காரைநகர் ஈழத்து சிதம்பரம் மூன்றாவது ஆண்டாக திருவாதிரை திருவெம்பாவை உற்சவ பெருவிழா இன்றி, பாலஸ்தாபனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அபிஷேக ஆராதனைகளுடன் திருவெம்பாவை ஓதலுடன் பூசைகள் நிறைவு பெற்றன.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் மூன்றாவது ஆண்டாக திருவாதிரை திருவெம்பாவை உற்சவ பெருவிழா இன்றி, பாலஸ்தாபனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அபிஷேக ஆராதனைகளுடன் திருவெம்பாவை ஓதலுடன் பூசைகள் நிறைவு பெற்றன. இன்றைய தினம் விடுமுறை நாள் என்பதால் குறிப்பிடத்தக்களவு அடியவர்கள் வழிபாட்டில் கலந்து கொண்டிருந்தனர்.

கோயில் நிர்வாகத்தினரால் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டிருந்தது. நடைபெற்றுவரும் திருப்பணி வேலைகளும் நேரடி ஒளிபரப்பின் போது பார்க்க முடிந்திருந்தது. அத்துடன் கோயில் முன்றலில் அமைக்கப்பட்டிருக்கும் விருந்தோம்பல் நிலையத்தில் விருந்து பரிமாறப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டுருந்தன.

ஆனாலும்….

ஈழத்து சிதம்பரம் வரலாற்றுடன் 75 ஆண்டுகள் பின்னிப்பிணைந்து அன்னதானப்பணியாற்றி வரும் மாணிக்கவாசகர் மடாலயத்தில் வழிபாட்டில் கலந்து கொண்ட மக்கள் பலரும் மகேஸ்வரபூசையில் கலந்து கொண்டு அன்னதானத்தில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நன்றி; சிந்துஜா வீடியோ.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

33 வருடங்களிற்கு முன்னர் கனடாவில் எனது 20வது வயதில் எழுதிய கதைகள் கனடாவில் அப்போது வெளிவந்த பத்திரிகைகளில் வெளியானவை. 1993ம் ஆண்டு ‘செந்தாமரை’ என்னும் வாரப்பத்திரிகையில் வெளியான எனது ஆக்கம். “ஒரு நிஜம் கதையாகிறது”.

இயற்கை அனர்த்தத்தின் போது சிறப்புற பணியாற்றிய காரைநகர் பிரதேச சபை ஊழியர்களை கெளரவித்து சிறப்பு செய்ய காரைநகர் அபிவிருத்தி சபை முன்னாள் தலைவர் திரு.குருபரன் சுப்பிரமணியம் அவர்கள் ‘எனது ஊர் காரைநகர்’ இற்கு ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

Leave a Reply