்படுகிறது. நன்றி அனைவருக்கும்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

தமிழ்நாடு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விடிந்தால் கும்பாபிஷேகம். காரைநகரில் இருந்தும் பலர் தரிசனத்திற்காக சென்றுள்ளார்கள்.

தமிழ்நாடு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விடிந்தால் கும்பாபிஷேகம். காரைநகரில் இருந்தும் பலர் தரிசனத்திற்காக சென்றுள்ளார்கள். 17 ஆண்டுகளிற்கு...

உண்மையுடனும் ஊர் நல்லெண்ணத்துடனும் காரைநகர் மக்களிடத்தில் கேட்டுக்கொள்கிறேன் அடுத்து என்ன செய்யலாம்…!

உண்மையுடனும் ஊர் நல்லெண்ணத்துடனும் காரைநகர் மக்களிடத்தில் கேட்டுக்கொள்கிறேன் அடுத்து என்ன செய்யலாம்…! காரைநகர் நீலிப்பந்தனை கிராம மக்களின் கடந்த...

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், September பூசை உபயம்

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், இந்த மாதம் September...

யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள்.

ஏதோ நம்மளாலான உதவி. யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள். யாழ்ப்பாணத்தின்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605