இலங்கையிலுள்ள கனடா காரை கலாசார மன்ற நிதியின் நிலமை.

கனடா காரை கலாசார மன்றம் காரைநகரில் உள்ள 12 பாடசாலைகளிற்கும் தலா பத்து இலட்சம் வீதம் ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்களை பாடசாலைகளின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளை வருடந்தோறும் நிவர்த்தி செய்யும் வகையில் 2015 இல் நிரந்தர வைப்பில் இட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த பத்து ஆண்டுகளில் பாடசாலைகள் ஒரு கோடி நாற்பது இலட்சம் ரூபாய்களிற்கு மேற்பட்டளவில் வட்டியாக பெற்றுள்ளதும், 2015ம் ஆண்டு முதல் குடிநீர், மேலதிக மின்கட்டணம், பாடசாலை உதவியாளர் வேதனம், மதிய உணவு சமையலாளர் சம்பளம் என்பன கடந்த பத்து ஆண்டுகள் குறைவின்றி நிறைவேற்றப்பட்டு வருகின்றது.

2015ம் ஆண்டு பாடசாலைகளிற்கு இப்பணியை நிறைவேற்று வழங்கிய அதே நிர்வாகம் மேலும் 25,000 கனடிய டொலர்கள் மன்றத்தின் கணக்கில் வைப்பில் இட்டு சென்றதும் பின்னர் 2016 முதல் 2018 வரையான நிர்வாகம் மேலும் 20,000 கனடிய டொலர்களை மன்றத்தின் பெயரில் வைப்பில் இட்டதுடன் மொத்தம் 65 இலட்சம் இலங்கை ரூபாய்களை மன்றத்தின் பெயலில் இலங்கையில் ஹட்டன் நாஷனல் வங்கியில் நிரந்தர வைப்பில் இட்டதுடன், அதன் மூலம் பெறப்படும் வட்டிப்பணம் காரைநகரில் கல்வித்தேவைகளிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்னும் தீர்மானத்தை 2019ம் ஆண்டு ஸ்காபுரோ பெரிய சிவன் ஆலயத்தில் திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனாலும் மேற்படி 65 இலட்சம் ரூபாய்களும் கனடாவில் இயங்கும் கனடா காரை கலாசார மன்றத்தின் பெயரில் இலங்கையில் வைப்பில் இடப்பட்டுள்ளதால் வெளிநாட்டு மூலதனமாக கருதி மிக்குறைந்தளவு வங்கி வட்டியும் அத்துடன் வங்கியினால் வரி பிடிப்பும் போக அண்ணளவாக 3% விகிதமான வட்டியுமே பெறப்பட்டு வந்துள்ளது. அது மட்டுமன்றி கனடா காரை கலாசார மன்றம் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயற்படாத ஒரு நிலமையினை அடைந்துள்ள காரணத்தினாலும் பெறப்படும் வங்கி வட்டி வீதம் மிகமிக குறைவாக உள்ள காரணத்தினாலும், மேற்படி நிதி வைப்பில் இட்ட காலங்களில் தீசன் திரவியநாதன் ஆகிய நான் நிர்வாக சபை உறுப்பினராக( (CKCA Trustee) இருந்துள்ள காரணத்தினாலும் வங்கி கணக்கில் இதுவரை கையெழுத்து போட தகுதியுள்ளவர்களுடன் இணைந்து மேற்படி 65 இலட்சம் ரூபாய்களை காரைநகர் அபிவிருத்தி சபைக்கு வழங்கி காரைநகர் பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்காக தீர்மானித்துள்ளோம்.

இலங்கை ஹட்டன் நாஷனல் வங்கியுடன் தொடர்பு கொண்டு கடந்த சில மாதமாக நடாத்திய உத்தியோகபூர்வ ஆவண பரிமாற்றங்களை தொடர்ந்தும், காரைநகர் அபிவிருத்தி சபை நிரந்தரமான நிர்வாகத்தை பெற்றுக்கொண்டதை தொடர்ந்தும் கனடா காரை கலாசார மன்றத்தின் பெயரில் இலங்கையில் ஹட்டன் நாஷனல் வங்கியில் உள்ள 65 இலட்சம் ரூபாய்கள் மற்றும் அதன் மூலம் கடந்த இரண்டு வருடமாக பெறப்பட்ட வட்டி உட்படனைத்தும் காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாகத்திற்கு மாற்றம் செய்யப்படவுள்ளது.

கனடா காரை கலாசார மன்றம் 28.04.2024 அன்று புதிய நிர்வாக சபையை திரு. முத்து பொன்னம்பலம் தலைமையில் தெரிவு செய்யப்பட்ட போதிலும் தனது பதவிகளை கடந்த 20 மாத காலமாக பொறுப்பேற்க முடியாதளவில் மன்றத்தை முடக்கி வைத்துள்ள காரணத்தினாலும் 28.04.2025 வரை தலைவராக பணியாற்றிய திரு.சிவசம்பு சிவநாதன் தலைமையிலான நிர்வாகத்தின் ஒப்புதல் கடித்தம் ஹட்டன் நாஷனல் வங்கிக்கு அனுப்பப்பட்டு காரைநகர் மக்களிற்கென கனடாவில் சேர்க்கப்பட்ட நிதி காரைநகர் மக்களின் பெயரிலேயே செல்லவுள்ளது.

