காரைநகர் ஈழத்து சிதம்பரம் திருத்தொண்டர் சபையாக 1989ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கனடா காரை கலாசார மன்றம் மற்றும் ஈழத்து சிதம்பரம் பற்றியது…. (தயவு செய்து முழுமையாக வாசிக்கவும்…!)

காரைநகர் ஈழத்து சிதம்பரம் திருத்தொண்டர் சபையாக 1989ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கனடா காரை கலாசார மன்றம் மற்றும் ஈழத்து சிதம்பரம் பற்றியது…. (தயவு செய்து முழுமையாக வாசிக்கவும்…!)

1980களில் கனடாவுக்கு இடம்பெயர்ந்து வந்த காரைநகர் மக்களில் பலரிற்கும் இருந்த கனவுகளில் ஒன்றாக காரைநகர் ஈழத்து சிதம்பரத்தின் திருப்பணிகள் முதன்மையாக இருந்துள்ளது.

அன்றைய காலத்தில் ஈழத்து சிதம்பரத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த இரட்டை இராஜகோபுரத்திற்கான கும்பாபிஷேகத்தை விரைந்து செயற்படுத்துவதாக இருந்தது. அதனால் கனடாவில் 1980களில் காலடி பதித்த காரை மக்கள் தனித்தனியாகவும் குழுவாகவும் இணைந்து மக்களிடம் நிதி பெற்று ஈழத்து சிதம்பரத்தின் திருப்பணிகளிற்காக அனுப்பி வைத்தனர். மேற்கொண்டு அதுவே ஒரு அமைப்பை ஆரம்பிக்க அத்திவாரமாக அமைந்தது.

கனடா Toronto மாநகரில் Bloor & Lansdown சந்தியருகில் அமைந்திருந்த Tamil Co-op அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த சைவசித்தாந்த செம்மல் விஸ்வலிங்கம், வைத்தியர் ஞா.விஜயரட்ணம் மற்றும் Dr.சிவகுமார் இவர்களுடன் ஶ்ரீஸ்கந்தராசா வாத்தியார் என பலர் இணைந்து கொண்டு 1989ம் ஆண்டு ‘ஈழத்து சிதம்பரம் திருத்தொண்டர் சபை’ என்ற பெயரில் ஆரம்பித்து, அதனை கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தில் Toronto நகரில் இலாபநோக்கற்ற அமைப்பாக பதிவு செய்தனர்.

தைப்பொங்கல், தமிழ் சித்திரை வருடப்பிறப்பு போன்ற சிறப்பு நாட்களில் ஒன்றுகூடி ஈழத்து சிதம்பரம் பற்றிய செய்திகளை பரிமாறி, தேவைகளை அறிந்து கொண்டு அதற்கென நிதி சேகரித்து முழுமையாக ஈழத்து சிதம்பரத்திற்கென சேவையாற்றி வந்தார்கள்.

நாளடைவில் 1990களில் ஆயிரக்கணக்கான காரை மக்கள் கனடாவிற்கு இடம்பெயர்ந்து வந்த நிலையில், ஈழத்து சிதம்பரம் திருத்தொண்டர் சபையாக இயங்கி வந்த அதே அமைப்பை பெயர்மாற்றி ‘கனடா காரை கலாசார மன்றம்’ என பதிவு செய்தனர்.

அதற்குரியவகையில் அந்த அமைப்பை செயற்படுத்த உள்ளக ரீதியாக ஒரு யாப்பினையும் தயாரித்து அதன்படி ஒழுகி வந்தனர். அதன் பிரகாரம் இன்றுவரை கனடா காரை கலாசார மன்றத்தின் யாப்பின் பிரகாரமும் இந்த அமைப்பு தோற்றம் பெற்றதன் கொள்கைகளின் அடிப்படையிலும் ஈழத்து சிதம்பரத்தின் செயற்பாடுகளிற்கு உதவி வருவது என்பதுவும் யாப்பில் இன்னமும் இடம்பெற்றுவருகிறது.

ஆனால்… கால மாற்றம் காரணமாக கனடா காரை கலாசார மன்றம் பலவேறு படிகளில் வளர்ந்து வந்துள்ளதும், 2015 வரை யாப்பின் பிரகாரம் ஈழத்து சிதம்பரத்திற்கான திருப்பணி மற்றும் நித்திய பூசைகளிற்கான உதவிகளை முடிந்தளவு செயற்படுத்தியும் வந்துள்ளது.

