Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திரு.வினாசித்தம்பி இராசலிங்கம் |இறப்பு: 12.03.2013

காரைநகர் களபூமி நந்தாவிலை பிறப்பிடமாகவும் ஜேர்மனி Leverkuse ஐ வதிவிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி
இராசலிங்கம் அவர்கள் 12.03.2013 செவ்வாய்கிழமை அன்று மாலை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற வினாசித்தம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரமசாமி
இலட்சுமிப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும்;, இராசமணியின் அன்பு கணவரும், காயத்திரி, மிதிலா, அனிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விமலாதேவி(லண்டன்), யோகலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற சொர்ணலிங்கம் மற்றும் சிகாமணிதேவி(இலங்கை), தியாகலிங்கம் (லண்டன்), சரோஜாதேவி(ஜேர்மனி), சந்திராதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு சகோதரரும், கையிலைநாதன்(லண்டன்), தேவராசா(இலங்கை), ஆறுமுகநாதன்(ஜேர்மனி), கேதீஸ்வரநாதன்(ஜேர்மனி),
சாரதாதேவி(இலங்கை), ரஞ்சினி(லண்டன்), சுப்பிரமணியம்(இலங்கை), கந்தையா(இலங்கை), நடராசா(இலங்கை), சரஸ்வதி (இலங்கை) ஆகியோரின் மைத்துனரும், காந்தன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும், பார்த்திபன்(லண்டன்), பாரதி(லண்டன்) ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18.03.2013 திங்கட்கிழமை அன்று மதியம் 12.00 மணிக்கு Kapelle Friedhof Manfort,  
Manforter Str 182,  51373 Leverkusen, Germany

என்ற முகவரியில் இடம்பெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: மனைவி. பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு: 49 151 632 10662

Leave a Reply