கனடா வாழ் காரைநகர் மக்களும், கனடா காரை கலாசார மன்றத்தின் செயற்பாடுகளில் அக்கறை உள்ளவர்களும் அறிந்து கொள்ளப்பட வேண்டிய இன்றைய உண்மைகள்.(08.07.2024) திங்கள்கிழமை.
- 28.04.2024 கடந்த இரண்டு மாதங்களிற்கு முன்னர் நடைபெற்ற கனடா காரை கலாசார மன்றத்தின் பொதுக்கூட்டத்தின் போது முத்து பொன்னம்பலம் எனப்படும் நபர் அநாமதேயமாக தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
- 10 ஆண்டுகளிற்கு மேலாக கனடா வாழ் காரைநகர் மக்கள் எவராலும் கண்ணூடாக கண்டு கொள்ளப்படாமலும் எவ்வித காரைநகர் மக்களின் பொது நிகழ்வுகளிலும், சொந்த உறவினர்கள் மற்றும் சொந்த தகப்பனின் இறுதிக்கிரியைகளிலும் கலந்து கொள்ள முடியாதளவில் கனடாவில் தலைமறைவு வாழ்க்கை வாழும் முத்து பொன்னம்பலம் மன்றத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
- கனடா காரை கலாசார மன்றத்திற்கு எதிராக கண்காணாத இடத்தில் இருந்து கடந்த சில ஆண்டுகளிற்கு முன்னர் இதே முத்து பொன்னம்பலம் எனப்படும் நபர் தொடர்ந்த வழக்கு காரணமாக மன்றத்திற்கு 58,000 டொலர்கள் வரை வக்கீலுக்கான செலவாக கொடுக்க வேண்டிய நிலமை ஏற்பட்டது. அதன் காரணமாக அநாமதேயமாக கடந்த கால மன்றத்தின் யாப்பு விதிகள், மன்றத்தின் இறையாண்மை, ஊர் சமூக சமய கலாச்சாரம் என விழுமியங்கள் எவற்றையும் கவனத்தில் கொள்ளாது 58,000 டொலர்களை மன்றம் எவ்வாறு வக்கீலுக்கு கொடுக்கப் போகிறது என்கிற ஒரே நோக்கத்திற்காக வழக்கு போட்டவரையே தலைவராக்க வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் இதனை ஏற்றுக்கொண்டார்கள்.
- ஆனாலும் இற்றைக்கு இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் முத்து பொன்னம்பலம் எனப்படும் நபர் தலைமையில் கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகம் இயங்கவில்லை என்பதும், மன்றத்தின் நிர்வாகத்தையோ அன்றி மன்றத்தின் கணக்கு அறிக்கைகளையோ அன்றி வங்கி கணக்கையோ பெற்றுக்கொள்ளவில்லை என்பதுடன் City of Toronto வில் புதிய நிர்வாக சபை பதிவு செய்யப்படவில்லை என்பதும் முற்றும் முழுதான உண்மையாகும்.
- முத்து பொன்னம்பலம் எனப்படும் நபர் தீசன் திரவியநாதன் ஆகிய என்மீது 2016ம் ஆண்டு முதல் தொடர்ந்த வழக்குகளின் போது தீசன் திரவியநாதன் ஆகிய என்னால் எதிராளியாக என்னால் கோர்ட்டில் வழங்கப்பட்ட சில வாக்குமூலங்களிற்கு ஆதாரங்களை இப்போது தீசன் திரவியநாதன் ஆகிய நான் சமர்ப்பித்தால் மட்டுமே தன்னால் மன்றத்தின் தலைமைப்பதவியை ஏற்று மன்றத்தை நிர்வகிக்க முடியும என சமரசம் பேசி வருகிறார்.
- முத்து பொன்னம்பலம் எனப்படும் நபர் தீசன் திரவியநாதன் ஆகிய என்மீது தொடர்ந்த வழக்குகள் பலவும் கனடாவில் நான் இல்லாத காலங்களில் நடைபெற்றதாலும், எனக்கென வக்கீல்கள் எவருமின்றி எனக்காக நானே வாதாடி வந்த காரணத்தாலும், பல தடவைகள் கோர்ட்டின் நேர காலத்திற்கு ஏற்ப என்னால் கோர்ட்டிற்கு சமூகமளிக்கவோ அல்லது கோர்ட்டால் கேட்கப்பட்ட சில ஆதாரங்களை குறிப்பிட்ட காலப்பகுதில் சமர்ப்பிக்க முடியாத நிலமையும், எனது வாக்குமூலங்கள் சிலவற்றிற்கு என்னால் ஆதாரங்கள் சமர்ப்பிக்க முடியாத நிலமையும் ஏற்பட்டது.
