நேற்றும் நேற்று முன்தினமும் 2010 ஒக்டோபர் 23ம், 24ம்;
திகதிகளில் மாணவர் முதல்வர்களிற்கான தலைமைத்துவ பயிற்சி
நடராசா ஞாபகர்த்த மண்டபத்தில் நடாத்தப்பட்டது. வவுனியா தேசிய
கல்வியற் கல்லூரி பீடாதிபதி திரு.க.பேர்னாட், உபபீடாதிபதி திரு.எஸ்.
இன்பதேசராஜா மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழா காரை நலன்விரும்பியும், ஓய்வு பெற்ற ஆசிரியரும், காரை
இந்து பழைய மாணவருமான திரு. எஸ்.கே. சதாசிவம் அவர்களினால்
ஏற்பாடு செய்யப்பட்டது. காரைநகர் பாடசாலைகளில் உள்ள அனைத்
து பாடசாலைகளிற்கும் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட போதிலும்
குறுகிய கால நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்ட காரணத்தினால் மற்
றைய பாடசாலை மாணவர்கள் கலந்துகொள்ளவில்லை.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சி விழாவில் மாணவர் தலைவர்
கள் சமூகத்திற்கும், பாடசாலைக்கும் ஆற்றவேண்டிய பணிகள், அவர்
களுடனான தொடர்பாடல் திறன், அதிபர் ஆசிரியர்களிற்கான ஒத்துழைப்
பு, அவர்களின் சுயமுன்னேற்றம், மகிழ்ச்சிகரமான வாழ்க்கை,
எதையும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளல் போன்ற தலைப்புக்களில்
இருநாள் செயலமர்வுகள் இடம்பெற்றன.
இரண்டு நாள் விழாவும் மகாராணி ரெக்ரைல்ஸ் ஆதரவுடன் தீவக
கல்வி வலயம் அனுசரணையுடனும் மேற்படி நிகழ்வுகள் இரண்டு நாட்
களும் இடம்பெற்றன.
அத்துடன் இரண்டு நாட்களிலும் வவுனியா வலய கல்வி அலுவலக
கணிதபாட நிபுணத்துவ ஆலோசகர் எஸ். வரதராஜாவினால் தரம் 10,
மற்றும் தரம் 11க்கான செயன்முறையுடன் கூடிய கல்வி பயிற்சிகளும்
நடாத்தப்பட்டன.
இவ்விழாவில் கனடா காரை கலாச்சார மன்றம் வழங்கிய Fax முதன் முதலாக பயன்படுத்தப்பட்டதாகவும், 24ம் திகதி இவ்வுபகரணம் உத்தியோக பூர்வமாக கையளிப்பு விழா நடைபெற்றதாகவும் மிகவும் மகிழ்ச்சியுடன் அதிபர் அவர்கள் ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளத்திற்கு செய்தி வழங்கினார்.
அத்துடன் கடந்த 16ம் திகதி நடைபெற்ற வாணி விழாவின் போது
அப்பலோ கண் வைத்தியசாலை உரிமையாளரும் காரைநகரை பிறப்
பிடமாக கொண்டவருமான திரு. எஸ்.தனபாலசிங்கம் அவர்களினால்
பாடசாலை உபயோகத்திற்கென புதிய குயஒ இயந்திரம் வழங்கப்பட்டது.
காரை இந்து அதிபரின் ஆர்வத்தினாலும் முயற்சியினாலும் பாடசாலை
சிறுவர் சிறுமியருக்கு கிராமிய கலைகளான குதிரை ஆட்டம், வில்லுப்
பாட்டு, நடனம் என்பன பயிற்சி பெற்ற கலைஞர்களினால் பயிற்றுவிக்
கப்பட்டு மேடையேற்றப்பட்டது. காரைநகர் மக்களிடத்திலும் மாணவர்
களிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளாக கடந்த 16ம்
திகதி இடம்பெற்ற வாணி விழா விளங்குகின்றது.
காரை இந்துவில் கடந்த வாரம்:
















