நாள் : Sunday, August 16, 2026
--:--:--
👁️
Community service

‘எனது ஊர் காரைநகர்’ சார்பில் காரைநகர் முன்பள்ளி மாணவர்கள் 70 பேருக்கு சிறுவர் சேமிப்பு கணக்கு திறந்து வைக்கப்பட்டது! |2022

தேசிய சேமிப்பு வங்கி மற்றும் அஞ்சல் திணைக்கழத்தின் ஊடாக சிறுவர் சேமிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்கும் முகமாக அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட திட்டத்தின் மூலம் காரைநகர் முன்பள்ளி மாணவர்கள் 70 பேருக்கு சிறுவர் சேமிப்பு கணக்கு திறந்து கொடுக்கப்பட்டதுடன் தலா 1000 ரூபா வீதம் வைப்பில் இட்டு வழங்கப்பட்டது. | 2022

இதன் மூலம் தேசிய சேமிப்பு வங்கி மேலும் தலா 1000 ரூபா இக்கணக்ககளிற்கு வைப்பில் இட்டு வழங்கியுள்ளது. காரைநகர் புதுறோட்டு அம்பாள் முன்பள்ளியில் பயிலும் 40 சிறார்கள் மற்றும் பெரியமணல் சிவகௌரி முன்பள்ளியை சேர்ந்த 30 சிறார்களிற்கு மேற்படி திட்டத்தின் மூலம் சிறுவர் சேமிப்பு கணக்கு ‘எனது ஊர் காரைகர்’ மூலமாக திறந்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி இரு முன்பள்ளிகளில் பயிலும் சிறார்களில் பலரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வதியும் பெற்றோரையுடைய சிறார்கள் என்பதும், மேற்படி இரு முன்பள்ளிகளில் நேரடியாக கலந்து கொண்டு வங்கி கணக்கு புத்தகங்களை சிறார்களிடம் கையளித்தும் முன்பள்ளிகளின் தேவைகள் கேட்டும் அறிந்து கொள்ளப்பட்டன.

முன்பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு திட்டத்திற்காக அரசினால் சிறார் ஒருவருக்கு 30 ரூபா வீதம் நாள் ஒன்றிற்கு வழங்கப்படுகின்றது. தற்போதைய சூழ்நிலையில் அந்த நிதி மூலம் உணவு வழங்குவது சிரமத்திற்குட்பட்டது என்பதுடன், இந்த சத்துணவு திட்டத்தின் மூலம் அதனை சமைத்து வழங்குவதற்கான நிதி வழங்கப்படுவதில்லை என்பதும் கண்டறியப்பட்டது.

எனவே சிவகௌரி முன்பள்ளி சிறார்களின் தேவை கருதி 2022 அடுத்து வரும் 8 மாதங்களிற்கு சிவகௌரி முன்பள்ளி மாணவர்களின் சத்துணவு திட்டத்தினை மேம்படுத்தும் நோக்கில் 65,000 ரூபா வழங்கப்படுகின்றது.

சிவகௌரி முன்பள்ளி மாணவர்கள் 40 பேருக்கு தலா 1000 ரூபா வீதம் 40,000 ரூபாவும் சத்துணவு திட்டத்திற்கான நிதி 65,000 ரூபாவும் மலேசியா வாழ் காரை உறவான சரஸ்வதி அம்மா அவர்கள் ‘எனது ஊர் காரைநகர்” ஊடாக வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் மகோற்சவ தேர்த்திருவிழா 11.08.2026 இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஆடி அமாவாசை 12.08.2026 புதன்கிழமை என்பதும் அன்றைய தினம் வியாவில் தீர்த்தோற்சவம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் மகோற்சவ தேர்த்திருவிழா 11.08.2026 இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஆடி அமாவாசை 12.08.2026...

கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ பகுதியில் சொந்தமாக கோயில் கொண்டு விளங்கும் கனடா கந்தசுவாமி ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா. 10.08.2026 திங்கள்கிழமை. நாளை செவ்வாய்கிழமை ஆடி அமாவாசை தினத்து தீர்த்தோற்சவமாகக் கொண்டு நடைபெறும் ரதோற்சவம்.

கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ பகுதியில் சொந்தமாக கோயில் கொண்டு விளங்கும் கனடா கந்தசுவாமி ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா....

‘காரைநகர் சேவையாளர் கெளரவம் 2026’ – ‘எனது ஊர் காரைநகர்’ karainews.com நடாத்தும் ஐந்தாவது சேவையாளர் கெளரவம் தொடர்பான அறிவித்தல்.

‘காரைநகர் சேவையாளர் கெளரவம் 2026’ ‘எனது ஊர் காரைநகர்’ karainews.com நடாத்தும் ஐந்தாவது சேவையாளர் கெளரவம் தொடர்பான அறிவித்தல்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605