சோமசுந்தரம் தவராசசிங்கம் | மறைவு: 23.11.2013
மரண அறிவித்தல்
சோமசுந்தரம் தவராசசிங்கம்
கோவளம், காரைநகர்
(அப்புத்தளை)
தோற்றம்: 12.12.1956 மறைவு: 23.11.2013
காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும், அப்புத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் தவராசசிங்கம் அவர்கள் 23.11.2013 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற பிரபல வர்த்தகர் சோமசுந்தரம், பராசக்தி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், சிவமணியின் அன்புக் கணவரும், சோமாஸ்கந்தா,
கேதாரகௌரி, சர்வாபரன் ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார். அன்னார் அம்பிகா ஸ்ரோர்ஸ், அம்பிகா Food City ஆகியவற்றின் உரிமையாளரும், அகில இலங்கை சமாதான நீதவானும், அப்புத்தளை சைவ இளைஞர் மன்றத்தலைவருமாவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 25.11.2013 திங்கட்கிழமை அன்று அப்புத்தளையில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பண்டாரவளை பொதுமயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
தகவல்: மகேஸ்வரன்(தம்பி) – 077 6496 196

Leave a Reply
You must be logged in to post a comment.