இளைஞர்களே, மோட்டார் சைக்கிள் பயன்படுத்தும் பயனாளிகளே கொஞ்சம் இந்த விபத்தினை கருத்தில் கொள்ளுங்கள். ஊரிலே பல மோட்டார் சைக்கிள் ஓடுபவர்கள் உள்வீதிகளில் இருந்து பிரதான வீதிக்கு வரும்போது முற்றாக நிறுத்தி இரண்டு பக்கமும் பார்த்து விட்டு பிரதான வீதிக்கு வருவதில்லை, பலரும் உள்வீதியில் இருந்து அப்படியே வந்து பிரதான வீதிக்கு ஏறுகிறார்கள். காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் 82 வழித்தடங்கள் எங்கிலும் நான் இதை கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
உள்வீதியில் இருந்து வருபவர் எள்ளளவும் பிரதான வீதியின் மறுபக்கத்தை பார்க்காது அப்படியே வந்து ஏறுவதையும் கண்டிருக்கிறேன்.
அது மட்டுமல்லாது வீதியிலே மோட்டார் சைக்கிளை நிறுத்தி கதைத்துக்கொண்டிருக்கும் சிலர் அப்படியே எதனையும் பொருட்படுத்தாது U turn அடித்து செல்வதையும் பார்த்திருக்கிறேன்.
அப்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன் அவர்களது விதி luck இல் தான் பிழைத்துக்கொள்கிறது.
அறிவும், நிதானமும் உடையவர்கள் வீதி ஒழுங்குகளை பின்பற்றுவார்கள்.
காரைநகரில் பல விபத்துக்கள் தவிர்க்கப்படுவதற்குரிய காரணங்களில் ஒன்று அதிக வாகனங்கள் பிரதான வீதியில் பயணிப்பதில்லை என்பதே, அல்லது உள்வீதிகளில் இருந்து பிரதான வீதிகளிற்கு வரும் பல மோட்டார் சைக்கிள்கள் பிரதான வீதியால் வரும் வாகனங்களிற்கு இரையாகும்.
இதையே நான் பல தடவைகள் பறைய கண்டியில் வந்து ஏறுபவர்கள் மூலம் கண்டும் இருக்கிறேன். மையிரிளையில் தினம் தினம் தப்பிப்பிழைப்பவர்களையும் கண்டுள்ளேன்.
ஏதோ இந்த விபத்தை கண்டவுடன் பகிர்ந்து கொள்ளத்தோன்றியது.
வீணாக உயிரை மாய்த்துக்கொள்ளாதீர்கள் அல்லது கையில காலில இடுப்பில இரும்புத்தகடுகளை வைத்துக்கொண்டு வாழ்க்கை நடாத்த முயற்சிக்காதீர்கள்.
இப்பெல்லாம் விபத்து என்று வைத்தியசாலைக்கு சென்றால் இரும்புத்தகடுகள் தான் காத்திருக்கின்றன.
முன்பெல்லாம் சைக்கிள் விபத்துகளிற்கு புக்கை கட்டிற சண்முகம் தான் பலருக்கும் கடவுள்



