(வாசித்தால் சிந்திக்கலாம்… சிந்தித்தால் ஊர் உருப்படும்…)
ஊர்ப்பற்றும் சிந்தனையும் உள்ளவர்களிற்கு செய்தி சொல்லும் ‘எனது ஊர் காரைநகர்’
‘like’ and ‘comment’ செய்ய பயப்படும் ஊரவர்கள்.

உண்மையை சொல்வதால் ஊரவர்களின் மதிப்பும் மரியாதையையும் ‘Facebook’ மூலமாகத்தான் அறிந்து கொள்ள முடிகிறது. கடவுளும் ‘Facebook’ இற்கும் எனக்கு நிறையவே எனது கடமைகளை கற்றுத்தருகின்றன.
‘ஈழத்து சிதம்பரம்’ கும்பாபிஷேகம் தொடர்பான செய்திகளை வெளியிடவும், திருப்பணி மற்றும் செயற்பாடுகள் தொடர்பாகவும் தற்போதைய படங்கள், வீடியோ என்பவற்றை வெளியிடவும் பலரும் பயந்து கொண்டுள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பயப்படதாத காரைநகர் மக்கள் ஈழத்து சிதம்பரம் தொடர்பான உண்மை நிலமைகளை அதுவும் கும்பாபிஷேகம் தொடர்பான செய்திகளையும் விபரங்களையும் வெளியிட்டாலே யாரோ தமக்கு எதிராக ஏதாவது பொய்கேசுகளை போட்டு வீணாக கோர்ட்டுக்கும் வக்கீலுக்கும் அலைய விட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் உள்ளார்கள்.
கோயிலுக்கு போக பயப்படுகிறார்கள். படம் எடுத்தால் வீணாக பிரச்சனை வருமோ என்று பயப்படுகிறார்கள். ஏதோ நடப்பதை கண்டு கொள்வோம் என்று ஈழத்து சிதம்பரம் ‘சுவிஸ் நாதன்’ கட்டிய முகப்பு வாசல் கோபுரத்திற்கு அப்பால் படம் எடுக்கவும் நடப்பதை சொல்லவும் பயப்படுகிறார்கள்.
ஈழத்து சிதம்பரம் பொதுக்கோயில். ஊர்ப்பணத்திலும் ஊரவர்கள் பக்தியிலும், ஊர் மக்களின் நம்பிக்கையிலும் தான் நூற்றாண்டுகளை கடந்தும் இயங்கி வருகிறது. ஆனாலும் ஆதீனகர்த்தாக்களிற்கு சொந்தமானதாக இருந்தது. ஆனால் இப்போது எவருக்குமே சொந்தமில்லை. ஆதீனகர்த்தாக்களும் இல்லை நிர்வாகமும் இல்லை. ‘இரண்டிற்கும் இடையில் இன்னொன்று’
‘எனது ஊர் காரைநகர்’ இந்த முகநூல் ஊடாக மூன்று நாட்களிற்கு முன்னர் கும்பாபிஷேகம் தொடர்பான தகவலை 6400 மக்கள் ‘click’ செய்து பார்வையிட்டுள்ளார்கள். குறுகிய மணிநேரத்தில் அதிகளவானவர்கள் ‘click’ செய்து பார்வையிட்டுள்ளார்கள் என்று ‘Facebook’ எனக்கு அறியத்தந்துள்ளது. ஆனால் நடைமுறையில் மக்களின் பயத்தில்… வெளிப்படையாக ‘like’ and ‘comment’ இல் என்னவென்று பாருங்கள்.
காரைநகர் மருதடி பிள்ளையார் கோயில் கருங்கற்களிலான இராஜகோபுரம் கட்டி முடித்து 10 கோடிக்கு மேற்பட்டளவில் தனது சொந்த நிதியை செலவு செய்த திரு. சிவசுப்பிரமணியம் இராமநாதன், அதே கோயிலில் கருங்கற்களால் கற்பக்கிரகம் அமைத்து 10 கோடிகளிற்கு மேற்பட்டளவில் சொந்த நிதியை செலவு செய்த திரு.சண்முகம் சிவஞானம் இவர்களுடன் ஒப்பிடும் போது…. 5000 கோடிக்கு மேற்பட்டளவில் சொந்த சொத்து மதிப்புக்கொண்ட பரமேஸ்வரன் தான் நினைத்து போல் மூன்றாண்டுகள் கோயிலை பூட்டி வைத்து 7க்கு மேற்பட்ட கோர்ட்கேசுகளை கையாண்டு, இரண்டு மணியகாரர்களில் ஒருவரை அப்புறப்படுத்தி, மொத்த கோயில் நிதியை பூச்சியமாக்கி, தான் நினைத்தது போல்… ஆதீனகர்தாக்களும் அல்லாமல், நிர்வாக சபையும் அல்லாமல் தன்னிச்சையான அமைப்பு ஊடாக தான் நினைத்ததை நிறைவேற்றும் எங்கள் ஊர் மகேஸ்வரன் 20 கோடிகளிற்கு மேல் செலவு செய்வார் என்பதை சொன்னால் நம்பவா போகிறீர்கள்.
5000 கோடிகளிற்கு மேற்பட்ட சொத்தை எவனால் தான் கொண்டு போக முடியும்…? ‘ காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே..’ என்று சொன்ன பட்டினத்தாரின் வாக்கினை மெய்ப்பித்துச் சென்ற எங்களூர் அமரர் அமைச்சர் தியாகராசா மகேஸ்வரன் அவர்களின் தம்பியாராகிய எங்களூர் சிவனின் பெயர் கொண்ட பரமேஸ்வரன் அவர்களிற்கு புரியாமலா போய்விடும்.!
எல்லாம் வல்ல ஈழத்து சிதம்பரம் சொந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரப்பெருமான் எதை எப்பபிடி எவர்மூலம் செய்விக்க வேண்டுமோ அதை அப்படி அந்தந்த நேரத்தில் செய்விப்பான்.
காரைநகரில் அடக்குமுறையோ அல்லது பயங்கரவாதமோ அல்லது மனிதனுக்கு மனிதன் பயந்து வாழவேண்டிய சந்தர்ப்பம் ஒருபோதும் ஏற்பட்டதில்லை. எல்லாம் எங்களூர் சிவன் பார்த்துக்கொள்வான்.
அன்பு தான் சிவன்.



