தமிழர்களால் கூட சரிவர உச்சரிக்கப்படாத ஒரு தமிழ் பெயர் எனது பெயர்.
‘பிரமேந்திரதீசன்’
தமிழ் மொழியில் மட்டுமே எழுதப்படுகின்ற ஒவ்வொரு தமிழ் எழுத்திற்கும் உச்சரிப்பும் ஓசையும் உண்டு. ஆனாலும் எத்தனை பெரிய தமிழ் அறிஞர்கள் ஆனாலும் முதல் முறையாக எனது பெயரை கூப்பிடும் போதும் “பிரமதீசன்’ அல்லது “பிரேமதீசன்” என்றோதான் அழைப்பார்கள்.
பல இடங்களில் நானே எனது பெயரை தெளிவாக எழுதிக்கொடுத்தாலும் கடைசியில் ‘பிரமதீசன்’ என்று தான் எனது பெயர் எழுத்திலும் வந்திருக்கும்.
1973 ம் ஆண்டு, நான் பிறந்த வருடம், அந்த வருடத்தின் தமிழ் பெயர் ‘பிரமாதீச’ வருடம். அது மட்டுமல்ல எனது தந்தையார் தனது புத்திரர்கள் எல்லோரிற்கும் “தீசன்” என்கிற முடிவுடன் தான் பெயர் சூட்டினார்.
எனது தந்தையாருக்கு பிறந்த 13 பிள்ளைகளில் ஏழாவது பிள்ளையாக பிறந்த எனக்கு (பிரம்மன்+ இந்திரன் + ஈசன்) = பிரமேந்திரதீசன் என பெயர் வைத்தார்.
தமிழர்களாக பிறந்து தமிழ் படித்து தமிழ் தெரிந்தவர்களாக கருதப்படும் பலரும் எனது பெயரை எழுதிக்கொடுத்தாலே ஒருமுறை கூட சரிவர உச்சரிக்க முடியாதவர்களாக எத்தனையோ தமிழ் அறிஞர்களை கூட என் வாழ்நாளில் கடந்து வந்துவிட்டேன்.
என்பெயரை தமிழில் உள்ளபடியே உச்சரிக்க முடியாத தமிழர்களிடம் எப்படி நான் அதன் அர்த்தத்தை தெரிந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியும் அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்பவர்களிடம்..!