அதன் காரணமாக அனைத்து எனது வாக்கு மூலங்களும் நீக்கப்பட்டன.
- தீசன் திரவியநாதன் ஆகிய நான் கோர்ட்டிற்கு உரிய நேரத்தில் சமூகமளிக்க தவறியதுடன் தன்னால் தொடரப்பட்ட வழக்கிற்கு செலவிட்ட நேரங்களிற்கு சம்பளமாக 16,000 டொலர்களிற்கு மேற்பட்ட நிதியினை முத்து பொன்னம்பம் கோரியிருந்தார்.
- இந்த நிலையில் எனது வியாக்கியானங்களையும் கேட்டுக்கொண்ட கோர்ட் குறைந்த பட்சம் 3500 டொலர்கள் வழங்க வேண்டும் என்கிற தீர்ப்பை கடந்த வருடம் நவம்பர் மாதம் வழங்கியிருந்தது.
- இந்த நிலையில் கோர்ட்டிற்கு எனது நிதி நிலமைகளை தெரிவித்து, மாதாந்தம் எனது சொந்த செலவுகள் மற்றும் இதர அத்தியாவசிய செலவுகள் போக மாதாந்தம் எஞ்சிய தொகையினை முத்து பொன்னம்பலத்திற்கு வழங்குவதாகவும் தெரிவித்தேன்.
- கோர்ட்டின் தீர்ப்பை மதித்து கடந்த சில மாதங்களில் நான்கு மாதங்களில் மாதாந்தம் என்னால் அத்தியாவசிய செலவுகள் போக வழங்க கூடியதாக இருந்த $ 10 டொலர்களை நான்கு மாதங்கள் வழங்கியும் வருகிறேன்.
- இந்த நிலையில் கோர்டில் இருந்து அகற்றப்பட்ட எதிராளியான எனது வாக்கு மூலங்கள் அற்ற நிலையில் அவற்றிற்கான ஆதாரங்களை முத்து பொன்னம்பலம் என்னிடம் கேட்டு வருவதுடன், என்னால் அதற்கான ஆதாரங்களை வழங்கினால் மட்டுமே தான் மன்றத்தின் தலைவர் பதவியை ஏற்று நிர்வாகம் செய்வேன் என முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சு போட்டுள்ளார்.
- முத்து பொன்னம்பலம் கேட்கும் எனது வாக்கு மூலங்களிற்கான ஆதாரங்கள் எதுவும் என்னால் வழங்க முடியாது அல்லது அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இல்லை. உதாரணமாக எனது வாக்கு மூலம் ஒன்று: முத்து பொன்னம்பலம் எனப்படும் நபரை 1980 களில் அவரது பெற்றோர் கலாச்சார மற்றும் சமய சமூக சின்னமாக விளங்கும் தாலிக்கொடியை விற்று படிப்பித்தார்கள் என்றும், ஆனால் 2005 ம் ஆண்டுக்கு பின்னர் கனடா வந்த முத்து பொன்னம்பலம் 2015ம் ஆண்டுக்கு பின்னர் தனது சொந்த பெற்றோரிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் என்றும் முத்து பொன்னம்பலத்தின் தகப்பனார் கனடா வந்து அரச உதவிகளை பெற்று வந்த போதிலும் காரைநகர் பாடசாலைகளிற்காக மன்றத்தால் வழங்கப்பட்ட ஒருகோடி இருபது இலட்சம் ரூபாய்களில் 50,000 ரூபாயினை தனது ஆசிரியப்பணி மூலம் இலங்கையில் கிடைத்து வந்த பென்சன் பணத்தின் மூலம் திரு. S.K. சதாசிவம் ஆசிரியரை தொடர்பு கொண்டு வழங்கியிருந்தார் என்பதை கண்டறிந்து, கனடிய அரசிற்கு தனது தகப்பனார் இலங்கையில் பென்சன் எடுப்பவர் என்றும் அதற்கான ஆதாரமாக கனடா காரை கலாசார மன்றத்தின் ஆதாரங்களை சமர்ப்பித்து சொந்த தகப்பனாரிடம் இருந்து மாதாந்தம் $50 டொலர்கள் பெற்று வந்தார் என்றும் தெரிவித்திருந்தேன்.