28.04.2025 அன்று முரண்பாடுகளிற்கு மத்தியில் திரு.முத்து பொன்னம்பலம் தலைவராக தெரிவு செய்யப்பட்ட போதிலும் கடந்த 20 மாதங்களாக மன்றத்தை இல்லாது ஒழிக்கும் வகையில் மட்டுமே கோர்ட், கேசு எனவும், யதார்த்தத்திற்கு ஒவ்வாத பலவித காரணங்கள் மற்றும் கோர்ட்டிற்கு தான் தலைவர் அல்ல என்றும் ஆனால் மன்றத்தின் தலைவர் பதவியை பெற்ற நாள் முதல் மன்றத்தின் தொடர்பாடல் மற்றும் வங்கி கணக்கு(கனடா), நிதி செயற்பாடுகளை பெற்றுக்கொண்ட திரு. முத்து பொன்னம்பலம் அவற்றை தனது கோர்ட் கேசுகளிற்காக மட்டும் பயன்படுத்தி வருவதுடன் மன்றத்தை தொடர்ந்து நடாத்துவதற்கோ அல்லது கனடா வாழ் காரைநகர் மக்களிற்கான ஒற்றுமையை நிலைநாட்டவோ எந்தளவும் முயற்சிகளில் ஈடுபடவில்லை என்பதை அனைவரும் அறிவார்கள்.

ஆகவே மன்றத்தின் பெயரில் இலங்கையில் உள்ள நிதியான 65 இலட்சம் ரூபாய்களை தீசன் திரவியநாதன் ஆகிய நான் கனடா காரை கலாசார மன்றத்தின் இந்த நிதியினை சேர்த்த காலத்தில் one of the Trustee ஆக இருந்த காரணத்தினால் மற்றைய Trustee களுடன் இணைந்து காரைநகர் பாடசாலைகளிற்காக காரைநகர் அபிவிருத்தி சபைக்கு வழங்குவதற்காக ஹட்டன் நாஷனல் வங்கி ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உண்மையை சொல்ல ஒரு போதும் தயங்குவதில்லை.

2019 இல் மொத்தமாக 65 இலட்சம் ரூபாய்கள் வைப்பில் இடப்பட்ட போது 2016 முதல் 2019 வரையாக இந்த நிதி எங்கிருந்து இந்த நிதி வந்துள்ளது என்பதும் அதில் தீசன் திரவியநாதன் ஆகிய எனது பங்களிப்பு எவ்வளவு என்பதும் 2016 முதல் 2019 வரையான மன்றத்தின் வரவு செலவு அறிக்கையின் ஆதாரத்துடன் தெரியப்படுத்துகிறேன்.

வீணாய்ப்போனவர்களின் வாய்ச்சவடால்களாலும், கோர்ட் கேசுகளாலும் தனிப்பட்டளவில் ஊரிற்கும் மன்றத்திற்கும் உழைத்தவர்கள் சிரமங்களை எதிர்நோக்கலாம் ஆனால் ஊரின் பெயரால் கனடாவில் காரைநகர் மக்கள் வழங்கிய ஒரு சதமும் வீணாக போக விடமாட்டார்கள் என்பதை எனது வார்த்தைகளை வைத்து நம்பாதீர்கள் கடந்த கால செயற்பாடுகளை வைத்து ஒரு கணம் சிந்தித்து உணருங்கள்.

வீணாய் போனவர்களின் சமூக வலைத்தளங்களில்(WhatsApp Group) இல் குந்தியிருந்து கூத்து பார்ப்பவர்களே உங்களால் அங்கே கேள்விகள் கேட்க முடியாது ஆனால் உங்கள் சார்பாகவும் உங்கள் இயலாமைகளின் சார்பாகவும் துணிவும் தன்னம்பிக்கையும், தாம் கொண்ட செயலில் பற்றும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் நிறைவேற்றிக்கொண்டிருப்பது கடந்த இருபது வருடமாக ‘எனது ஊர் காரைநகர்’ மட்டுமே.

இன்று இருப்போர் நாளை இருப்பதில்லை. ஆனால் காரைநகர் பாடசாலைகளின் வளர்ச்சிக்காக என்னால் எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சிகளும் இன்னும் பல தசாப்தங்களிற்கு பயனளிக்கும், அதில் ஒரு துளி கடந்த பத்து ஆண்டுகளில் நிறைவேறியுள்ளதும் அனைவரிற்கும் சமர்ப்பணம்.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

காரைநகர் இலகடி, மாப்பாணவூரியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் நாச்சிமார் அம்பாள் ஆலய 1008 சங்காபிஷேகம் பற்றிய அறிவித்தல். 09.12.2025 செவ்வாய்கிழமை காலை 7 மணி.

உலகளாவிய காரைநகர் மக்களிற்கும் காரைநகர் அபிவிருத்தி சபை மற்றும் அதனூடான நற்பணிகளை என்றும் எப்போதும் எதிர்பார்க்கும் நல்லுள்ளங்கள் உடனடியான மற்றும் காரைநகர் அபிவிருத்தி சபையின் செய்திகள் மற்றும் விபரங்களை ‘காரைநகர் அபிவிருத்தி சபை’ முகநூல் ஊடாவும் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply