முன்னாள் இராஜாங்க அமைசரும் காரை மண்ணின் மைந்தன் அமரர் தியாகராஜா மகேஸ்வரன் அவர்களது துணைவியாருமாகிய திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் தேர்தல் காலத்தின் போது கட்சி ஒதுக்கிய பணமான ஒரு கோடி ரூபாய்களை ஈழத்து சிதம்பரத்திற்கு வழங்கியுள்ளதாகவும் அதனூடாக பாரியளவிலான திருப்பணி வேலைகளை ஆரம்பிக்க தேரோடும் மாமணி வீதியாம் மூன்றாம் வீதியில் பல லோட் கற்களும் மண்ணும் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவதாகவும், திருவெம்பாவை காலத்தில் அடியவர்கள் தேரோடும் வீதியை சுற்றி வரவும், மணிவாசகர் மடாலயத்திற்கு செல்லும் வழியெங்கும் பள்ளமாகவும் சகதிகளும் நிறைந்து மடத்திற்கு செல்ல அசெளகரியங்களை ஏற்படுத்தி வருவதால் அதனை சீர் செய்து பக்தர்களிற்கு வசதிகளையும் இதன் மூலம் கோயில் நிர்வாகம் ஏற்படுத்திக்கொடுக்கப் போவதாகவும் காரை மக்கள் கருதுகிறார்கள் எனவும் நம்பப்படுகிறது.
எல்லாம் வெகு விரைவில் நடக்கும். எது நடந்தாலும் அதுவும் நன்மைக்கே என காரைநகர் மக்கள் திடமாக நம்பி வருகிறார்கள்.
எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதேயன்றி வேறொன்றும் யான் அறியேன் பராபரமே..!
நன்றி: காட்சிகள் தியாகராசா பரமேஸ்வரன்.




