காரைநகர் ஈழத்து சிதம்பரத்தில் பட்டப்பகலில் பத்தாயிரம் பேர்கள் மத்தில் துணிகர கொள்ளை..!
காரைநகர் ஈழத்து சிதம்பரத்தில் பட்டப்பகலில் பத்தாயிரம் பேர்கள் மத்தில் துணிகர கொள்ளை..!
05.07.2026 அன்று நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது பக்தகோடிகளின் நெரிசலை சாதகமாக்கி 5 பேர்களிடமிருந்து தங்க சங்கிலிகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. அதிலும் காரைநகர் பண்டித்தாழ்வை சேர்ந்தவரும் இலண்டனில் இருந்து வருகை தந்திருந்தவருமான செல்வநாயகம் கிருபாகரனிடம் இருந்து 5 பவுண் தங்கச்சங்கிலியை அறுத்து எடுத்த கொள்ளையர்கள் மிகவும் சாதுரியமானவர்கள் என ஊரவர்கள் அச்சமடைந்திருந்தனர். பிரதான கும்பங்கள் சுற்றி வந்து சிவன் கோபுர வாசல் ஊடாக உள்நுளையும் போது பலத்த நெரிசல் ஏற்பட்டிருந்தது. கோபுரத்திற்கும் யாகசாலைக்கும் இடைப்பட்ட மிகவும் குறுகிய இடத்தில் பயங்கரமான தள்ளுமுள்ளு ஏற்பட்டிருந்தது, நாதஸ்வர கலைஞர்கள் நாதஸ்வரங்கள் மேளங்களை தலைக்கு மேலே தூக்கிய நிலையில் வீடியோ பதிவு தடைசெய்யப்பட்ட நிலையினை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கொள்ளையர்கள் கிருபா அவர்களின் தங்கச்சங்கிலியை அறுத்து எடுத்துள்ளனர்.
மேலும் சுப்பிரமணியம் வீதியை சேர்ந்த மற்றும் இரு பெண்மணிகளின் தங்க சங்கிலிகளும் அறுத்தெடுக்கப்பட்டுள்ளன உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவரது தங்க சங்கிலிகள் அறுக்கப்பட்டதாக அறியப்பட்டது.




ஒரு ஆணிடம் அதுவும் செல்வநாயகம் கிருபாகரனிடம் இருந்து சங்கிலியை அறுத்தெடுத்த கொள்ளையர்கள் பலே கில்லாடிகளாகவும் கொள்ளையில் கைதேர்ந்தவர்களாகவும் இருக்கலாம் எனவும் பலரும் கிலாகித்துக்கொண்டார்கள். பவுண் ஒன்று மூன்றரை இலட்சம் விக்கிற விலையில் ஐந்து பவுண் சங்கிலி 15 இலட்சத்திற்கு மேல் பறிகொடுத்த இலண்டன் வாழ் செல்வநாயகம் கிருபாகரன் அவர்கள் அது தொடர்பாக பொலிஸ்சில் முறைப்பாடு செய்யவும் கோயில் நிர்வாகம் கொள்ளையர்களை கண்டுபிடிக்கவும் ஆவண செய்ய வேண்டும்.
தங்க சங்கிலிகளை பறிகொடுத்தவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்யுமிடத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க வீடியோ பதிவுகள் ஏதாவது இருந்தால் அதனை மீள்பரிசீலனை செய்யவும், கோயில் நிர்வாகம் அவர்களால் நியமிக்கப்பட்ட வீடியோ பதிவாளர்களின் வீடியோ பதிவுகளை மீளாய்வு செய்யவும் ஏதுவாக இருக்கலாம்.
பத்து முதல் பதினைந்தாயிரம் பக்தர்கள் கலந்து கொண்ட கும்பாபிஷேகத்தில் ஐந்து பக்தர்களிடம் இருந்து அண்ணளவாக 15 பவுண் தங்க சங்கிலிகள் 75 இலட்சத்திற்கு மேற்பட்ட பெறுமதியிலானவை பறிபோன நிலையில் மேற்கொண்டு எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காமல் இருப்பது கொள்ளையர்களிற்கு மேலும் இனிவரும் காலங்களிலும் வேறு கோயில்களிலும் சாதகமாக அமையும் என்பது அறிவு.

Leave a Reply
You must be logged in to post a comment.