காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் ஆலய நித்திய பூஜை மாதாந்த உபயகாரர்கள் விபரங்களின் அடிப்படையில் நவம்பர் மாத உபயம் மற்றும் 2025 இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மாதாந்த நித்திய பூஜைகளிற்கான உபயகாரர்களாக இணைந்து கொண்டு நீலிப்பந்தனை துர்க்கை அம்பாளின் அருட்கடாட்சம் வேண்டி இணைந்து கொண்டவர்கள் விபரம்.
மாதாந்த நித்திய பூசைகளில் இணைந்து கொண்டுள்ள உபயகாரர்களிற்கும் அடியவர்களிற்கும் இவ்வருட முடிவில் 2025.12.31 வரையான நித்திய பூசை செலவு விபரங்கள் மற்றும் நித்திய பூஜை நிரந்தர வைப்பு நிதியத்தின் கணக்குகள் அனுப்பி வைக்கப்படும். அம்பாள் ஆலய ஆதீனகர்த்தாக்கள் திருமதி.சோமசேகரம்பிள்ளை, திரு.சோமசேகரம்பிள்ளை குமரன் ஆகியோரினால் நிர்வாக செயற்பாடுகளிற்காக பணிக்கப்பட்ட திரு.பாலகிருஸ்ணன் சிவறைஞ்சன் தலைமையிலான குழுவினரால் வரவு செலவு அறிக்கை வெளியிடப்படும்.
எனவே மாதாந்த நித்திய பூஜை உபயகாரர்கள் மற்றும் மற்றைய திருவிழா உபயகாரர்கள் ஆதீனகர்த்தாக்கள் அல்லது நிர்வாக குழுவினரிடம் வழங்கி பற்றுச்சீட்டுக்கள் பெற்றுக்கொண்ட நிதிக்கான வரவுகள் மட்டுமே நிர்வாகத்தினரால் வெளியிடப்படும் கணக்கறிக்கையில் பிரதிபலிக்கும். சொந்த பந்தங்கள் மற்றும் நண்பர்களிற்கு நிதியனுப்பி அவர்களால் நேரடியாக முன்னெடுக்கப்பட்ட திருவிழாக்கள், உபயங்கள், திருப்பணிகள் நிர்வாகத்தால் வெளியிடப்படும் கணக்கறிக்கையில் பிரதிபலிக்காது என்பதனையும் முன்கூட்டியே தங்களது கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது.
நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் ஆலயத்தில் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை நிறைவேற்றப்படாது இடையில் உள்ள திருப்பணிகள் மட்டும் நிறைவேற்றப்பட்டு, நீலிப்பந்தனை அம்பாள் ஆலயத்தின் பழைமையை பேணும் வகையில் மட்டும் திருப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு 2027ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடாத்துவதற்கு ஆதீனகர்த்தாக்கள் சார்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதனையும் முற்கூட்டியே துர்க்கை அம்பாள் அடியவர்களிற்கு அறியப்படுத்தப்படுகிறது. நன்றி.













