‘எனது ஊர் காரைநகர்’ செய்தி சஞ்சிகை கனடாவில் வெளியாகி உள்ளது, 100 பேர்கள் மட்டுமே தமது கனடிய விலாசங்களை புதுப்பித்துக் கொண்டார்கள்.

‘எனது ஊர் காரைநகர்’ செய்தி சஞ்சிகை கனடாவில் வெளியாகி உள்ளது. கடந்த காலங்களில் கனடாவில் 300 க்கும் மேற்பட்ட காரை மக்களின் வீடுகளிற்கு இலவசமாக அனுப்பப்பட்டு வந்துள்ள போதிலும், அண்மைக்காலங்களில் வீட்டு விலாசங்கள் பல மாற்றமைந்திருத்தாலும், முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற தொடர்புகள் மூலம் தங்களது தற்போதைய விலாசத்தை அறியப்படுத்தி புதுப்பித்துக்கொள்ளுமாறு 300 க்கும் மேற்பட்டவர்களிற்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன்.

ஆனாலும் 100 பேர்கள் வரையானோர் மட்டுமே தமது கனடிய விலாசங்களை புதுப்பித்துக்கொண்டார்கள்.

Canada Post வேலை நிறுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை தமது விலாசங்களை புதுப்பித்துக்கொண்டவர்களிற்கான இலவச விநியோகம் நாளை அஞ்சலில் சேர்ப்பிக்கப்படும். பல மில்லியன் அச்சல்கள் பட்டுவாடா செய்யப்பட வேண்டிய நிலையில் தங்களுக்குரிய 29 வது இதழ் தங்களிற்கு கிடைக்கப்பெறும்.

அத்துடன் தங்களது விலாசங்களை புதுப்பித்துக் கொள்வதாலோ அல்லது ‘எனது ஊர் காரைநகர்’ சஞ்சிகையினை நீங்கள் பெறுவதாலோ ‘எனது ஊர் காரைநகர்’ தொகுப்பாளரிற்கு சாதகமானவராகவோ நீங்கள் கருதப்படமாட்டீர்கள் என்பதுடன், உங்களிடம் ஒருபோதும் ஊரிற்கான எந்தவித அபிவிருத்திக்காக பணம் வேண்டி தொடர்பு கொள்வேன் எனவோ தயவு செய்து கருத வேண்டாம்.

கடந்த 18 ஆண்டுகளாக முற்றிலும் இலவசமாக இப்பணியை செய்து வருகிறேன்.

காரைநகர் பாடசாலைகள் அனைத்திற்கும் கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக ஒருகோடி இருபது இலட்சம் வைப்பில் இட்ட போதும் வெறும் 85 கனடிய காரை மக்களே கனடா காரை கலாசார மன்றத்தின் கல்விப்பணிக்காகவும் உதவ முன்வந்தவர்கள் என்பதனால் ஆயிரமாயிரமாக இலட்சம் இலட்சமாக காரை மக்கள் உலகெங்கும் பரந்து வாழ்ந்தாலும் அதில் பொதுப்பணிகளில் ஆர்வமுடன் தமது ஊரிற்கான கடமைகளை செய்து வருபவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தான் என்பது கற்றுக்கொண்ட அனுபவம் மூலம் அறிந்து கொள்வேன்.

ஊரைப்பற்றிய செய்திகள், ஊரில் என்ன நடக்கிறது, என்ன நடக்கவில்லை என்று அறிந்து கொள்ள மட்டும் ‘ எனது ஊர் காரைநகர்’ சஞ்சிகையினை பெற்று அறிந்து கொள்ளுங்கள். அல்லது அடிப்படை அறிவு எதுவும் அற்ற வகையில் 04.01.2025 இல் சிவன் கோயிலில் திருவெம்பாவை உற்சவம் நடக்குமா…! கும்பாபிஷேகம் எப்போது..? கோயிலில் என்ன திருப்பணி நடக்கிறது..?

காரை இந்துவில் இப்ப யார் அதிபர்…? யாழ்ற்ரனில் பரமசிவம் மாஸ்ரர் தான் இன்னும் அதிபரா என்று என்னை நேரங்கெட்ட நேரங்களில் தொடர்பு கொண்டு அறிய முயற்சிக்காதீர்கள்.

முகநூல்கள் ஊடாக என்ன செய்திகளை நீங்கள் அறிந்து கொண்டாலும்… உண்மையும் உத்தரவாதமும் கொண்ட செய்திகளை எழுத்து மூலமாக உத்தரவாத்த்துடனும் வரலாற்று பதிவாகவும் கொண்டு வருவது ‘எனது ஊர் காரைநகர்’ சஞ்சிகை மட்டுமே.

ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுங்கள் ‘ எனது ஊர் காரைநகர்’ இதழ் 29.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

ஒரு மூடன் கதை சொன்னான்… என் கதை அது தான்..!

ஈழத்து சிதம்பரத்தில் மூன்றாவது ஆண்டாக தொடரும் திருப்பணிகளும் நிதி உதவிகளும்…

Leave a Reply