இயற்கை அனர்த்தத்தின் போது சிறப்புற பணியாற்றிய காரைநகர் பிரதேச சபை ஊழியர்களை கெளரவித்து சிறப்பு செய்ய காரைநகர் அபிவிருத்தி சபை முன்னாள் தலைவர் திரு.குருபரன் சுப்பிரமணியம் அவர்கள் ‘எனது ஊர் காரைநகர்’ இற்கு ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

இயற்கை அனர்த்தத்தின் போது சிறப்புற பணியாற்றிய காரைநகர் பிரதேச சபை ஊழியர்களை கெளரவித்து சிறப்பு செய்ய காரைநகர் அபிவிருத்தி சபை முன்னாள் தலைவர் திரு.குருபரன் சுப்பிரமணியம் அவர்கள் ‘எனது ஊர் காரைநகர்’ இற்கு ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

பிரதேச சபை ஊழியர்கள்(*கவனிக்க பிரதேச சபை உறுப்பினர்கள் அல்ல) 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பிரதேச சபையினால் வழங்கப்படும் அடிப்படை வேதனத்தில் பணி புரிபவர்கள், அவர்கள் இயற்கை அனர்த்தங்களின் போது மழையிலும், புயலிலும், வெள்ளத்திலும் பகல் இரவு பாராது பணி புரிந்தவர்கள். தங்களது குடும்பங்களின் தேவைகளின் போது தமக்காகவன்றி ஊரிற்காக பணி புரிந்தவர்கள்.

மரங்கள், பனைகள் முறிந்து விழுந்த போது உடனடியாக அவ்விடங்களிற்கு சென்று வீதி போக்குவரத்தையும் மின்சாரமும் தடைபடாது பணி புரிந்தவர்கள், போக்குவரத்து பாதிக்கும் நிலையில் வெள்ளம் அதிகூடியளவில் இருந்த வீதிகளில் வெள்ளம் வழிந்தோட வெள்ளத்திலும் குளிரிலும் பணியாற்றியவர்கள். அவர்களது பணிகளை முன்னின்று வழி நடாத்திய தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் முகநூல்கள் வாயிலாக பலரும் அறிந்திருப்பீர்கள். எனவே ‘எனது ஊர் காரைநகர்’ இடர்காலத்தின் போது பணியாற்றிய ஊழியர்களை கெளரவிக்கும் வகையில் சிறப்புச்செய்ய திரு.குருபரன் சுப்பிரமணியம் முன்வைத்திருக்கும் வேண்டுகோளை ஏற்று காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக முன்வருகின்றது.

‘எனது ஊர் காரைநகர்’ சார்பாக தீசன் திரவியநாதன் ரூபா 30,000 வழங்கப்படுகிறது. மேலும் காரைநகர் பிரதேச சபை ஊழியர்களின் இடர்கால சேவையை கருத்தில் கொண்டு சிறப்பிக்க விரும்பினால் காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக உதவிகளை வழங்க முடியும். நன்றி.

குறிப்பு: மீண்டும் கவனிக்க மக்களால் மக்களிற்கு சேவைசெய்ய தெரிவு செய்யப்பட்ட கட்சிகளின் பிரதேச சபை உறுப்பினர்கள் அல்ல, பிரதேச சபையில் அடிப்படை வேதனத்தைடன் பிரதேச சபையில் ஊழியர்களாக பணியாற்றும் தொழிலாளர்களிற்காக மட்டும்.

More From Author

காரைநகர் ஈழத்து சிதம்பரம் மூன்றாவது ஆண்டாக திருவாதிரை திருவெம்பாவை உற்சவ பெருவிழா இன்றி, பாலஸ்தாபனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அபிஷேக ஆராதனைகளுடன் திருவெம்பாவை ஓதலுடன் பூசைகள் நிறைவு பெற்றன.

காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக ‘எனது ஊர் காரைநகர்’ இடர்கால கொடுப்பனவும் உதவிகளும் வழங்கப்பட்டன.2025

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Archive

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Recent Comments

No comments to show.