இறுதியாக 2015ம் ஆண்டு கனடா காரை கலாசார மன்றத்தின் திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையில் திரு.தீசன் திரவியநாதன் செயலாளராகவும், திரு.திருநாவுக்கரசு ராஜா அவர்களது நிர்வாக சபையினரால் 5 இலட்சம் ரூபாய்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் பெயரில் வைப்பில் இடப்பட்டு அதன் மூலம் பெறப்படும் வட்டிப்பணம் ஈழத்து சிதம்பரத்திற்கு காரைநகர் அபிவிருத்தி சபை மூலம் செல்வதற்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன.

ஆனாலும் 2022 வரை நித்திய பூசைக்காகவும் ஆடி அம்மன் திருவிழாவிற்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த நிரந்தர வைப்பின் வட்டிப்பணம், 2023ம் ஆண்டு முதல் கோயில் நிர்வாகத்தினரால் பெறமுடியாது எனவும், நிரந்தர வைப்பில் காரைநகர் அபிவிருத்தி சபை பெயரில் உள்ள 5 இலட்சம் வைப்பு உட்பட அனைத்தையும் கோயிலுக்கு வழங்குமாறும் கேட்கப்பட்டதுடன் அந்த வருட வட்டிப்பணத்தையும் பெற்றுக்கொள்ள மறுத்ததாக அப்போதைய காரைநகர் அபிவிருத்தி சபை தலைவர் திரு.ஹம்சன் விஸ்வலிங்கம் அவர்கள் 2023ம் ஆண்டு கனடா காரை கலாசார மன்றத்திற்கு தெரிவித்திருந்தார்.

ஆகவே கடந்த மூன்றாண்டுகளாக கனடா காரை கலாசார மன்றத்தினால் 2015ம் ஆண்டு ஈழத்து சிதம்பரத்திற்கென வைப்பில் இடப்பட்ட 5 இலட்சமும், 2023 முதல் இன்று வரையான அதன் வட்டிப்பணமும் காரைநகர் அபிவிருத்தி சபையினரிடம் உள்ளது.

கனடா காரை கலாசார மன்றத்தின் 2015ம் ஆண்டு நிரவாகம் காரைநகர் பாடசாலைகளிற்கு ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்களை வைப்பில் இட்டதுடன் ஈழத்து சித்பரத்திற்காகவும் 5 இலட்சம் ரூபாய்களை நிரந்தர வைப்பில் இட்டதுவும் அதற்கென நிதியுதவி வழங்கியவர்கள் பெயர், விபரங்கள் தனியாகவும் அதே ஆண்டு வெளியிடப்பட்ட திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையிலான நிர்வாகத்தின் 10.05.2015 வரவு செலவு அறிக்கையில் நிரந்தர வைப்பு வங்கி ஆவணத்துடன் சமர்ப்பிக்கப்பட்டது. இன்றும் அந்த நிரந்தர வைப்பு காரைநகர் அபிவிருத்தி சபையின் பெயரில் பத்திரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அது ஒருபுறம் இருக்க….

05.07.2026 காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில், ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகத்திற்கு திருநாள் குறிக்கப்பட்டுள்ள நிலையில் கனடா வாழ் காரைநகர் மக்கள் தமது வாழ்நாள் சேவைகளை ஈழத்து சிதம்பரத்திற்காக வளங்குவதற்கு பின்னிற்காதீர்கள். கடந்த மூன்றாண்டுகளாக நேரடியாக திருப்பணிகளையும் கும்பாபிஷேகத்தையும் நடைமுறைப்படுத்தும் அமைப்பிடம் தொடர்பு கொண்டு நேரடியாக அவர்களால் வளங்கப்பட்ட வங்கி கணக்கிற்கு அனுப்பி வையுங்கள்.

