ஈழத்து சிதம்பரம் காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் பங்குனி மகோற்சவம் 1ம் நாள் கொடியேற்றத் திருவிழா உபயகாரர்கள் சார்பாக வெளியிடப்படும் அறிவித்தல்! |2022

ஈழத்து சிதம்பரம் காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் பங்குனி மகோற்சவம் 1ம் நாள் கொடியேற்றத் திருவிழா உபயகாரர்கள் சார்பாக வெளியிடப்படும் அறிவித்தல்!
2021 வரவு செலவு விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது

சௌந்தராம்பினை சமேத சுந்தரேஸ்வரபெருமான் கோயில் கொண்டு ஆண்டிகேணி ஐயனாருடன் வீற்றிருக்கும் ஈழத்து சிதம்பரம் என போற்றப்படும் காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் பங்குனி மகோற்சவம் எதிர்வரும் 09.03.2022 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

பங்குனி மகோற்சவ 1ம் நாள் கொடியேற்ற திருவிழா காரைநகர் நடுத்தெரு வாழ் அடியவர்கள் சார்பாக கடந்த பல தசாப்தங்களாக நடைபெற்று வருகின்றது. இதனை முன்னின்று சடையாளியை சேர்ந்த திரு.வே.சிவகுருநாதன் அவர்கள் ஒருங்கிணைத்து செய்து வருகின்றார்.

2009ம் ஆண்டு காலப்பகுதிற்கு பின்னர் மேற்படி திருவிழாவின் போது நடுத்தெரு வாழ் அடியவர்கள் சார்பாக கனடாவில் இருந்து ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் ஊடாகவும் நிதி சேகரித்து அனுப்பப்பட்டு வந்தது. மிக சிறியளவானோர் மட்டுமே இந்த திருவிழா உபயத்திற்கான நிதியினை வழங்கி வந்தனர். தொடர்ந்து திருவிழாவிற்கான செலவும் அதிகரித்து வந்ததன் காரணமாகவும் மேலும் பலர் இந்த திருவிழாவிற்கான நிதியினை வழங்க முன்வந்த காரணத்தினாலும் திருவிழாவின் போது பெறப்படும் நிதியுதவி மற்றும் விபரங்களை வெளியிடுமாறும் அதனை அடியவர்களிற்கு தெரியப்படுத்துவதன் மூலம் தொடர்ச்சியாக அடியவர்கள் பங்களிப்பினை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தோம்.

அது மட்டுமன்றி 2021ம் ஆண்டுக்கான முதலாம் திருவிழாவிற்கான நிதி சேகரிக்கப்பட்டு கோயில் நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டு வழங்கப்பட்டதுடன் கோயில் நிர்வாகத்தினரிடம் இருந்து பற்றுசீட்டும் பெறப்பட்டு நிதி வழங்கியவர்களிற்கு வழங்கியிருந்தோம். கோயில் நிர்வாகம் முதலாம் திருவிழா உபயகாரர்களுடன் இணைந்து அதற்கென வழங்கப்பட்ட நிதியினை முதலாம் திருவிழாவிற்கான செலவாக ஏற்றுக்கொண்டு தற்போது வெளியிடப்பட்டுள்ள வரவு செலவு விபரத்திலும் நேரடியாக கோயில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ள நிதி முதலாம் திருவிழாவிற்கு பயன்படுத்தப்பட்டதனையும் பெற்றுக்கொண்டதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கோயில் நிர்வாகத்துடன் இணைந்து முதலாம் திருவிழா உபயம் செயற்படுத்தப்பட்டு வருவது இதன் மூலம் உறுதியாகின்றது என்பதையும் மேலும் பங்குனி மகோற்சவ முதலாம் நாள் கொடியேற்ற திருவிழாவிற்கு நிதியுதவி செய்ய விரும்பும் அடியவர்கள் கோயில் நிர்வாகத்தினரிடமோ அன்றி முதலாம் திருவிழா செயற்பாட்டாளர்களிடமோ தமது பங்களிப்பினை வழங்குவதன் மூலம் பங்குனி மகோற்சவம் மிகவும் சிறப்புற நடைபெற பெரும் பங்காற்றுவீர்கள் என்பதனை ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் ஊடாக தெரிவித்துக்கொள்கின்றேன்.

‘எனது ஊர் காரைநகர்’ சர்ச்சைக்குரிய வகையில் செய்திகளை வெளியிட்டாலும் அதனூடாக ஊரிற்கும் மக்களிற்கும் நிர்வாகங்களிற்கும் நிரந்தரமான நிலையான செயற்பாடுகளையே குறிக்கோளாக கொண்டு செயற்பட்டு வருவதும் யாவரும் அறிந்து கொள்வார்கள்.

2021 வரவு செலவு விபரம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த விபரத்தில் கோயில் நிர்வாகத்திடம் நேரடியாக முதலாம் நாள் திருவிழாவிற்காகவென குறிப்பிட்டு நிதியுதவி அளித்தவர்கள் மற்றும் திருவிழா செயற்பாட்டாளர்களிடம் நிதியுதவி வழங்கியவர்கள் அனைவரது பெயர் விபரங்களும் சேர்ந்து இணைக்கப்பட்டுள்ளன கவனிக்கத்தக்கது.

More From Author

கல்விக்கான உதவி! |26,.May.2022

‘எனது ஊர் காரைநகர்’ சார்பில் காரைநகர் முன்பள்ளி மாணவர்கள் 70 பேருக்கு சிறுவர் சேமிப்பு கணக்கு திறந்து வைக்கப்பட்டது! |2022

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: karainewstheesan@gmail.com / theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Recent Posts

Archive

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Recent Comments

No comments to show.