நாள் : Saturday, September 12, 2026
--:--:--
👁️
Awareness

நான் யார் என்பதை அறிவதற்கு முன்னர் என்பெயரையே சரியாக எழுத, வாசிக்க, கூப்பிட தெரியாதவர்கள் தான் அதிகம். எனவே எனது செயற்பாடுகளை விளங்கிக்கொள்ள முடியாதவர்களைப் பற்றியா நான் சிலாகித்துக் கொள்ளப்போகிறேன்..!

தமிழர்களால் கூட சரிவர உச்சரிக்கப்படாத ஒரு தமிழ் பெயர் எனது பெயர்.

‘பிரமேந்திரதீசன்’

தமிழ் மொழியில் மட்டுமே எழுதப்படுகின்ற ஒவ்வொரு தமிழ் எழுத்திற்கும் உச்சரிப்பும் ஓசையும் உண்டு. ஆனாலும் எத்தனை பெரிய தமிழ் அறிஞர்கள் ஆனாலும் முதல் முறையாக எனது பெயரை கூப்பிடும் போதும் “பிரமதீசன்’ அல்லது “பிரேமதீசன்” என்றோதான் அழைப்பார்கள்.

பல இடங்களில் நானே எனது பெயரை தெளிவாக எழுதிக்கொடுத்தாலும் கடைசியில் ‘பிரமதீசன்’ என்று தான் எனது பெயர் எழுத்திலும் வந்திருக்கும்.

1973 ம் ஆண்டு, நான் பிறந்த வருடம், அந்த வருடத்தின் தமிழ் பெயர் ‘பிரமாதீச’ வருடம். அது மட்டுமல்ல எனது தந்தையார் தனது புத்திரர்கள் எல்லோரிற்கும் “தீசன்” என்கிற முடிவுடன் தான் பெயர் சூட்டினார்.

எனது தந்தையாருக்கு பிறந்த 13 பிள்ளைகளில் ஏழாவது பிள்ளையாக பிறந்த எனக்கு (பிரம்மன்+ இந்திரன் + ஈசன்) = பிரமேந்திரதீசன் என பெயர் வைத்தார்.

தமிழர்களாக பிறந்து தமிழ் படித்து தமிழ் தெரிந்தவர்களாக கருதப்படும் பலரும் எனது பெயரை எழுதிக்கொடுத்தாலே ஒருமுறை கூட சரிவர உச்சரிக்க முடியாதவர்களாக எத்தனையோ தமிழ் அறிஞர்களை கூட என் வாழ்நாளில் கடந்து வந்துவிட்டேன்.

என்பெயரை தமிழில் உள்ளபடியே உச்சரிக்க முடியாத தமிழர்களிடம் எப்படி நான் அதன் அர்த்தத்தை தெரிந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியும் அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்பவர்களிடம்..!

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் முதன் முறையாக ஆவணி விநாயகர் சதுர்த்தி நன்னாளை தீர்த்தோற்சவமாகக்கொண்டு 06.09.2026 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் முதன் முறையாக ஆவணி விநாயகர் சதுர்த்தி நன்னாளை...

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மிக கவனமாக செயற்படுங்கள்.

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள்,...

31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக அனுமதி பெற்ற தேவையுடைய மாணவிக்கு மடிக்கணணி வளங்கியுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக தொடரட்டும் கல்விக்கான பணிகள். 31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக...

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஆறு பல்கலைக்கழக மாணவர்கள் , கல்விக்காக இன்னொருவரின் உதவிகளை வேண்டி நிற்கிறார்கள்.

காரைநகர் அபிவிருத்தி சபை செய்தி. காரைநகரில் இருந்து இந்த ஆண்டு 20 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார்கள். அவர்களில் ஆறு...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605