கனடா காரை கலாசார மன்றம் கடந்த இரண்டு ஆண்டுகளிற்கு மேலாக தனிப்பட்ட ஒருவரினால் முடக்கப்பட்டுள்ளது. அதனை வைத்து கனடாவில் பிழைப்பு நடாத்த முயன்ற சிலர் 28.04.2024 அன்று முன்னைய நிர்வாகத்திடம் இருந்து 28 நபர்கள் கொண்ட ஒரு பொதுக்கூட்டத்தில் பொதுக்கூட்டத்திற்கு சமூகமளிக்காத ஒருவரின் தலமையை ஏற்று கனடா காரை கலாசார மன்றத்தை கையளித்தனர். அன்றைய தினம் தீசன் திரவியநாதன் ஆகிய நான் கனடாவில் இருந்தும் அநியாயத்திற்கு துணைபோகாத வகையில் அன்றைய பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதையும் இதனை விளங்கிக்கொள்ளும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

28.04.2024 அன்று திரு. முத்து பொன்னம்பலம் தலையில் நிர்வாகத்தை கையளித்தவர்களும் அந்த நிர்வாகத்தில் பங்கெடுத்தவர்களாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கனடா காரை கலாசார மன்றத்தை ஒரு ‘இன்ஞ்’ அளவேனும் முன்னேற்றவில்லை என்பதும் இன்றுவரை அதாவது ஒரு நிர்வாகம் இரண்டு ஆண்டுகள் ஆயுள்காலம் கொண்டுள்ளதாக இருந்தும், இரண்டு ஆண்டுகள் முற்றும் முழுதாக நிறைவுற்ற நிலையிலும் மெளனம் காத்து வருகிறார்கள் அல்லது அதுவே அவர்களது விருப்பமாகவும் இருக்கலாம்.

சரி அதுவும் ஒருபுறம் இருக்கட்டும்….

ஆனாலும் கனடா வாழ் காரைநகர் மக்களே…. கடந்த காலத்தில் கனடா காரை கலாசார மன்றத்தை நடாத்திய நிர்வாக சபை உறுப்பினர்களே, கடந்த காலத்தில் கனடாவில் ‘ஈழத்து சிதம்பரம் திருத்தொண்டர் சபை’ யாக ஆரம்பித்து கனடா காரை கலாசார மன்றமாக பரிணமித்து இன்றுவரை அதன் யாப்பிலே ஈழத்து சிதம்பரத்தின் திருப்பணிகளிற்காக நித்தியபூசைகளிற்காக அதன் வளர்ச்சிக்காக உதவுவதை கொள்கையாக கொண்டுள்ள இந்த மன்றமும் அதன் கடந்த கால அங்கத்தவர்களும் வரலாற்று சிறப்பு மிக்க எமது கோயிலின் 2026.07.05 நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்திற்கு தங்களான பங்களிப்பை வழங்காது இருந்து வரலாற்று தவறை இழைத்து விடாதீர்கள்.

2015ம் ஆண்டு வரை ஈழத்து சிதம்பரத்திற்காக கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக சேர்த்த நிதியும் மன்றத்தின் நிர்வாகத்தினரால் மன்றத்தின் இலாபங்கள் ஊடாக ஒதுக்கப்பட்ட நிதியும் எள்ளளவேனும் சந்தேகத்திற்கு இடமின்றி சென்றுள்ளது. ஆனாலும் 2023ம் ஆண்டிற்கு பின்னர் ஈழத்து சிதம்பரத்தில் திருப்பணிகளை மற்றும் நிர்வாகத்தை செயற்படுத்தும் அமைப்பானது நேரடியாக தனிப்பட்ட ஒவ்வொருவரும் நேரடியாக அவர்களால் வளங்கப்பட்ட வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார்கள். அதன் பிரகாரம் திருவிழாக்கள், பூசை உபயங்கள், திருப்பணிகள் எவையானாலும் வேறு அமைபுக்கள் ஊடாகவோ அல்லது குழுவினரிடமோ வழங்க வேண்டாம் எனவும் கேட்டுள்ளதுடன், அத்துடன் காரைநகர் அபிவிருத்தி சபையினரிடம் நிரந்தர வைப்பில் உள்ள ஐந்து இலட்சத்தில் இருந்து பெறப்படும் வங்கி வருடாந்த வட்டிப்பணத்தையும் நிராகரித்து வருகின்றது தற்போதைய கோயில் நிர்வாக அமைப்பு.

