‘எனது ஊர் காரைநகர்’ சார்பில் காரைநகர் முன்பள்ளி மாணவர்கள் 70 பேருக்கு சிறுவர் சேமிப்பு கணக்கு திறந்து வைக்கப்பட்டது! |2022

தேசிய சேமிப்பு வங்கி மற்றும் அஞ்சல் திணைக்கழத்தின் ஊடாக சிறுவர் சேமிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்கும் முகமாக அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட திட்டத்தின் மூலம் காரைநகர் முன்பள்ளி மாணவர்கள் 70 பேருக்கு சிறுவர் சேமிப்பு கணக்கு திறந்து கொடுக்கப்பட்டதுடன் தலா 1000 ரூபா வீதம் வைப்பில் இட்டு வழங்கப்பட்டது. | 2022

இதன் மூலம் தேசிய சேமிப்பு வங்கி மேலும் தலா 1000 ரூபா இக்கணக்ககளிற்கு வைப்பில் இட்டு வழங்கியுள்ளது. காரைநகர் புதுறோட்டு அம்பாள் முன்பள்ளியில் பயிலும் 40 சிறார்கள் மற்றும் பெரியமணல் சிவகௌரி முன்பள்ளியை சேர்ந்த 30 சிறார்களிற்கு மேற்படி திட்டத்தின் மூலம் சிறுவர் சேமிப்பு கணக்கு ‘எனது ஊர் காரைகர்’ மூலமாக திறந்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி இரு முன்பள்ளிகளில் பயிலும் சிறார்களில் பலரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வதியும் பெற்றோரையுடைய சிறார்கள் என்பதும், மேற்படி இரு முன்பள்ளிகளில் நேரடியாக கலந்து கொண்டு வங்கி கணக்கு புத்தகங்களை சிறார்களிடம் கையளித்தும் முன்பள்ளிகளின் தேவைகள் கேட்டும் அறிந்து கொள்ளப்பட்டன.

முன்பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு திட்டத்திற்காக அரசினால் சிறார் ஒருவருக்கு 30 ரூபா வீதம் நாள் ஒன்றிற்கு வழங்கப்படுகின்றது. தற்போதைய சூழ்நிலையில் அந்த நிதி மூலம் உணவு வழங்குவது சிரமத்திற்குட்பட்டது என்பதுடன், இந்த சத்துணவு திட்டத்தின் மூலம் அதனை சமைத்து வழங்குவதற்கான நிதி வழங்கப்படுவதில்லை என்பதும் கண்டறியப்பட்டது.

எனவே சிவகௌரி முன்பள்ளி சிறார்களின் தேவை கருதி 2022 அடுத்து வரும் 8 மாதங்களிற்கு சிவகௌரி முன்பள்ளி மாணவர்களின் சத்துணவு திட்டத்தினை மேம்படுத்தும் நோக்கில் 65,000 ரூபா வழங்கப்படுகின்றது.

சிவகௌரி முன்பள்ளி மாணவர்கள் 40 பேருக்கு தலா 1000 ரூபா வீதம் 40,000 ரூபாவும் சத்துணவு திட்டத்திற்கான நிதி 65,000 ரூபாவும் மலேசியா வாழ் காரை உறவான சரஸ்வதி அம்மா அவர்கள் ‘எனது ஊர் காரைநகர்” ஊடாக வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

More From Author

ஈழத்து சிதம்பரம் காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் பங்குனி மகோற்சவம் 1ம் நாள் கொடியேற்றத் திருவிழா உபயகாரர்கள் சார்பாக வெளியிடப்படும் அறிவித்தல்! |2022

வீட்டுத்திட்டத்தின் மூலம் பயன் பெற்றவர்களிற்கு வீட்டுத்திட்டத்தினை நிறைவு செய்து கொடுக்க ‘எனது ஊர் காரைநகர்” மூலம் நிதியுதவி! |2022

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: karainewstheesan@gmail.com / theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Recent Posts

Archive

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Recent Comments

No comments to show.