- எனது வாக்கு மூலத்தின் மற்றுமொரு பகுதியில் முத்து பொன்னம்பலம் எனப்படும் இந்த நபரின் இரண்டு உடன் பிறந்த தம்பிகள் இருவர் மரணித்துள்ளார்கள் என்றும் தெரிவித்திருந்தேன். ஆனால் கோர்ட்டில் தனது தம்பிகள் இருவரும் மரணிக்கவில்லை எனவும், அதற்கான மரண சான்றிதழ் இலங்கை அரசால் வழங்கப்படவில்லை எனவும் அவர்களுடைய உடலை எவரும் காணவில்லை எனவும், தனது தம்பிகள் இறந்து விட்டதாக நான் கூறுவது பொய் என்றும் கோர்ட்டில் தெரிவித்தார். புலிகள் அவர்கள் இறந்துவிட்டதாக கூறுவதும், அதன் மூலம் தனது பெற்றோர்கள் மாவீரர்களின் பெற்றோர்களிற்கு வழங்கிய கெளரவத்தை ஏற்றுக்கொண்டது தப்பு எனவும் வாதிட்டார்.
- தனது தம்பிகள் இறந்து விட்டதாக என்னிடம் ஆதாரம் கேட்டுள்ளார் முத்து பொன்னம்பலம். அத்துடன் தனது பெற்றோர் தாலிக்கொடியை விற்று தான் தன்னை படிப்பித்தார்கள் என்றும் நான் கோர்ட்டில் கூறியதாவது எனக்கு எப்படி தெரியும் என்றும் அதை எனக்கு கூறியது யார் என்றும் நான் கூற வேண்டும் எனவும் அதற்கான ஆதாரத்தை நான் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
- கோர்ட்டில் எதிராளியான எனது வாக்கு மூலங்கள் யாவும் அகற்றப்பட்ட நிலையில் இன்னமும் அதற்கான ஆதாரங்களை முத்து பொன்னம்பலம் கேட்பதற்கான நோக்கம் அவர்கள் மீதும் வழக்கு தொடர்வதற்காகவே என்பது வெளிப்படையான உண்மை.
- முத்து பொன்னம்பலம் என்மீது தொடர்ந்த தனது மானம் போய்விட்டதான வழக்கு ஒரு சிவில் வழக்கு என்பதுடன், மேற்படி என்னால் குறிப்பிட்டது போன்று பல சம்பவங்கள் அல்லது முடிந்த முடிவாக சமூகத்தாலும், பெற்றோராலும் உறவினர்களாலும் கருதப்படும் அல்லது நம்பப்படும் செயற்பாடுகள் பலவற்றிற்கும் சிவில் வழக்கில் ஆதாரங்கள் திரட்ட முடியாது என்பதும் கோர்ட்டும் முத்து பொன்னம்பலமும் நன்கு அறிவார்கள்.
- கனடா காரை கலாசார மன்றத்தின் எதிர்கால வளர்ரச்சியும் தற்போதைய நிலவரங்கள் கருதி பல வகையிலும் முத்து பொன்னம்பலம் எனப்படும் நபருடன் நான் உடன்பட்டு செல்ல விரும்பினாலும் முத்து பொன்னம்பலம் கோரும் மேற்படி குறிப்பிடப்பட்ட பலவற்றிற்கு ஆதாரங்கள் இல்லை என்பதே உண்மை.
அவ்வாறு எனில் என்னால் கோர்ட்டில் சொல்லப்பட்ட விடயங்களும், எனது இணையத்தளத்தில் வெளியானவைகளும் முற்றிலும் பொய் என்பதையும் பொழுது போக்கிற்காக என்னால் ஆதாரமின்றி எழுதப்பட்டதாகவும் எழுதி கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறும் கேட்டுள்ளார் முத்து பொன்னம்பலம்.
- கனடா காரை கலாசார மன்றத்தின் தற்போதைய நிலவரம் கருதியும், எனது இதுவரை கால எழுத்தும் சமூகப்பணியும் maximum எமது ஊரிற்கும் மன்றத்திற்கும் காலம் கருதி ஆற்றியுள்ள நிலையில் இனிமேலும் இதுபோன்றவர்களினால் மன்றத்திற்கோ, மண்ணிற்கோ, மக்களிற்கோ எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை என்று தெரிந்தும் முத்து பொன்னம்பலம் கேட்டதற்கு இணங்க ‘ நானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய், ஆனால் வினையேன் அழுதால் உன்னைப்பெறலாமே..’ என எழுதிக்கொடுக்கவும் முடிவு செய்துள்ளேன்.
இதுவரை நீங்கள் வாசித்து வந்துள்ளீர்கள் என்றால் நிச்சயம் நீங்கள் சிந்தனை உள்ளவர் தான். நன்றி!
– தீசன் திரவியதாதன்
08.04.2024