கடந்த காலங்களில் கோயிலுக்காக அதுவும் ஈழத்து சிதம்பரத்தானுக்கு வளங்கிய ஒவ்வொரு சதமும் அப்பழுக்கில்லாமல் நேரடியாக வளங்கியவர்கள் பெயரிலேயே சென்றுள்ள போதிலும், திருவிழாக்கள் குறுச்சி ரீதியாக அப்பகுதி பெரியவர்களால் நடாத்தப்பட்டு வந்தாலும் அவை அனைத்தும் தடை செய்யப்பட்டு, குறிச்சி ரீதியான திருவிழாக்கள் இல்லை எனவும், நேரடியாக கோயில் நிர்வாகமே அவற்றை இனிவரும் காலங்களில் செயற்படுத்தும் எனவும, திருவிழாக்கள், திருப்பணிகள் எதுவானாலும் நேரடியாக நிர்வாகத்தினரால் வளங்கப்பட்டுள்ள வங்கி கணக்கிற்கு அனுப்புமாறும் தொடர்ந்து கடந்த மூன்றாண்டுகளாக தற்போதைய அமைப்பினால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஊர் குறிச்சி திருவிழா குழுக்கள் கலைக்கப்பட்டு அவற்றில் இருந்த நிதிகளும் தற்போதைய நிர்வாக அமைப்பினால் பெறப்பட்டுள்ளது.

ஆகவே தயவு செய்து நேரடியாக கோயில் நிர்வாகத்தினை தொடர்பு கொண்டு அனுப்பவும் அல்லது அவர்களால் வளங்கப்பட்டுள்ள வங்கி கணக்கிற்கு அனுப்பவும்.

$10 டொலர் அனுப்புவதற்கு அனுப்புகின்ற கூலியாக பணமாற்று நிலையத்திற்கு $10 டொலர் கொடுக்க வேண்டிய தேவைகள் இப்போது இல்லை. காரணம் வளர்ச்சியடைந்துள்ள பணமாற்று சேவைகள் ஊடாக இலங்கையில் உள்ள சட்ட மாற்றங்களிற்கு அமையவும் App ஊடாக உடனடியாக தற்போது குறைந்த பட்சம் $2 டொலர் கூட அனுப்ப முடியும். உங்களது smart phone ஊடாக அதனை செய்ய முடியும். அந்த App இற்கு நான் விளம்பரம் செய்யவில்லை, ஆனால் கனடா வாழ் காரை மக்கள் உங்களது சிறு தொகையானாலும் 2026 இல் நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகளிற்காக பயன்படவேண்டுமானால் ‘குத்துவது யார் என்று பாராதீர்கள்… யார் குத்தினாலும் அரிசியாகட்டும்..’ என்று சிந்தியுங்கள்.

எனது பங்களிப்பு எப்போதும் உண்டு. எக்காலத்திலும் ஈழத்து சிதம்பரத்திற்கு மட்டுமல்ல எந்த கோயிலுக்கோ அல்லது எந்த தர்ம காரியங்களிற்கோ செல்லுகின்ற நிதிக்கு நான் தடையாக இருந்தது இல்லை. நான் யாருக்கும் தடையாக இருந்ததும் இல்லை.

செய்திகளை மட்டுமே கூறியிருக்கின்றேன்.

வரலாற்று பிழையை விடாதீர்கள். 05.07.2026 அன்று ஈழத்து சிதம்பரத்தில் நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தில் உங்களால் இயன்ற நிதி உதவியினை வளங்கி உங்களது சார்பாக கும்பத்தில் இருந்து விளப்போகின்ற ஒரு துளி புனித நீரிலாவது உங்கள் பெயர் இருக்கட்டும்.

அன்பே சிவம்.

கீழே கோயில் நிர்வாகத்தினரின் வங்கி கணக்கு விபரம்.

அத்துடன் தனிப்பட்ட வகையில் உதவும் வகையில் சிறுதொகையானாலும் கட்டணமின்றி அதே நேரத்தில் வங்கி மூலம் நிதிப்பரிமாற்றம் செய்ய வசதியாக App விபரமும் உள்ளது. சிறிய தொகையாக இருந்தாலும் கட்டணமின்றி அனுப்புவதற்காக மட்டுமே இந்த App விபரம் தரப்பட்டுள்ளது. அல்லது நீங்கள் வழமை போன்று பணமாற்று சேவை நிலையங்கள் ஊடாகவும் அனுப்பவும்.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

காரைநகர் வலந்தலை நடுத்தெருவில் கல்வியால் புகழ் பெற்று விளங்கிய குடும்பங்களில் சின்னத்தம்பி ஆறுமுகநாதன் (S.A. நாதன்) குடும்பமும் ஒன்று.

Leave a Reply