நாள் : Sunday, August 16, 2026
--:--:--
👁️
Awareness

இயற்கை அனர்த்தத்தின் போது சிறப்புற பணியாற்றிய காரைநகர் பிரதேச சபை ஊழியர்களை கெளரவித்து சிறப்பு செய்ய காரைநகர் அபிவிருத்தி சபை முன்னாள் தலைவர் திரு.குருபரன் சுப்பிரமணியம் அவர்கள் ‘எனது ஊர் காரைநகர்’ இற்கு ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

இயற்கை அனர்த்தத்தின் போது சிறப்புற பணியாற்றிய காரைநகர் பிரதேச சபை ஊழியர்களை கெளரவித்து சிறப்பு செய்ய காரைநகர் அபிவிருத்தி சபை முன்னாள் தலைவர் திரு.குருபரன் சுப்பிரமணியம் அவர்கள் ‘எனது ஊர் காரைநகர்’ இற்கு ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

பிரதேச சபை ஊழியர்கள்(*கவனிக்க பிரதேச சபை உறுப்பினர்கள் அல்ல) 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பிரதேச சபையினால் வழங்கப்படும் அடிப்படை வேதனத்தில் பணி புரிபவர்கள், அவர்கள் இயற்கை அனர்த்தங்களின் போது மழையிலும், புயலிலும், வெள்ளத்திலும் பகல் இரவு பாராது பணி புரிந்தவர்கள். தங்களது குடும்பங்களின் தேவைகளின் போது தமக்காகவன்றி ஊரிற்காக பணி புரிந்தவர்கள்.

மரங்கள், பனைகள் முறிந்து விழுந்த போது உடனடியாக அவ்விடங்களிற்கு சென்று வீதி போக்குவரத்தையும் மின்சாரமும் தடைபடாது பணி புரிந்தவர்கள், போக்குவரத்து பாதிக்கும் நிலையில் வெள்ளம் அதிகூடியளவில் இருந்த வீதிகளில் வெள்ளம் வழிந்தோட வெள்ளத்திலும் குளிரிலும் பணியாற்றியவர்கள். அவர்களது பணிகளை முன்னின்று வழி நடாத்திய தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் முகநூல்கள் வாயிலாக பலரும் அறிந்திருப்பீர்கள். எனவே ‘எனது ஊர் காரைநகர்’ இடர்காலத்தின் போது பணியாற்றிய ஊழியர்களை கெளரவிக்கும் வகையில் சிறப்புச்செய்ய திரு.குருபரன் சுப்பிரமணியம் முன்வைத்திருக்கும் வேண்டுகோளை ஏற்று காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக முன்வருகின்றது.

‘எனது ஊர் காரைநகர்’ சார்பாக தீசன் திரவியநாதன் ரூபா 30,000 வழங்கப்படுகிறது. மேலும் காரைநகர் பிரதேச சபை ஊழியர்களின் இடர்கால சேவையை கருத்தில் கொண்டு சிறப்பிக்க விரும்பினால் காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக உதவிகளை வழங்க முடியும். நன்றி.

குறிப்பு: மீண்டும் கவனிக்க மக்களால் மக்களிற்கு சேவைசெய்ய தெரிவு செய்யப்பட்ட கட்சிகளின் பிரதேச சபை உறுப்பினர்கள் அல்ல, பிரதேச சபையில் அடிப்படை வேதனத்தைடன் பிரதேச சபையில் ஊழியர்களாக பணியாற்றும் தொழிலாளர்களிற்காக மட்டும்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் மகோற்சவ தேர்த்திருவிழா 11.08.2026 இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஆடி அமாவாசை 12.08.2026 புதன்கிழமை என்பதும் அன்றைய தினம் வியாவில் தீர்த்தோற்சவம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் மகோற்சவ தேர்த்திருவிழா 11.08.2026 இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஆடி அமாவாசை 12.08.2026...

கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ பகுதியில் சொந்தமாக கோயில் கொண்டு விளங்கும் கனடா கந்தசுவாமி ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா. 10.08.2026 திங்கள்கிழமை. நாளை செவ்வாய்கிழமை ஆடி அமாவாசை தினத்து தீர்த்தோற்சவமாகக் கொண்டு நடைபெறும் ரதோற்சவம்.

கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ பகுதியில் சொந்தமாக கோயில் கொண்டு விளங்கும் கனடா கந்தசுவாமி ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா....

‘காரைநகர் சேவையாளர் கெளரவம் 2026’ – ‘எனது ஊர் காரைநகர்’ karainews.com நடாத்தும் ஐந்தாவது சேவையாளர் கெளரவம் தொடர்பான அறிவித்தல்.

‘காரைநகர் சேவையாளர் கெளரவம் 2026’ ‘எனது ஊர் காரைநகர்’ karainews.com நடாத்தும் ஐந்தாவது சேவையாளர் கெளரவம் தொடர்பான அறிவித்தல்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605