Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

தயாளன் சிவசுப்பிரமணியம்|மறைவு:12.10.2022

மருதடி,காரைநகர் (12ம் கட்டை முருங்கன், இலண்டன்)

மறைவு:12.10.2022

தயாளன் சிவசுப்பிரமணியம் | மறைவு:12.10.2022

காரைநகர் வலந்தலை மருதடியை பிறப்பிடமாகவும் இலண்டன், 12ம் கட்டை முருங்கன் ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் தயாளன் அவர்கள் 12.10.2022 காரைநகரில் சுகஜீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.

இவர் காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் மற்றும் கமலாதேவி(கனடா) அவர்களின் அன்பு மகனும் தர்ஜினி அவர்களின் பாசமிகு கணவரும், அனோராவின் பாசமிகு தகப்பனாரும், பவானி(கனடா), விஜயபாலன்(விஜி-மன்னார்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், மகாதேவன்(கனடா) அவர்களின் மைத்துனரும், காலஞ்சென்ற செல்லப்பா தங்கமுத்து, காலஞ்சென்ற பரியாரி ஞானப்பிரகாசம் அவர்களின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13.10.2022 வியாழக்கிழமை காலை 8 மணிக்கு அன்னாரது காரைநகர் மருதடி இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு: 094 766 449 415

Leave a Reply