காரைநகரில் பட்டப்பகலில் பசு மாடுகள் களவாடப்படுகின்றன.

காரைநகரில் பட்டப்பகலில் பசு மாடுகள் களவாடப்படுகின்றன. திருடர்கள் கையும் களவுமாகவும் பிடிக்கப்படுகிறார்கள். ஆனாலும் உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு உரியவர்களோ அன்றி பொது அமைப்புக்களோ முன்வருவதில்லை. காரணம் தமக்கேன் வீண்வம்பு என்பதுவே. ஆனால் முகநூல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் உண்மைக்காக குரல் கொடுப்போம் உயிர் கொடுப்போம் என்றும் பொதுப்பணிகளில் ‘கதிரை’ களிற்காக போட்டியும் கோர்ரட்டில கேசுகளிற்காகவும் முன்னிற்கிறார்கள்.

காரைநகரில் மாடுகள், ஆடுகள் களவு போகின்றன என்றால் எல்லாம் அந்தந்த பகுதியை சேர்ந்தவர்களால் மட்டுமே களவாடப்பட்டு இறைச்சிக்காக உடனடியாக ஒரு சில மணித்தியாலங்களில் விற்கப்பட்டு வெட்டப்படுவதுடன் ஊரில் எல்லோரிற்கும் யார் என்பதும் தெரிந்த விடயம்.

இதில ‘பூனைக்கு மணி கட்டுவது யார்’ என்பது தான் பிரச்சனையே ஒழிய மாட்டு கள்ளனையும் சைக்கிள் கள்ளனையும், வீடுகளிற்குள் புகுந்து ஆள் இல்லாத வேளைகளை அறிந்து இறங்குபவர்கள் யார் என்பதும் யாவரும் அறிந்ததே.

வெளிநாட்டில இருந்து தான் உங்கள் வீட்டு பிரச்சனைக்கும் தீர்வு காண வரவேண்டுமென நினைத்தால் ஊரில் வாழ்பவர்கள் கையகலாதவர்களாகவே கருதப்படலாம்.

பட்டப்பகலில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மாடு ஒன்று குழைகளால் மறைக்கப்பட்டு கொண்டு சென்றவேளை கையும் களவுமாக பிடிக்கப்பட்டது.

Related Notice

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

கனடா வாழ் காரைநகர் மக்களும், கனடா காரை கலாசார மன்றத்தின் செயற்பாடுகளில் அக்கறை உள்ளவர்களும் அறிந்து கொள்ளப்பட வேண்டிய இன்றைய உண்மைகள்.| 08.07.2024, திங்கள்கிழமை.

18.07.2024 இன்று வரை நிர்வாகம் அற்ற நிலையில் உள்ள கனடா காரை கலாசார மன்றமும் அதன் வழக்குகள் பற்றிய இன்றைய நிலமைகளும்…!

Leave a Reply